Posts

Showing posts from 2025

அரியலூர் மாவட்டத்தில் பௌத்தம்

Image
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் பௌத்த சமயச் சான்றுகள் காணப்படுகின்றன. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், முத்துசேர்வைமடம், ராயம்புரம், விக்ரமங்கலம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் புத்தர் சிலைகள் உள்ளன. இவற்றில் சில சிலைகள் அருங்காட்சியகங்களில் உள்ளன. கங்கைகொண்ட சோழபுரம், இராசேந்திரசோழன் அகழ்வைப்பகத்தில் அரியலூரையும், கீழக்கொளத்தூரையும் சேர்ந்த புத்தர் சிலைகள் உள்ளன. அரியலூர் புத்தர் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், நேர்த்தியான வரிசையில் அமைந்த சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. இடது தோளிலிருந்து காணப்படுகின்ற மேலாடையானது உடலை அணைத்தவாறு கால் வரை உள்ளது. பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்கள் காணப்படுகின்றன. சிலையின் பின்புறத்தில் இரு பக்கத் தூண்க...

புதுக்கோட்டை மாவட்டத்தில் பௌத்தம்

Image
2025 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.  ******************* சோழ நாட்டில் பௌத்தம் இருந்ததற்கான சான்றுகளாக புத்தர் சிலைகள், பூம்புகாரிலும், நாகப்பட்டினத்திலும் இருந்த புத்த விகாரங்கள், திருவிளந்துறையில் புத்தர் கோயில் இருந்ததைக் கூறுகின்ற கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலிலுள்ள கல்வெட்டு, பெருஞ்சேரியிலும் புத்தமங்கலத்திலும் உள்ள புத்தர் கோயில்கள், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் உள்ள புத்தரின் சிற்பங்கள், ஆங்காங்கு தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்ற புத்தர் சிலைகள், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் ஆகியவை காணப்படுகின்றன. சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்விற்காக மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைக் கொண்ட சோழ நாட்டில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அருந்தவபுரம், ...