Posts

பௌத்த சுவட்டைத் தேடி: கரூர்

Image
26.9.1999 புதுக்கோட்டை மாவட்ட பௌத்த சமயச் சான்றுகளைக் காண்பதற்காக மேற்கொண்ட களப்பணியில் சுந்தரபாண்டியன்பட்டினம் புத்தரைப் பார்க்கத்திட்டமிட்டபோது கரூரில் உள்ள புத்தர் நினைவிற்கு வந்தார். தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார்கோயில் வழியாகக் கரூர் சென்றேன். அங்குள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தரைக் கண்டேன்.  அங்குள்ள கருப்பர்சாமிக்குக் கடா வெட்டுவது புத்தருக்குத் தெரியாமல் இருப்பதற்காக வலது பக்கம் தனியாக புத்தரை வைத்துள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வின்போது மூலவர் நிலவளமுடைய அய்யனார் சாமிக்கு முன்பாகத் திரையைப் போட்டுவிடுவதாகவும் கூறினர்.  அங்குள்ளோருக்கு நன்றி கூறிவிட்டு, அங்கிருந்து பொன்பற்றிக்குச் சென்றேன். அங்கு புத்தர் சிலை எதுவும் காணப்படவில்லை. அங்கிருந்து சுந்தரபாண்டியன்பட்டினம் சென்றேன் . அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதித்துள்ளோம். 10.10.2021 சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" நூல் அச்சுப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது அச்சிலையைக் காண்பதற்காக அங்குச் செல்ல விரும்பினேன். தொல்லியல் ஆய்வுக் கழக நிறு...

களப்பணியில் நிறைய சிரமங்களைச் சந்தித்தேன்: ஆதவன்/யாவரும் கேளீர்

Image
உங்களைப் பற்றிய சிறுஅறிமுகம், கல்வி, பணியாற்றிய விவரங்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 2.4.1959இல் பிறந்தேன். பள்ளி, கல்லூரிப் படிப்பினை அங்கு நிறைவு செய்தேன். தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபின், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக் கெழுத்தராகச் சேர்ந்து, சுமார் 35 ஆண்டு காலம் பணியாற்றி, உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றேன். தங்களின் எம்பில் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு எங்கே நடைபெற்றது? நெறியாளர் யார்? தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (1995) என்ற தலைப்பில் எம்பில் ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டேன். இரண்டிற்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மைய இயக்குநர் பேராசிரியர் க.பாஸ்கரன் நெறியாளராக இருந்தார். பௌத்த ஆய்வு சிந்தனை எப்போது ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் எம்பில் பட்டத்திற்காக கல்கியின் வரலாற்றுப் புதினங்களில் ஆய்வு செய்ய விரும்பினேன். ஆய்வேட்டினை ஆங்கிலத்தில் அளிக்கவேண்டிய நிலையில், அது சிரமம் என்று உணர்ந்து தொடர்புடைய தலைப...

ஆனைமங்கலச்செப்பேடுகள் சொல்வது என்ன?: வி.என்.ராகவன்/தினமணி

Image
சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் 1700-களில் டச்சு ஆளுமையின்போது நாகப்பட்டினத்துக்கு கிறிஸ்தவ மதப்பணிக்காக வந்த ஃபுளோரன்டியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன. தமிழ், சம்ஸ்கிருத மொழிகளைக் கொண்ட 21 செப்பேடுகளும் சுமார் 31 கிலோ எடையுடையவை. இதில் பிணைக்கப்பட்டுள்ள செப்பு வளையத்தில் மாமன்னர் ராஜேந்திரசோழனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.  இந்தச் செப்பேடுகளில் பௌத்த விகாரைக்கு ராஜராஜசோழன் வழங்கிய அறக்கொடைகள் வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நெதர்லாந்தில் லைடென் பல்கலைக்கழத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தச் செப்பேடுகளை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது, நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த  சோழர் கால ஆனைமங்கலச் செப்பேடுகள் தி ஹேக் நகரில் மே 16இல் நடைபெற்ற விழாவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.  தமிழர்களின் மிகச் சிறந்த பொக்கிஷமாகப் போற்றப்படும் இந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் குறித்து தஞ்சாவூரைச் ச...

பௌத்த சுவடுகள்: வாசகர் வட்டம், அழகம்மாள் நகர் கிளை நூலகம்

Image
நேற்று (20.5.2026) தஞ்சாவூர், அழகம்மாள் நகர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பாக நூலக வளாகத்தில் நடைபெற்ற 93ஆவது நிகழ்வில் "பௌத்த சுவடுகள்" என்னும் தலைப்பில் உரையாற்றினேன். அழைப்பிதழில் கண்டவாறு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், உள்ளூர் பொதுமக்கள், தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வாசகர் வட்டத்தின் இந்த முயற்சி போற்றத்தக்கதாகும். உரையில் பின்வருவன உள்ளிட்ட கருத்துகளைப் பகிர்ந்தேன். உரைக்குப் பின் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆய்வில் சேர்ந்த காலகட்டத்தில் கலைக்கூடத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும் மட்டுமே புத்தர் கற்சிலைகள் இருந்தன. தற்போது தஞ்சாவூர் நகரில் மட்டும் நான்கு அருங்காட்சியகங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. சென்னை, அரசு அருங்காட்சியகத்தை அடுத்து தஞ்சாவூர் கலைக்கூடத்தில் மட்டுமே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி உள்ளது. களப்பணியில் அய்யம்பேட்டையில் முதன்முதலாக ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் கண்டுபிடித்தது. நெதர்லாந்து நாட்டின...

ஆர்வத்தைத் தூண்டும் நூல்கள்: இந்தியக்குடியரசு துணைத்தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன்

Image
புத்த பூர்ணிமா (1.5.2026) தினத்தன்று தினமணி நாளிதழில்  இந்தியக் குடியரசு துணைத்தலைவர் மேதகு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "புத்த பூர்ணிமா அன்பின் நிறைவு" என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. அதனைப் படித்தபின் என் கருத்துகளைத் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதியதோடு என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் தமிழ் மற்றும் ஆங்கிலப்பதிப்பின் (புது எழுத்து, காவேரிப்பட்டினம், 98426 47101) படிகளை 6.5.2026இல் அனுப்பியிருந்தேன். நூல்களைப் பெற்ற இந்தியக் குடியரசு துணைத்தலைவர் எனக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார். இன்றைய (19.5.2026) அஞ்சலில் பெற்ற அந்த கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ------------------------------------------------------------------------------------------- நன்றி: இந்தியக்குடியரசு துணைத்தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் ------------------------------------------------------------------------------------------- இதற்கு முன்பாக என்னுடைய படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2004) நூலுக்கு மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு ...