Posts

Showing posts from February, 2023

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை

Image
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் (தஞ்சாவூர் முன்னாள் மாவட்ட ஆட்சியரகம்) பொ.ஆ.10- 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலை இருப்பதாகவும், என் பௌத்த ஆய்வுக்காக அதனைப் பார்க்கும்படியும் கூறியிருந்தார். சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான ஆய்வின்போது ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் புத்தர் கற்சிலைகளைக் காணமுடிந்தது. அவ்வாறான ஆதாரங்கள் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, செப்டம்பர் 2022) இடம் பெற்றுள்ளது. அந்நூலில் சோழ நாட்டில் உள்ள 63 புத்தர் சிலைகளைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. தஞ்சாவூர் அருங்காட்சியகங்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும் குறிப்புகளும் அந்நூலில் இடம்பெற்றுள்ளன. மதகரம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த புத்தர் கற்சிலைகள் தஞ்சாவூர் கலைக்கூடத்திலும், மாத்தூரைச் சேர்ந்த புத்தர் சிலை தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும், சோழன் மாளிகையைச் சேர்ந்த இரு புத்தர் சிலைகள் மராத்தியர் அரண்மனை அகழ்வைப்பகத்திலும் உள்ளன. சோழன்மாளிகையைச் ச

சிங்கள நூலில் மேற்கோள்

Image
2016வாக்கில் Narada Karunatilaka என்பவர் தான் எழுதும் சிங்கள நூலுக்காக என்னுடைய வலைப்பூவிலிருந்து சில செய்திகளை மேற்கோளாகக் குறிப்பிடப்படவுள்ளதாகவும், உரிய ஒப்புகை தருவதாகவும் கூறியிருந்தார். ஜனவரி 2023இல் நூலின் அட்டையையும், தொடர்பான பக்கங்களையும் அனுப்பியிருந்தார். வலைப்பூவினையும், மணலூரில் களப்பணி தொடர்பான ஒளிப்படத்தையும் அவருடைய நூலில் காணமுடிந்தது. இதற்கு முன்னர் பிற ஆங்கில நூல்களில் ( https://ponnibuddha.blogspot.com/2017/09/blog-post.html ) என் ஆய்வு மேற்கோளாகச் சுட்டப்பட்ட போதிலும், சிங்கள மொழியில் இதுவே முதன்முறையாகும். அவர் அனுப்பியிருந்த மேற்கோளிலிருந்து... "It is commendable that Dr. B. Jambulingam, who is researching about the Buddhism of the ancient Chola kingdom, reveals a wealth of valuable facts." ----------------------------- என் அண்மை வெளியீடான சோழ நாட்டில் பௌத்தம் திருப்பத்தூர் புத்தக விழாவில்.... 1 பிப்ரவரி 2023 காலை மேம்படுத்தப்பட்டது.