Posts

Showing posts from 2025

பௌத்த சுவட்டைத் தேடி : மங்கலம்

Image
மே 1998 8.5.1998இல் வந்த தி இந்து நாளிதழில் என் ஆய்வுப்பகுதியில் காணப்படுகின்ற ஒரு புத்தர் சிலையைப் பற்றிய செய்தியைக் கண்டேன்.  இதுவரை நூல்களையும், கட்டுரைகளையும் சான்றுகளாகக் கொண்டிருந்த எனக்கு முதன்முதலாக நாளிதழ் செய்தியும் சான்றாக அமைந்ததைக் கண்டேன். அன்று வந்த செய்தி (10th century Buddha statue to get separate shrine, The Hindu , 8.5.1998) மூலமாக, திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மங்கலம் என்னுமிடத்திலுள்ள அரவாண்டியம்மன் கோயிலில் பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு புத்தர் சிலை உள்ளதாகவும், அதை வைப்பதற்காக தனியாக ஒரு சன்னதி கட்டப்பட்டு வருவதாகவும் வரலாற்றறிஞர் திரு கி.ஸ்ரீதரன் கூறியிருந்தார். அந்தப் புத்தர் மீசையோடு இருந்ததும், அது நாளிதழ்களில் செய்தியாக  வந்ததும் நினைவில் நிற்கும் அனுபவம்.  ஜூன் 1998 செய்தி வந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் தஞ்சை மாவட்டத்தில் தழைத்த பௌத்தம் என்ற தலைப்பில் என் உரையினைப் பதிவு செய்வதற்காக திருச்சி, அகில இந்திய வானொலி நிலையத்திற்குச் சென்றேன். பதிவு முடிந்தபின் அங்கிருந்து மங்கலம் செல்லத் திட்டமிட்டு, திருச்சியிலிருந்து முசிறிக்குச் சென்ற...

Buddhism and Tamil : Mayilai Seeni Venkatasamy (Tr) S.Thillainayagam et al

Image
என் முனைவர்ப்பட்ட ஆய்விற்கு முதன்மை ஆதாரமாக நான் பயன்படுத்திய நூல்களில் முக்கியமானது  பௌத்தமும் தமிழும்  நூலாகும். அண்மையில் வெளியாகியுள்ள அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் என்னுடைய கட்டுரை இடம்பெற்றுள்ளது.  இலண்டன் பல்கலைக்கழக முனைவர்ப்பட்ட ஆய்வாளரான (Doctoral candidate  at Goldsmiths, University of London) திரு ஆதவன் பழனி, சில மாதங்களுக்கு முன் என்னைத் தொடர்பு கொண்டார். வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளதாகவும், அப்பணியில் பிறருடன் தானும் இணைந்துள்ளதாகவும் கூறி, அந்நூலின் பின்னிணைப்புகளில் பௌத்தம் தொடர்பான என்னுடைய ஆங்கிலக்கட்டுரை இடம்பெற இசைவினைக் கேட்டிருந்தார். நானும் இசைவினைத் தெரிவித்திருந்தேன். தற்போது அந்நூல் ( Buddhism and Tamil, Mayilai Seeni Venkatasamy, Translated by S.Thillainayagam, Aadhavan Pazhani, and G.Udhayaraj, Routledge, I Edition, 2025 ) வெளிவந்ததையும், அதில் என் கட்டுரை (Buddha statues in the Chola country, pp.133-139) இடம்பெற்றிருப்பதையும் அறிந்தேன். அந்நூலின் அன்பளிப்புப்படி...

அயோத்திதாசர் ஆதவன் விருது ஏற்புரை : நமது தமிழ்மண், ஜூலை 2025

Image
அயோத்திதாசர் ஆதவன் விருது ஏற்புரை இந்த இனிய விழாவிற்கு வந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் உள்ள பெருமக்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் என் வணக்கமும் நன்றியும். ஒரு அரசியல் கட்சியானது இவ்வாறாக ஒரு ஆய்வாளனைத் தேடி விருது தருவது என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சாதாரணமாக ஒரு தட்டச்சுச் சுருக்கெழுத்தனாகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். பௌத்தம் என்னை இந்த அளவிற்குக் கொண்டுவந்து நிறுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  ஒரு சிறிய பிளாஷ்பேக்! தமிழ் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர முனைவர்ப் பட்ட ஆய்வு செய்யலாம் என்று ஒரு விதியைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது இந்தத் தலைப்பை நான் தேர்ந்தெடுத்தேன். எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. மூத்த பேராசிரியர் சோ. ந. கந்தசாமி சொன்னார், தம்பி யாரும் தொடாத துறையை நீ தொடுகிறாய் கவனமாக இரு. அதே செய்தியை ஐராவதேம் மகாதேவன் சொன்னார். கும்பகோணம் சேதுராமனும் அதையே சொன்னார். அப்பா, அது ரொம்ப கஷ்டம், அது உன்னால முடியாது. முடியாது முடியாது முடியாது என்று பெருமக்கள் சொன்னது எனக்குள் ஒர...

சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் : தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2013

Image
  சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் ------------------------------------------------------------------------------------------- நன்றி:  தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2013 -------------------------------------------------------------------------------------------

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) : தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்

Image
  களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) ------------------------------------------------------------------------------------------- சென்னையில், 2013இல் நடைபெற்ற  தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்   கருத்தரங்கில் அளிக்கப்பட்ட உரையின் அச்சு வடிவம். கட்டுரையை வெளியிட்ட தொகுப்பாளர்களுக்கு நன்றி. -------------------------------------------------------------------------------------------

தொல்லியல் ஆய்வுகள் அறிதல் : மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி

Image
30.10.2025இல் தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசுக் கல்லூரியில் தொல்லியல் ஆய்வுகள் அறிதல்  என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி சிறப்பாக நடைபெற்றது. வாய்ப்பு தந்த முதல்வருக்கும், தலைவர் உள்ளிட்ட தமிழ்த்துறையினருக்கும் மனமார்ந்த நன்றி. இணைப்பேராசிரியர் கு. பரமேஸ்வரன் வரவேற்புரை முதல்வர் சுமதி தலைமையுரை (மேடையில் இ-வ:  இரா.சாந்தி, பா.ஜம்புலிங்கம், கு.பரமேஸ்வரன், ப.இராசமாணிக்கம்) துறைத்தலைவர் இரா.சாந்தி வாழ்த்துரை பா.ஜம்புலிங்கம் சிறப்புரை இணைப்பேராசிரியர் ப.இராசமாணிக்கம் தொகுப்புரை ------------------------------------------------------------------------------------------- நன்றி: மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி (தன்னாட்சி) -------------------------------------------------------------------------------------------

பௌத்தம் போற்றும் மனித நேயம் : கரந்தைத் தமிழ்ச் சங்க நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் 2011

Image
 பௌத்தம் போற்றும் மனித நேயம் செம்மொழி மலர் என்ற தலைப்பில்  2010இல் கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட மலரிலும் இக்கட்டுரை இதே தலைப்பில் இடம்பெற்றுள்ளது.  ------------------------------------------------------------------------------------------- நன்றி: கரந்தைத் தமிழ்ச் சங்க நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் 2011 -------------------------------------------------------------------------------------------

பௌத்தம் வளர்த்த தமிழ் : தினமணி செம்மொழிக்கோவை

Image
  பௌத்தம் வளர்த்த தமிழ் ------------------------------------------------------------------------------------------- நன்றி:  தினமணி செம்மொழிக்கோவை   உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர் -------------------------------------------------------------------------------------------