சமண சுவட்டைத் தேடி

மன்னார்குடி, மல்லிநாதஸ்வாமி ஜினாலயத்தின் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று (9 மே 2025) சமண சுவட்டைத் தேடி என்னும் தலைப்பில் உரையாற்றினேன். வாய்ப்பு தந்த திரு பத்மராஜ் ராமசாமி உள்ளிட்ட விழாக்குழுவினருக்கும், உடன் வந்த திரு ராமகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றி. உரையின் சுருக்கத்தைக் காண்பதற்கு முன்பாகக் கோயிலைச் சற்றே சுற்றி வருவோம். தொடர்ந்து உரையைக் காண்போம். உரையின் சுருக்கம் மன்னார்குடி மல்லிநாதஸ்வாமி ஜீனாலய பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதை எனக்குக் கிடைத்த ஒரு பெரும்பேறாகக் கருதுகிறேன். ஒரு பத்தியாக என்னுடைய முனைவர்ப்பட்ட ஆய்வேட்டில் இடம்பெற்ற குறிப்பானது சற்றே என்னை சமணத்தை நோக்கி இழுத்துச்சென்றது. முனைவர்ப் பட்ட ஆய்விற்காக ( சோழ நாட்டில் பௌத்தம் , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) பௌத்த சமயம் தொடர்பான சான்றுகளைத் தேடிச் சென்றபோது சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறான சிலைகளை தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் செண்பகரன்யேஸ்வரர் கோயில் , திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி அருகில் தப்ளாம்புலியூர், அரியலூர் மாவ...