களப்பணியில் நிறைய சிரமங்களைச் சந்தித்தேன்: ஆதவன்/யாவரும் கேளீர்
உங்களைப் பற்றிய சிறுஅறிமுகம், கல்வி, பணியாற்றிய விவரங்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 2.4.1959இல் பிறந்தேன். பள்ளி, கல்லூரிப் படிப்பினை அங்கு நிறைவு செய்தேன். தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபின், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக் கெழுத்தராகச் சேர்ந்து, சுமார் 35 ஆண்டு காலம் பணியாற்றி, உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றேன். தங்களின் எம்பில் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு எங்கே நடைபெற்றது? நெறியாளர் யார்? தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (1995) என்ற தலைப்பில் எம்பில் ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டேன். இரண்டிற்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மைய இயக்குநர் பேராசிரியர் க.பாஸ்கரன் நெறியாளராக இருந்தார். பௌத்த ஆய்வு சிந்தனை எப்போது ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் எம்பில் பட்டத்திற்காக கல்கியின் வரலாற்றுப் புதினங்களில் ஆய்வு செய்ய விரும்பினேன். ஆய்வேட்டினை ஆங்கிலத்தில் அளிக்கவேண்டிய நிலையில், அது சிரமம் என்று உணர்ந்து தொடர்புடைய தலைப...