Posts

Showing posts from August, 2023

பௌத்த ஆய்வு : 30 ஆண்டுகள் நிறைவு

Image
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காகப் பதிவு செய்ய ஆகஸ்டு 1993இல் விண்ணப்பம் அனுப்பி, அந்த ஆய்வினை நிறைவு செய்து, தொடர்ந்து  ஆய்வினை மேற்கொள்வது என்பது நினைவில் நிற்கின்ற அனுபவமாகும். அனுபவத்தைப் பற்றி விவாதிக்கும் முன்பாக, ஆய்வின்போது பன்மொழிப்புலவர் திரு மு.கு.ஜகந்நாதராஜா அவர்களிடமிருந்து பெற்ற கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கருத்தரங்கிற்காக அவர் வந்திருந்தபோது சந்தித்தேன். பௌத்தம் குறித்து பல அரிய தகவல்களைக் கூறிய அவர், அங்கு அளித்த கட்டுரையின் படியை எனக்குத் தந்தார். அவருக்கு அக்கட்டுரையை என் ஆய்விற்காகப் பயன்படுத்திக்கொள்ள இசைவு கேட்டு கடிதம் எழுதினேன். அவர் அதற்கு மறுமொழி அனுப்பியிருந்தார். 1993ஆம் ஆண்டிற்கு பின்னோக்கிச் செல்வோம். முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள எண்ணியபோது ஆய்வு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொண்டு ஆய்வில் ஈடுபட்டால் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் கூறிய நிலையில், 3 ஆகஸ்டு 1993இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பம் வேண்டி, வரலாற்றுத்துறைத் தலைவரின் அனு

அஞ்சலி : வரலாற்றறிஞர் புலவர் செ.இராசு

Image
கல்வெட்டறிஞர் புலவர் இராசு ஐயா அவர்கள் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் எங்களை ஈர்த்த ஆசிரியப்பெருமக்களில் ஒருவர் இராசு ஐயா அவர்கள். 1983இல் பதிப்புத்துறையில் நான் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவருடைய "மராத்தியர் செப்பேடுகள் 50" என்ற நூலை லாரியிலிருந்து இறக்கும்போது நானும் இருந்தேன். அந்நூல் சென்னையில் அச்சாகி வந்த நினைவு. அப்போது அச்சகத்தில் கலித்தொகை மறுபதிப்பு அச்சாகிக்கொண்டிருந்தது. திடீரென்று இந்த நூலைப் பார்த்ததும் எங்களுக்கு வியப்பு. தமிழ்ப் பல்கலைக்கழக முதல் வெளியீடு என்ற குறிப்போடு அந்நூல் வெளியானது. அவருடைய "மராத்தியர் கல்வெட்டுகள்" தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 100ஆவது வெளியீடாக வந்தது என நினைக்கிறேன்.  கல்வெட்டுத்துறை என்றாலே எங்களுக்கு முதலில் நினைவிற்கு வருபவர் ஐயாதான். நான் பௌத்த ஆய்வில் சேர்ந்தபோது எனக்கு ஊக்கம் தந்ததோடு அவருடைய "கொங்கு நாட்டில் சமணம்"

இராஜராஜசோழரின் 1038ஆவது முடிசூட்டுப் பெருவிழா : மும்முடிச்சோழன் விருது

Image
சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவும், தஞ்சாவூர் தமிழ்ச்சங்கமும் இணைந்து 3 ஆகஸ்டு 2023ஆம் நாள் இராஜராஜசோழர் முடி சூடிய 1038ஆவது ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சாவூர் பெரிய கோயில் பெத்தண்ணன் கலையரங்கில் நடத்தின . இராஜராஜ சோழரின் புகழுரையை தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் கோ.தெய்வநாயகம் நிகழ்த்தினார். வணக்கத்துக்குரிய மேயர் திரு சண்.இராமநாதன் தலைமையுரையாற்றினார். குழுவின் தலைவர் மருத்துவர் திரு சா.உதயசங்கர் நோக்கவுரையாற்றினார். வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அமரர் திரு என்.சேதுராமன் (சகோதரர் சிவராமன் பெற்றுக்கொண்டார்), பேராசிரியர் திரு சு.இராஜவேலு, திரு கி.ஸ்ரீதரன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டன. (வலமிருந்து) ஜம்புலிங்கம், உதயசங்கர், கோ.தெய்வநாயகம், சிவராமன், ஸ்ரீதரன், சண்.இராமநாதன், இராஜவேலு, கோவிந்தராஜ், துளசேந்திரன், ஜான் பீட்டர், செ.இராமநாதன்  குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் திரு ஆ. ஜான்பீட்டர், தமிழ்ப்பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் முனைவர் திரு துளசேந்திரன், தமிழ்நாடு பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் முனை

பௌத்த சுவட்டைத் தேடி : பழையாறை

Image
2 ஜூலை 2023இல் நானும் என் மனைவியும் கும்பகோணத்திற்கு நண்பர் திரு செல்வம் அவர்களின் இளைய மகன் திரு பாலாவின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்விற்காகச் சென்றபோது, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கும், துர்க்கையம்மன் கோயிலுக்கும் சென்றோம். துர்க்கையம்மன் கோயிலில் நண்பர் புலவர் திரு ச.செல்வசேகர் அவர்களைச் சந்திக்கும்போது அவர் பழையாறையில் ஒரு புத்தர் சிலையின் தலை உள்ளதாகக் கூறினார். அப்பகுதியில் முழையூரில் முன்னரே புத்தர் சிலை உள்ளதைப் பற்றிக் கூறியபோது அவர் கீழப்பழையாறையில் உள்ளதாகக் கூறினார். உடனே அங்கு செல்ல முடிவெடுத்தோம்.  வழக்கமாக தாராசுரத்தில் ஆட்டோ எடுத்துக்கொண்டு பட்டீஸ்வரம் சென்று, பின்னர் அங்கிருந்து கும்பகோணத்திற்குப் பயணிப்போம். அவ்வகையில் பட்டீஸ்வரம் சென்றிருந்தோம். இப்போது பயணத்திட்டத்தில் சிறிய மாற்றம்.  பட்டீஸ்வரத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கீழப்பழையாறைக்குச் சென்றோம்.  நண்பர் இல்ல நிகழ்விற்காகச் சென்று புத்தரைப் பார்த்தது ஒரு வித்தியாசமான அனுபவம். முதன்முதலாக என் மனைவியும் களப்பணியின்போது உடன் வந்திருந்தார்.  பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் ஒரு தோப்பில் சற