Posts

Showing posts from 2025

எழுச்சித்தமிழர் இலக்கிய விருது

Image
விடுதலை கலை இலக்கியப்பேரவை 2025க்கான எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகளை அறிவித்திருந்தது. இதில் சிறந்த பௌத்த எழுத்திற்கான விருதினைப்  பெற்றேன்.  இளவந்திகைத் திருவிழாவாகச் சிறப்பாக நடைபெற்ற, விருதுகள் வழங்கும் விழா 21 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை, பிற்பகல் 3.00 மணியளவில், சென்னை, தியாகராய நகர், சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.  நண்பர் முனைவர் மாதவனுடன் திரு,  திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை இவ்விருதிற்காக என்னைத் தேர்ந்தெடுத்த பேரவையின் மாநிலச் செயலாளர் திரு யாழன் ஆதி அவர்கள் உள்ளிட்ட தேர்வுக்குழுவினருக்கும், எழுச்சித்தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.  இவ்விழாவில் விருதுகள் பெற்ற சக ஆளுமைகளுக்கு என் வாழ்த்துகள். பல துறைகளைச் சார்ந்த பெருமக்களையும், எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.  நிகழ்விற்கு உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி, நண்பர் முனைவர் சு.மாதவன், குடும்ப நண்பர் திரு சரவணன், நிகழ்வில் கலந்துகொண்ட ஆர்வலர்களுக்கும், சமூக வலைதளங்களிலும், நேரிலும், அலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்த நண...

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகள்

Image
நூல் : தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் பொருண்மை : கட்டுரைத் தொகுப்பு ஆசிரியர் : பிக்கு மௌரியார் புத்தா வெளியிடுபவர் : புத்தர் வழி, பிரக்போதி புத்த விகார், போதி வனம், சாந்திபுரம், ஓரிக்கோட்டை அஞ்சல், இராமநாதபுரம் 623 402 விலை : ரூ.100 தொலைபேசி : 9943087674/8012985125  மின்னஞ்சல் : buddhamouriyar@gmail.com/buddhavazhi@gmail.com வெளியீடு நாள்  : 12.5.2017  ------------------------------------------------------------------------------------------- நன்றி: பிக்கு மௌரியார் புத்தா / தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் -------------------------------------------------------------------------------------------

பௌத்தத்தில் வாழ்வியல்

Image
  பௌத்தத்தில் வாழ்வியல் ------------------------------------------------------------------------------------------- நன்றி: தமிழ்ப்பொழில் ,  துணர் 70, மலர் 8, நவம்பர் 1996 -------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பௌத்தம்

Image
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பௌத்தம் சோழ நாட்டில் பௌத்த விகாரம், செப்பேடு, கல்வெட்டு, செப்புத்திருமேனி, சிலை, கோயில் என்ற பல நிலைகளில் சான்றுகளைக் கொண்ட பெருமையினைக் கொண்டது நாகப்பட்டினம் மாவட்டமாகும். நாகப்பட்டினத்தில் பொ.ஆ.720இல் பல்லவ மன்னர் நரசிம்மபோத்தவர்மன் காலத்தில், வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகப்பட்டினத்திற்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசர் விருப்பப்படி ஒரு பௌத்தக்கோயில் கட்டப்பட்டது. பொ.ஆ.11ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவிஜய நாட்டு மன்னரான ஸ்ரீமார விஜயோத்துங்கவர்மன், முதலாம் ராஜராஜன் அனுமதியுடன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரத்தைக் கட்டியதாக பெரிய ஆனைமங்கலச் செப்பேடு கூறுகிறது. இதற்கு முதலாம் ராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரையும், அதன் வருவாயையும் கொடையாக வழங்கினான். அவரது மகன் முதலாம் ராஜேந்திரன் இந்நிவந்தத்தை உறுதிப்படுத்தினான். முதலாம் குலோத்துங்கன் மேலும் சில ஊர்களைத் தந்ததாக சிறிய லெய்டன் செப்பேடு கூறுகிறது. அப்போது இந்த விகாரம் ராஜராஜப்பெரும்பள்ளி என்றழைக்கப்பட்டது. இச்செப்பேட்டில் ராஜேந்திரச்சோழப்பெரும்பள்ளி என்ற மற்றொரு பௌத்த விகாரமும் இருந்ததாகக் குறிப்ப...

அரியலூர் மாவட்டத்தில் பௌத்தம்

Image
அரியலூர் மாவட்டத்தில் பௌத்தம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் பௌத்த சமயச் சான்றுகள் காணப்படுகின்றன. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், கீழக்கொளத்தூர், குழுமூர், சுத்தமல்லி, பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், முத்துசேர்வைமடம், ராயம்புரம், விக்ரமங்கலம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் புத்தர் சிலைகள் உள்ளன. இவற்றில் சில சிலைகள் அருங்காட்சியகங்களில் உள்ளன. கங்கைகொண்ட சோழபுரம், இராசேந்திரசோழன் அகழ்வைப்பகத்தில் அரியலூரையும், கீழக்கொளத்தூரையும் சேர்ந்த புத்தர் சிலைகள் உள்ளன. அரியலூர் புத்தர் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், நேர்த்தியான வரிசையில் அமைந்த சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. இடது தோளிலிருந்து காணப்படுகின்ற மேலாடையானது உடலை அணைத்தவாறு கால் வரை உள்ளது. பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்கள் காணப்படுகின்றன. சிலையின் ...

புதுக்கோட்டை மாவட்டத்தில் பௌத்தம்

Image
2025 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.  ******************* புதுக்கோட்டை மாவட்டத்தில் பௌத்தம்     சோழ நாட்டில் பௌத்தம் இருந்ததற்கான சான்றுகளாக புத்தர் சிலைகள், பூம்புகாரிலும், நாகப்பட்டினத்திலும் இருந்த புத்த விகாரங்கள், திருவிளந்துறையில் புத்தர் கோயில் இருந்ததைக் கூறுகின்ற கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலிலுள்ள கல்வெட்டு, பெருஞ்சேரியிலும் புத்தமங்கலத்திலும் உள்ள புத்தர் கோயில்கள், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் உள்ள புத்தரின் சிற்பங்கள், ஆங்காங்கு தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்ற புத்தர் சிலைகள், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் ஆகியவை காணப்படுகின்றன. சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்விற்காக மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைக் கொண்ட சோழ நாட்டில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் சிலைகளைக் காண...