Posts

A milestone in Tamil historical and Buddhist studies: Dr Arangamallika

Image
I express my sincere thanks to Dr. B. Jambulingam for his patience in waiting for my review of his outstanding work, Buddhism in Chola Nadu . It is both my pleasure and privilege to read this book and write a note on it. Dr. B. Jambulingam is an erudite scholar who served  as an administrative staff at Thanjavur University for nearly three and half decades.  His devotion to and in-depth knowledge of Buddhism are highly remarkable. His continuous contributions to the study of Buddhism, particularly during the Chola period, are both authentic and valuable. The book reflects his keen interest in exploring Buddha statues, reviewing historical literature, examining historical accounts, and analysing references from the travelogues of the Chinese pilgrim Yuan Shuang. His documentation of Buddhist temples and viharas discovered across Tamil Nadu is exemplary. Through Dr B. Jambulingam' s extensive field research, he identified numerous Buddha statues during from the 10th to the 13th ...

பௌத்தம்-களப்பணி

Image
14.9.2013 அன்று ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரி  (Rotary Club of Thanjavur Cauvery) சார்பாக நடைபெற்ற வாராந்திரக் கூட்டத்தில் "பௌத்தம்-களப்பணி" என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன்.  அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அலுவலகப்பணியாளர்கள் பகுதி நேர முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொள்ளலாம் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆய்வியல் நிறைஞர் பட்டம் மேற்கொண்டபின் எளிதாக முனைவர்ப் பட்டம் மேற்கொள்ளும் சூழல். தஞ்சாவூரில் அருங்காட்சியகங்களில் முதன்முதலாக புத்தர் சிலைகளின் அமைப்பைக் காண்பதற்காக களப்பணி மேற்கொண்டது. அய்யம்பேட்டையில் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் துணையுடன் கண்டது. திருச்சி மாவட்டம், மங்கலத்தில் மீசையுடன் உள்ள புத்தரைக் கண்டுபிடித்து அச் செய்தி நாளிதழ்களில் வெளியானது. மூல அனுமார் கோயில் பின்புறம் இருந்த சமணர் சிலையை முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் உதவியுடன் காணச்சென்றது. போன்றவை உள்ளிட்ட பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்.  ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரியில்  கலந்துகொண்டு உரையாற்றியது ஒரு நி...

பௌத்த சுவட்டைத் தேடி: கரூர்

Image
26.9.1999 புதுக்கோட்டை மாவட்ட பௌத்த சமயச் சான்றுகளைக் காண்பதற்காக மேற்கொண்ட களப்பணியில் சுந்தரபாண்டியன்பட்டினம் புத்தரைப் பார்க்கத்திட்டமிட்டபோது கரூரில் உள்ள புத்தர் நினைவிற்கு வந்தார். தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார்கோயில் வழியாகக் கரூர் சென்றேன். அங்குள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தரைக் கண்டேன்.  அங்குள்ள கருப்பர்சாமிக்குக் கடா வெட்டுவது புத்தருக்குத் தெரியாமல் இருப்பதற்காக வலது பக்கம் தனியாக புத்தரை வைத்துள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வின்போது மூலவர் நிலவளமுடைய அய்யனார் சாமிக்கு முன்பாகத் திரையைப் போட்டுவிடுவதாகவும் கூறினர்.  அங்குள்ளோருக்கு நன்றி கூறிவிட்டு, அங்கிருந்து பொன்பற்றிக்குச் சென்றேன். அங்கு புத்தர் சிலை எதுவும் காணப்படவில்லை. அங்கிருந்து சுந்தரபாண்டியன்பட்டினம் சென்றேன் . அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதித்துள்ளோம். 10.10.2021 சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" நூல் அச்சுப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது அச்சிலையைக் காண்பதற்காக அங்குச் செல்ல விரும்பினேன். தொல்லியல் ஆய்வுக் கழக நிறு...

களப்பணியில் நிறைய சிரமங்களைச் சந்தித்தேன்

Image
உங்களைப் பற்றிய சிறுஅறிமுகம், கல்வி, பணியாற்றிய விவரங்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 2.4.1959இல் பிறந்தேன். பள்ளி, கல்லூரிப் படிப்பினை அங்கு நிறைவு செய்தேன். தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபின், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக் கெழுத்தராகச் சேர்ந்து, சுமார் 35 ஆண்டு காலம் பணியாற்றி, உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றேன். தங்களின் எம்பில் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு எங்கே நடைபெற்றது? நெறியாளர் யார்? தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (1995) என்ற தலைப்பில் எம்பில் ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டேன். இரண்டிற்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மைய இயக்குநர் பேராசிரியர் க.பாஸ்கரன் நெறியாளராக இருந்தார். பௌத்த ஆய்வு சிந்தனை எப்போது ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் எம்பில் பட்டத்திற்காக கல்கியின் வரலாற்றுப் புதினங்களில் ஆய்வு செய்ய விரும்பினேன். ஆய்வேட்டினை ஆங்கிலத்தில் அளிக்கவேண்டிய நிலையில், அது சிரமம் என்று உணர்ந்து தொடர்புடைய தலைப...

ஆனைமங்கலச்செப்பேடுகள் சொல்வது என்ன?

Image
சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் 1700-களில் டச்சு ஆளுமையின்போது நாகப்பட்டினத்துக்கு கிறிஸ்தவ மதப்பணிக்காக வந்த ஃபுளோரன்டியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன. தமிழ், சம்ஸ்கிருத மொழிகளைக் கொண்ட 21 செப்பேடுகளும் சுமார் 31 கிலோ எடையுடையவை. இதில் பிணைக்கப்பட்டுள்ள செப்பு வளையத்தில் மாமன்னர் ராஜேந்திரசோழனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.  இந்தச் செப்பேடுகளில் பௌத்த விகாரைக்கு ராஜராஜசோழன் வழங்கிய அறக்கொடைகள் வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நெதர்லாந்தில் லைடென் பல்கலைக்கழத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தச் செப்பேடுகளை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது, நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த  சோழர் கால ஆனைமங்கலச் செப்பேடுகள் தி ஹேக் நகரில் மே 16இல் நடைபெற்ற விழாவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.  தமிழர்களின் மிகச் சிறந்த பொக்கிஷமாகப் போற்றப்படும் இந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் குறித்து தஞ்சாவூரைச் ச...