Posts

Showing posts from 2021

பௌத்த சுவட்டைத் தேடி : திருநாட்டியத்தான்குடி

Image
23 ஏப்ரல் 1995 கும்பகோணம் என் . சேதுராமன் அவர்களுடன் ஆய்வு பற்றி பேசிக்கொண்டிருந்தபோது தஞ்சாவூரில் பௌத்தம் தொடர்பாக அவர் கூறுகின்ற செய்திகளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது நாகப்பட்டினத்தில் புத்தர் விகாரை , நாகப்பட்டினம் வெளிப்பாளையம் , கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் ,  சோழபுரம் , திருநாட்டியத்தான்குடி , திருமலைராயன்பட்டனம் , அம்மன்குடி , நாகேஸ்வரர் கோயில் அருகே   பகவர் , மன்னார்குடி , பட்டீஸ்வரம் , புத்தமங்கலம் ,  திருச்சோபுரம் , போதிமங்கை போன்ற இடங்களைப் பற்றியும் கூறியிருந்தார் . மார்ச் 2003 முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் , திரு வி . கண்ணன் , திரு கணேசன் ஆகியோருடன் களப்பணி சென்றபோது திருநாட்டியத்தான்குடியில் மூங்கில் தோப்பில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது .   பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த சிலையின் வலது கையும் தீச்சுடரும்   உடைந்த நிலையிலும் , கழுத்தும் , முகமும் சற்றுச் சிதைந்த நிலையிலும் இருந்தன . உள்ளங்கையில் தர்ம சக்கரத்தைக் காணமுடிந்தது . இப்பகுதியில் மழை வராமலிருக்கும்போது ,  மழை பெய்வதற்காக இச்சிலைக்கு

பௌத்த சுவட்டைத் தேடி : மீண்டும் புத்தமங்கலம்

Image
டிசம்பர் 1999 என் ஆய்வின்போது  மேற்கொண்ட களப்பணியில் புத்தமங்கலம் என்ற பெயரில் மூன்று ஊர்களைக் காணமுடிந்தது. முனைவர் பட்ட ஆய்வினை அளித்த காலகட்டத்தில் இவற்றில் கீழ்வேளூர் அருகில் உள்ள புத்தமங்கலத்தில் ஒரு புத்தர் சிலையைக் கண்டேன். இச்சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் 'புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி' என்ற சொற்றொடரைக் காணமுடிந்தது. இப்பெயரில் உள்ள ஊர்களில் இங்கு மட்டுமே புத்தர் சிலை உள்ளது.  புத்தமங்கலம் புத்தர் க ோயில்  (1999),  புகைப்படம்  :  பா.ஜம்புலிங்கம் புத்தமங்கலம் புத்தர் (1999),  புகைப்படம்  :  பா.ஜம்புலிங்கம் செப்டம்பர் 2021 1999க்குப் பின்னர், முன்னர் பார்த்த அச்சிலை மறுபடியும் காண்பதற்காக களப்பணி மேற்கொண்டேன்.  தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் வழியாக கீழ்வேளூர் சென்று அங்கு தேரடியை ஒட்டி அமைந்துள்ள சாலையில் புத்தமங்கலத்திற்குச் சென்றேன். சுமார் 2 கி.மீ. தூரம்.முந்தைய களப்பணி நினைவிற்கு வந்தது. அப்போது சிறிது தூரம் சேறும் சகதியுமாக நடந்து போகச் சிரமப்பட்டுச்சென்றேன்.  இப்போதும் சற்றொப்ப அதே அனுபவம். ஒரு கி.மீ. நடந்து சென்றபின், அங்கு சாலை

