Posts

ஆர்வத்தைத் தூண்டும் நூல்கள்: இந்தியக்குடியரசு துணைத்தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன்

Image
புத்த பூர்ணிமா (1.5.2026) தினத்தன்று தினமணி நாளிதழில்  இந்தியக் குடியரசு துணைத்தலைவர் மேதகு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "புத்த பூர்ணிமா அன்பின் நிறைவு" என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. அதனைப் படித்தபின் என் கருத்துகளைத் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதியதோடு என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் தமிழ் மற்றும் ஆங்கிலப்பதிப்பின் (புது எழுத்து, காவேரிப்பட்டினம், 98426 47101) படிகளை 6.5.2026இல் அனுப்பியிருந்தேன். நூல்களைப் பெற்ற இந்தியக் குடியரசு துணைத்தலைவர் எனக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார். இன்றைய (19.5.2026) அஞ்சலில் பெற்ற அந்த கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ------------------------------------------------------------------------------------------- நன்றி: இந்தியக்குடியரசு துணைத்தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் ------------------------------------------------------------------------------------------- இதற்கு முன்பாக என்னுடைய படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2004) நூலுக்கு மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு ...

பௌத்த சுவட்டைத் தேடி: லெய்டன் பல்கலைக்கழகம்

Image
நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகரிலிருந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் இந்தியா வரவுள்ளது என்ற செய்தி ஊடகங்களில் நேற்று (16.5.2026) முக்கியமான பேசுபொருளானது. பாரதப்பிரதமரிடம் இச்செப்பேடுகள் ஒப்படைக்கப்படுகின்ற வரலாற்றுசிறப்புமிக்க நிகழ்வு நேற்று நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின், சோழர்களின், பௌத்தத்தின் பெருமையினைப் பேசுகின்ற இந்தச் செப்பேடுகளின் வருகையானது இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பெருமையைச் சேர்க்கின்ற நிகழ்வாகும். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியாலும், வரலாற்றறிஞர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் முயற்சியின் விளைவாகவும் இதனைக் கொள்ளலாம்.  இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நிகழ்வாக இது அமையும்.  இச்செப்பேடுகள் தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.  மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் சமூக வலைதளத்தில் நேற்று பதிந்த பதிவினைக் காண்போம்.  ஆனைமங்கலச் செப்பேடுகள் இந்தியா வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற இனிய வேளையில், என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்காக இதன் புகைப்படங்களை நான் பெ...

பௌத்த சுவட்டைத்தேடி: உம்பளச்சேரி

Image
நேற்று (15.5.2026) முதல் நாளிதழ்களிலும், ஊடக இணையதளங்களிலும்,  வேதாரண்யம் அருகில் உம்பளச்சேரி என்னுமிடத்தில் பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் ஒரு புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக வெளியான செய்தியைக் கண்டேன். பல ஆய்வாளர்களும், நண்பர்களும், ஊடகத்தினரும் அச் செய்தியை எனக்கு அனுப்பியிருந்தனர். அவர்களில் சிலர் இது புத்தர் சிலைதானா என்ற கருத்தினை என்னிடம் கேட்டிருந்தனர். அவர்களுக்கான என் மறுமொழியாக இப்பதிவினைப் பதிகின்றேன்.  தினமணி , 15.5.2026 The New Indian Express , 16.5.2026 தினத்தந்தி , 16.5.2026 தினமலர் , 16.5.2026 The Hindu , 16.5.2026 சிலையைக் கண்டு அது பற்றிய செய்தியைப் பகிர்ந்த நண்பர்களுக்கு அவர்களுடைய தேடல் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிற புத்தர் சிலைகளில் காணப்படுகின்ற கூறுகள் இல்லாத நிலையில் இது புத்தர் சிலை இல்லை என்பதை அறிய முடிகிறது.   1993 முதல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் 60க்கும் மேற்பட்ட புத்தர் கற்சிலைகளை நேரில் பார்த்துள்ளேன். அவை என்னுடைய நூலின் தமிழ்ப்...

பாரபட்சமற்ற வரலாற்றுப் பார்வை: உபாசகர் இ. அன்பன்

Image
வாழ்த்து மடல் பெருமிதத்திற்குரிய நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் "சோழ நாட்டில் பௌத்தம்" குறித்த வரலாற்று ஆய்வு நூல் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களாக வெளிவந்திருப்பது கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நமது நட்பின் ஊடக, கள ஆய்வுகளிலும், தரவு சேகரிப்பிலும் நீங்கள் காட்டி வந்த அர்ப்பணிப்பை நான் நன்கு அறிவேன். அன்று நான் அழைத்த கருத்தரங்கிற்கு வருகை தந்து, நீங்கள் வழங்கிய ஆழமான ஆய்வுக்கட்டுரையே உங்களின் புலமைக்குச் சான்றாக அமைந்தது. இன்று அது ஒரு முழுமையான வரலாற்றுப் பொக்கிஷமாக உருவெடுத்திருப்பது தமிழக வரலாற்று ஆய்வுலகத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இந்த நூலின் சிறப்புகள்: மறைக்கப்பட்ட வரலாறு: சோழ நாட்டின் நிலப்பரப்பில் பௌத்த சமயம் விட்டுச் சென்ற தடயங்களை அறிவியல்பூர்வமாகவும், சான்றாதாரங்களோடும் வெளிக் கொண்டு வந்துள்ளீர்கள். கள ஆய்வு: வெறும் நூலகத் தரவுகளோடு நின்றுவிடாமல், சிதிலமடைந்த சிலைகளையும், கல்வெட்டுகளையும் தேடித் தேடி நீங்கள் மேற்கொண்ட பயணம் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது. தெளிவான பார்...

சோழ நாட்டில் பௌத்தம்: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம்

Image
நேற்று (9.5.2026) தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் "சோழ நாட்டில் பௌத்தம்" என்னும் தலைப்பில் உரையாற்றினேன். உரையில் சோழ நாட்டில் இருந்த/இருக்கின்ற பௌத்த சமயச் சான்றுகளைப் பற்றி எடுத்துரைத்தேன். அத்துடன் பின்வருவன உள்ளிட்டவற்றைப் பகிர்ந்தேன். புத்தர் கற்சிலைகள், புத்தர் கோயில்கள், சிற்பங்கள், விகாரம், புத்த பாதம் ஆகியவற்றைப் பார்த்த அனுபவங்கள். நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை இந்திய மற்றும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து அஞ்சல் வழியாக (அப்போது அதிகமாக மின்னஞ்சல் அறிமுகமாகாத காலகட்டம்) பெற்று முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஆவணப்படுத்தியது. கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகள் முதன்முதலாக நாளிதழ்களில் வெளியானபோது அடைந்த உணர்வு. அடுத்தடுத்த களப்பணியின்போது முன்னர் பார்த்த சிலைகள் காணாமல் போதல். சில புத்தர் சிலைகள் அருங்காட்சியகங்களுக்கு இடம் பெயர்தல். சோழ நாட்டில் பௌத்தம் நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளின் (புது எழுத்து, 2022, 2023) அச்சேற்றம் பற்றிய அனுபவங்கள். ஒரு மழைக்காலத்தில் எங்கள் இல்லத்தில், சேகரிப்பில் இருந்த நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் ...