Posts

Showing posts from June, 2023

சோழ நாட்டில் பௌத்தம் : மதிப்புரை : பேராசிரியர் அ.மார்க்ஸ்

Image
என் நூலுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் (அலைபேசி 94441 20582) அவர்கள் வழங்கியுள்ள மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். பேராசிரியர் அ.மார்க்ஸ்   தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள முனைவர் திரு. பா. ஜம்புலிங்கம் அவர்களின் மிகச் சமீபத்தில் வெளிவந்துள்ள நூல் இது. பெரிய அளவில் கெட்டி அட்டையில் ஏராளமான புத்தரின் திரு உருவச் சிலைகளின் துல்லியமான படங்களுடன் இது வந்துள்ளது. 'சோழ நாட்டில் பவுத்தம்' எனும் பெயரில் அவர் தன் ஆய்வுகளின் ஊடாகக் காண நேர்ந்த புத்தர் சிலைகள் குறித்து உரிய படங்களுடன் வந்துள்ள நூல். பெரிய வடிவில் (277 mm x 240 mm) வெளிவந்துள்ள இதன் விலை குறித்த தகவல்கள் இறுதியில். சோழ நாடு முழுவதும் ஒரு காலகட்டத்தில் பெரிய அளவில் பௌத்தம் மற்றும் சமணம் ஆகியன தழைத்திருந்ததற்கு ஆதாரமாக ஏராளமான புத்த சிலைகளும், சமண ஆலயங்களும் இன்றுவரை ஆங்காங்கு தமிழகம் முழுவதும் உள்ளன. சமண ஆலயங்கள் உரிய முறைகளில் வணங்கப் படுவதும், பௌத்த அடையாளங்கள் ஆங்காங்கு இப்படி அவ்வப்போது கிடைத்து வருவதும் குறித்து நான் கண்ணில் படும்போதெல்லாம் பதிந்து வருவதையும் ஒரு

பௌத்த சுவட்டைத் தேடி : பூம்புகார்

Image
13 ஏப்ரல் 2023இல் சின்னமேடு புத்தர், புத்தர் பாதம், புத்த விகாரை ஆகியவற்றைக் காண்பதற்காக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகாருக்குக் களப்பணி மேற்கொண்டேன். இவை வரலாற்று ஆர்வலர்களும், பௌத்தம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்பவர்களும் அவசியம் பார்க்கவேண்டியவையாகும். அத்துடன் சதுக்க பூதங்களும். களப்பணியின்போது முதலில் பூம்புகார் ஆழ்கடல் தொல்லியல் அகழ்வைப்பகம் சென்றேன். என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வேட்டிலும் ( சோழ நாட்டில் பௌத்தம் , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) நூலிலும் ( சோழ நாட்டில் பௌத்தம் , புது எழுத்து, 2022), துறையிலிருந்து அப்போது பெற்ற சின்னமேடு புத்தரின் ஒளிப்படத்தை இணைத்திருந்தேன். தற்போது காட்சிக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சின்னமேடு புத்தரின் சிற்பத்தைக் கண்டேன். அச்சிற்பம் காட்சிப்பேழையில் அழகாக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரே சிற்பம் என்ற பெருமையைக் கொண்டதாகும். முந்தைய களப்பணிகளின்போது அந்த அருங்காட்சியகத்தில் புத்தர் பாதம் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அதனைப் பற்றிக் கேட்டபோது புத்தர் பாதம் அங்கு இல்லை என்று தெரிவித்தனர். சின்னமேடு ப

பௌத்த சுவட்டைத் தேடி : மீண்டும் நாகப்பட்டினம்

Image
8 ஏப்ரல் 2023இல் புதூர் புத்தரைப் பார்த்தபின் தஞ்சாவூர் திரும்ப ஆயத்தமானபோது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர்  கிராந்தி, சந்தைத்தோப்பு புத்தர்களைப் பார்த்ததும் , கிராந்தி புத்தரைப் பற்றிய செய்தியை நாளிதழ்களுக்குத் தந்ததும் நினைவிற்கு வந்தன. பயணத்திட்டத்தை மாற்றிக்கொண்டேன். திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் நோக்கிப் பேருந்தில் பயணிக்கத் தொடங்கினேன்.  பேருந்தில் நாகை வந்து சேர்ந்து, விகாரை இருந்த இடம் என்று கூறப்படுகின்ற இடத்தை நோக்கி நடந்தேன். பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அவ்விடம் இருந்தது.  வளாகத்தின் வெளியே சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு உள்ளே சென்றேன். அங்கிருந்த நீதிமன்றக்கட்டடத்தைப் பார்த்தேன். பூம்புகாரில் விகாரையின் எச்சங்களை இன்றும் காணமுடியும். ஆனால் நாகப்பட்டினத்தில் விகாரையின் எச்சங்களை அந்த அளவிற்குக் காணமுடியாது.  அவ்வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்,  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம்,  சார்நிலைக்கருவூலம், வெளிப்பாளையம் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களைக் காணமுடிந்தது. ஒரு காலத்தில் புத்த விகாரை இருந்த இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் மனதி