பௌத்த சுவட்டைத் தேடி : விடையபுரம்

Image
24 செப்டம்பர் 2021 முனைவர் மீ.மருதுபாண்டியன் (காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், மதுரை மற்றும் திருவாரூர்) அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு புதூர் புத்தரைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்.  25 கிமீ மிதிவண்டியில் பயணித்து, அந்த புத்தர் சிலையை 1999இல் கண்டதையும் , தொடர்ந்து அச்செய்தி நாளிதழ்களில் வெளியானதையும் கூறினேன். அந்த புத்தரைப் பற்றிய பதிவு இருப்பதறிந்து மகிழ்ந்தார்.  அப்போது அவர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விடையபுரத்தில் என்ற இடத்தில் ஒரு புத்தர் சிலை இருந்ததாகவும், தற்போது அச்சிலை குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பதாகவும் கூறினார். அச்சிலையை இன்னும் பார்க்கவில்லை என்று கூறி முடிப்பதற்குள் அதன் புகைப்படத்தை அனுப்பிவிட்டார்.  புகைப்படம் நன்றி :  மீ.மருதுபாண்டியன் புகைப்படம் நன்றி :   மீ. மருதுபாண்டியன் புகைப்படத்தைப் பார்த்ததும், அதனை அனுப்பியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அச்சிலையை இதுவரை நான் பார்க்கவில்லை என்று கூறினேன். "நீங்கள் பார்க்காத ஒரு சிலைகூட உண்டா? உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்து, நான் கூறவில்லை. நீங்கள் பார்க்காத சிலை என்று தெரிந்

பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் : முனைவர் சீமான் இளையராஜா

Image
முனைவர் சீமான் இளையராஜா எழுதியுள்ள பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் என்ற நூல் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் கூற்று, புத்தரின் வாழ்வும் நெறியும், கோயில்களின் வரலாறும் பின்னணியும், அயோத்திதாச பண்டிதரின கூற்று, பவுத்தப் பண்டிகைகள், விழாக்கள் என்னும் ஐந்து தலைப்புகளைக் கொண்டுள்ளது. மறைக்கப்பட்ட பவுத்த கோயில்கள், பவுத்தப் பண்டிகைகள் புதைக்கப்பட்ட புத்தர் சிலைகள் பற்றியும் அதன் உண்மை வரலாற்றையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே இந்நூலின் முக்கிய நோக்கம் என்கிறார் நூலாசிரியர். நூலில் காணப்படுகின்ற கருத்துகள் சிலவற்றைக் காண்போம். “புத்தம் ஒரு மதமில்லை. அது சனாதனத்துக்கு எதிரான ஒரு ஜனநாயகக் கோட்பாடு. மானுட சமத்துவத்துக்கு வழிகாட்டும் ஒரு வாழ்வியல் நெறி. பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்னும் கற்பிதங்களை நொறுக்கும் கருத்தியல்….” (பக்கம் 9) “புத்தர் தம்மை ஒரு அவதாரமாகவோ, கடவுளின் தூதராகவோ, தெய்வப்பிறவியாகவோ, கடவுளாகவோ விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை. அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் கூறிக்கொள்ளவில்லை. வேறு எந்தக்கடவுளையும் சுட்டிக்காட்டி வணங்கவோ, வழிபாடு செய்யவோ போதிக்

சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள்

Image
அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்று வருகின்ற தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாத இணைய வழிக்கருத்தரங்கில்  சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள் என்ற தலைப்பில் 17 மே 2021 மதியம் 3.00 மணியளவில் உரையாற்றினேன். பூம்புகார் பௌத்த விகாரத்தின் முன்பாக (புகைப்படம் : மூத்த மகன் ஜ.பாரத்)  சோழ நாட்டில் பௌத்த விகாரங்கள் இருந்த பூம்புகார், நாகப்பட்டினம், கோயில் இருந்த திருவிளந்துறை, கோயில்கள் உள்ள பெருஞ்சேரி, புத்தமங்கலம், தனியாக புத்தருக்காக ஒரு சன்னதி அமையவுள்ள மங்கலம், புத்தர் சிற்பங்கள் உள்ள தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள், சோழ நாட்டில் களப்பணியில் நேரில் கண்ட 60க்கும் மேற்பட்ட புத்தர் கற்சிலைகள், புத்தர் என்றழைக்கப்படுகின்ற சமண தீர்த்தங்கரர் சிலைகள் மற்றும் பிற சிலைகள் குறித்து உரையாற்றப்பட்டது. பங்கேற்பாளர்களின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. உரையைக் காணவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன்.   யுட்யூபில் சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள் என்ற பக்கத்தில் இதனை

