பௌத்த சுவடுகள்: வாசகர் வட்டம், அழகம்மாள் நகர் கிளை நூலகம்
நேற்று (20.5.2026) தஞ்சாவூர், அழகம்மாள் நகர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பாக நூலக வளாகத்தில் நடைபெற்ற 93ஆவது நிகழ்வில் "பௌத்த சுவடுகள்" என்னும் தலைப்பில் உரையாற்றினேன். அழைப்பிதழில் கண்டவாறு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், உள்ளூர் பொதுமக்கள், தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். வாசகர் வட்டத்தின் இந்த முயற்சி போற்றத்தக்கதாகும். உரையில் பின்வருவன உள்ளிட்ட கருத்துகளைப் பகிர்ந்தேன். உரைக்குப் பின் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆய்வில் சேர்ந்த காலகட்டத்தில் கலைக்கூடத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும் மட்டுமே புத்தர் கற்சிலைகள் இருந்தன. தற்போது தஞ்சாவூர் நகரில் மட்டும் நான்கு அருங்காட்சியகங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. சென்னை, அரசு அருங்காட்சியகத்தை அடுத்து தஞ்சாவூர் கலைக்கூடத்தில் மட்டுமே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி உள்ளது. களப்பணியில் அய்யம்பேட்டையில் முதன்முதலாக ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் கண்டுபிடித்தது. நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகரிலிருந்த ஆன...