Posts

Showing posts from March, 2024

தமிழாய்வுக் களஞ்சியம் : கோயில்களில் புத்தர் சிலைகள்

Image
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் சார்பாக வெளிவருகின்ற  தமிழாய்வுக் களஞ்சியம்  முதல் இதழ் (தமிழாய்வு 1, களஞ்சியம் 1, ஜனவரி-மார்ச் 2024) கிடைக்கப் பெற்றேன்.  இந்த தமிழ்ச்செம்மொழி வரலாற்று இலக்கிய ஆய்விதழ், பதிவு செய்யப்பெற்ற இதழாகவும், பல்கலைக்கழக மானியக்குழுவின் இசைவு பெற்ற இதழாகவும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டு நிலைகளை விளக்குவதும், வரலாறு முதல் வாசகர் கடிதம் வரை துலக்குவதும் இதழின் நோக்கமாகும் என்று தமிழாய்வுக் களஞ்சியத்தின் ஆசிரியருமான முனைவர் சி.இலட்சுமணன் கூறுகிறார்.  48 பக்கங்களைக் கொண்ட இவ்விதழ் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, தொல்லியல் உள்ளிட்ட  பல துறையிலான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களான முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம், பேரா. ச.அகத்தியலிங்கம், பேரா.   இ.சுந்தரமூர்த்தி ஆகியோரின் வாழ்வியலும், படைப்புகளும் முதல் மூன்று கட்டுரைகளாக அமைகின்றன. இலக்கியங்களில் கோட்டைகள், புதுக்கோட்டை தொண்டைமான், கோயில்களில் புத்தர் சிலைகள், திருமுருகாற்றுப்படை பாடவகுப்பு, மகாகவி பாரத