பௌத்த சுவட்டைத்தேடி: உம்பளச்சேரி
நேற்று (15.5.2026) முதல் நாளிதழ்களிலும், ஊடக இணையதளங்களிலும், வேதாரண்யம் அருகில் உம்பளச்சேரி என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக வெளியான செய்தியைக் கண்டேன். பல ஆய்வாளர்களும், நண்பர்களும், ஊடகத்தினரும் அச் செய்தியை எனக்கு அனுப்பியிருந்தனர். அவர்களில் சிலர் இது புத்தர் சிலைதானா என்ற கருத்தினை என்னிடம் கேட்டிருந்தனர். அவர்களுக்கான என் மறுமொழியாக இப்பதிவினைப் பதிகின்றேன். தினமணி , 15.5.2026 The New Indian Express , 16.5.2026 தினத்தந்தி , 16.5.2026 தினமலர் , 16.5.2026 The Hindu , 16.5.2026 சிலையைக் கண்டு அது பற்றிய செய்தியைப் பகிர்ந்த நண்பர்களுக்கு அவர்களுடைய தேடல் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிற புத்தர் சிலைகளில் காணப்படுகின்ற கூறுகள் இல்லாத நிலையில் இது புத்தர் சிலை இல்லை என்பதை அறிய முடிகிறது. 1993 முதல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் 60க்கும் மேற்பட்ட புத்தர் கற்சிலைகளை நேரில் பார்த்துள்ளேன். அவை என்னுடைய நூலின் தமிழ்ப்பதிப்பிலும் ( சோழ நாட்டில் பௌத்த...