Jain sites of Tamil Nadu : Jain statues found during field study

Image
For my doctorate entitled "Buddhism in the Chola country" (Tamil University, Thanjavur, 1999)" , I went to  French Institute of Pondicherry on 26 February 1999, and collected information pertaining to the Buddha  statues and recorded them in my thesis. After submitting it, I went to the institute so many times. After nearly two decades, in the DVD published by the institute, the photographs of the Jain Tirtankara statues identified by me, had a place. I feel it an unforgettable experience.  The institute released a DVD entitled "Jain sites of Tamil Nadu"   in Feburary 2018.  I took part in the function held in the campus of the institute at Puducherry. Mr K.Rameshkumar spoke about the speciality of the DVD at that time. In it 464 Jain Jain sites including 82 sub sites have been documented. Among others, 7,873 photographs  of temples, cave temples and dilapidated temples are found in it.  During the field work carried out for the doctorate, I went to so many pla

தமிழ்நாட்டு சமணத் தளங்கள் : களப்பணியில் கண்ட சமணர் சிலைகள்

Image
சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்விற்காக 26 பிப்ரவரி 1999இல் முதன்முதலாக பாண்டிச்சேரியிலுள்ள  புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் (French Institute of Pondicherry)  சென்று அங்குள்ள புத்தர் சிலைகளின் புகைப்படங்களைப் பற்றிய குறிப்புகளை எடுத்து வந்தேன். அதனைப் பற்றிய குறிப்புகளை முனைவர் பட்ட ஆய்வேட்டில் தந்துள்ளேன். ஆய்வேட்டினை நிறைவு செய்த பின்னர் அங்கு பல முறை சென்றுள்ளேன். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர்  அவர்கள் வெளியிட்ட குறுந்தகட்டில் என் களப்பணியின்போது காணப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். 2018இல் அந்நிறுவனம்  தமிழ்நாட்டு சமணத் தளங்கள் (Jain sites of Tamil Nadu) என்ற குறுந்தகட்டினை பிப்ரவரி 2018இல் வெளியிட்டது.   நிகழ்வின்போது  திரு கே.ரமேஷ்குமார் அதன் சிறப்பை எடுத்துரைத்தார்.   அதில் தமிழ்நாட்டில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில்கள், குகைக்கோயில்கள், பாழடைந்த கோயில்களின் 7,873 புகைப்படங்கள் காணப்படுகின்றன.  சோழ நாட்டில் பௌத்தம் (முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கல

சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019) மலர்

Image
சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019) தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மின்னூலில் நான் எழுதியுள்ள "கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலில் உள்ள புத்தர் சிலை "  ( பக்.214-215 ),  " அரியலூர் மாவட்டம் பிள்ளைபாளையத்தில் வழிபாட்டில் புத்தர் சிலை "  (பக்.255-256) என்ற தலைப்பிலான இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்நூல் அண்மையில்  அச்சு வடிவம் பெற்றுள்ளது என்பதை அறிந்து மகிழ்கின்றேன்.  கட்டுரைகளை வெளியிட்ட பேராசிரியர்  முனைவர் க.ஜெயபாலன் உள்ளிட்ட தொகுப்பாசிரியர்களுக்கு  என் மனமார்ந்த நன்றி.  நூலின் தேவைக்குத் தொடர்பு கொள்ள : பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், 1/7, அப்பாவு தெரு, எல்லீசு சாலை, சென்னை 600 002, ரூ.500, தொலைபேசி : 044-42663840  நன்றி  :  எழுத்துக் குடும்பம், இந்து தமிழ் திசை, 2 ஜனவரி 2021