பௌத்த சுவட்டைத் தேடி: தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக அரண்மனை வளாகத்தில் துணைவேந்தர் செயலக நுழைவாயிலின் முன்பாக வாயிற்படியின் இடது புறத்தில் ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன். பின்னர் அது அருங்காட்சியகத்தில் இடம் பெற்றதை அறிந்தேன். ஜூன் 1995 ஆய்வியல் நிறைஞர் ஆய்வு தொடர்பாக தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்திற்குச் சென்று அங்கிருந்த இரு புத்தர் சிலைகளையும், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் பார்த்ததைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலுள்ள புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றேன். அருங்காட்சியகக் காப்பாளர் (பொ) திரு கு.தேவராஜைச் சந்தித்தேன். ஒளிப்படமெடுக்க எழுத்துவழி அனுமதி தேவையில்லை என்றும், ஆய்வேட்டில் உரிய ஒப்புகை தரும்படியும், இந்தச்சிலை வரலாற்றறிஞர் கும்பகோணம் என்.சேதுராமன் முயற்சியால் கொண்டுவரப்பட்டதாக புலவர் செ. இராசு கூறியதாகவும் தெரிவித்தார். அங்குத் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர்/பொ.ஆ.10ஆம் நூற்றாண்டு என்ற குறிப்புடன் அழகான தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலையைக் கண்டேன். இச்சிலை...