வரலாற்று ஆய்வில் சிறு சேதாரச்சில்லும் உதவும்
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு வரலாற்று நூலின் பக்கங்களிலிருந்து சொல்லமுடியாத பெயர்தெரியாத ஓர் உணர்வு நம் மனதை கனக்கவைக்கிறது. காரணம், பீடும் பெருமையும் கொண்டிருந்த ஓர் மன்னர்குலமோ மத நிறுவனமோ அல்லது மற்ற ஏதோ ஓர் அமைப்போ காலவோட்டத்தில் பலகாரணிகளால் தன் நிலை இழந்து மறைவைத் தொட்டும் தொடாமலும் விட்டுப்போன அவற்றின் சுவடுகள் ஒரு சரித்திரத்தை அதன் பல நூற்றாண்டுகளின் வீழ்ச்சியை நாம் நூல் வாசிக்கும் சிறுபொழுதில் நம்முள் இறக்கிவைத்துவிடுகிறது. பரதகண்ட பூமிப்பரப்பில் பொ.ஆ.முன் ஐந்தாம் நூற்றாண்டில் கவுதமபுத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட புத்தமதம் தென்னிந்தியாவில்-தமிழகத்தில் இருந்தும் பின் மறைந்துபோனது. அது அக்கம்பக்க நாடுகளில் பரவியிருக்கிறது. அந்த வரலாற்றுப் பெருவெளியைப் பார்வையிட்டு அதனுள் சோழநாட்டை மட்டும் எல்லைகாட்டி அதுபற்றி வாசித்து அறியப்பட்ட, அதனுள் தேடிக்கிடைத்த ஆதாரங்கள் மெய்ப்பிக்க உதவும் அயல்நாட்டவர் குறிப்புகள் என்று ஒல்லும் வகையிலெல்லாம் உழைத்து மெய்ம்மை...