பௌத்த சுவட்டைத் தேடி: லெய்டன் பல்கலைக்கழகம்
நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகரிலிருந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் இந்தியா வரவுள்ளது என்ற செய்தி ஊடகங்களில் நேற்று (16.5.2026) முக்கியமான பேசுபொருளானது. பாரதப்பிரதமரிடம் இச்செப்பேடுகள் ஒப்படைக்கப்படுகின்ற வரலாற்றுசிறப்புமிக்க நிகழ்வு நேற்று நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின், சோழர்களின், பௌத்தத்தின் பெருமையினைப் பேசுகின்ற இந்தச் செப்பேடுகளின் வருகையானது இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பெருமையைச் சேர்க்கின்ற நிகழ்வாகும். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியாலும், வரலாற்றறிஞர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் முயற்சியின் விளைவாகவும் இதனைக் கொள்ளலாம். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நிகழ்வாக இது அமையும். இச்செப்பேடுகள் தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் சமூக வலைதளத்தில் நேற்று பதிந்த பதிவினைக் காண்போம். ஆனைமங்கலச் செப்பேடுகள் இந்தியா வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற இனிய வேளையில், என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்காக இதன் புகைப்படங்களை நான் பெ...