தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தச் சுவடுகள் : தமுஎகச மாநில மாநாட்டு சிறப்பு மலர் 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தச் சுவடுகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தச்சுவடுகளாகக் கல்வெட்டு, புத்தர் சிலைகள், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள், புத்தர் சிற்பங்கள், ஓவியம் ஆகியவை காணப்படுகின்றன. பக்தி இயக்கக் காலத்தில் பௌத்தத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டபோதிலும், அதற்குப் பின்னர் பௌத்தத்தின் தாக்கமானது தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளதை இச்சான்றுகள் உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டில் கீழ்க்குறிச்சி, நாகப்பட்டினம், கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் பௌத்தம் தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் காலத்தால் அண்மையானது குடமூக்கு என்றும், குடந்தை என்றும் அழைக்கப்படுகின்ற கும்பகோணத்தில் உள்ளது. பாடல் பெற்ற தலமான கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டின் மூலமாகத் திருவிளந்துறை என்னுமிடத்தில் ஒரு புத்தர் கோயில் இருந்ததை அறியமுடிகிறது. செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின்போது விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்ட இக்கல்வெட்டு குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் ஆகும். எலந்துறை என்றழைக்கப்படும் அவ்வூரில் புத்தர் கோயில் இருந்ததற்கான எச்சங்களையோ, புத்தர் சிலையையோ தற்போது காணமுடியவில்லை....