Posts

Showing posts from 2025

சமண சுவட்டைத் தேடி

Image
மன்னார்குடி, மல்லிநாதஸ்வாமி ஜினாலயத்தின் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று (9 மே 2025) சமண சுவட்டைத் தேடி என்னும் தலைப்பில் உரையாற்றினேன். வாய்ப்பு தந்த திரு பத்மராஜ் ராமசாமி உள்ளிட்ட விழாக்குழுவினருக்கும், உடன் வந்த திரு ராமகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றி.  உரையின் சுருக்கத்தைக் காண்பதற்கு முன்பாகக் கோயிலைச் சற்றே சுற்றி வருவோம். தொடர்ந்து உரையைக் காண்போம். உரையின் சுருக்கம் மன்னார்குடி மல்லிநாதஸ்வாமி ஜீனாலய பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதை எனக்குக் கிடைத்த ஒரு பெரும்பேறாகக் கருதுகிறேன். ஒரு பத்தியாக என்னுடைய முனைவர்ப்பட்ட ஆய்வேட்டில் இடம்பெற்ற குறிப்பானது சற்றே என்னை சமணத்தை நோக்கி இழுத்துச்சென்றது. முனைவர்ப் பட்ட ஆய்விற்காக ( சோழ நாட்டில் பௌத்தம் , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) பௌத்த சமயம் தொடர்பான சான்றுகளைத் தேடிச் சென்றபோது சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறான சிலைகளை தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் செண்பகரன்யேஸ்வரர் கோயில் ,  திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி அருகில்  தப்ளாம்புலியூர்,   அரியலூர் மாவ...

தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்

Image
சோழ நாட்டில் கல்வெட்டு, புத்தர் சிலைகள், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி, புத்தர் சிற்பங்கள் ஆகிய சான்றுகளைக் கொண்ட பெருமை உடையது தஞ்சாவூர் மாவட்டமாகும். கும்பகோணம், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள செவ்வப்ப நாயக்கர் காலக் கல்வெட்டின் மூலமாக திருவிளந்துறையில் ஒரு புத்தர் கோயில் இருந்ததை அறியமுடிகிறது. செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின்போது விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்ட இக்கல்வெட்டு குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் ஆகும். தற்போது எலந்துறை என்றழைக்கப்படும் அவ்வூரில் புத்தர் கோயில் இருந்ததற்கான எச்சங்கள் காணப்பெறவில்லை. கும்பகோணத்தில் பௌத்தக் கோயில் இருந்ததை உணர்த்துகின்ற அண்மைக்காலச் சான்று இதுவேயாகும். இப்பகுதியில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, தஞ்சாவூர், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பழையாறை, பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. பெரும்பாலான புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் உள்ளன. இச்சிலைகள் சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்...

பௌத்தத் தமிழியல் பொதுவியல் (தொகுதி 1) : முனைவர் சு.மாதவன்

Image
ஆய்வு வாழ்த்துரை முனைவர் சு.மாதவன் எழுதியுள்ள பௌத்தத் தமிழியல்-பொதுவியல் 1 என்ற இந்நூல் எட்டு கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு பெரிய தேடலை இந்நூலின் மூலம் ஆரம்பிக்கின்ற நூலாசிரியர் பௌத்த மற்றும் சமணம் தொடர்பான மொழி, வரலாறு, மெய்யியல் உள்ளிட்ட பொருண்மைகளை தமிழ் இலக்கியத் தளத்திலும், பிற தளங்களிலும் அமைத்து அவற்றை நடைமுறை வாழ்வியலோடு ஒத்து நோக்குகின்றார். இக்கட்டுரைகளைப் பற்றிய ஒரு பறவைப்பார்வை மூலமாக ஆசிரியரின் நுண்மான் நுழைபுலத்தினை அறியமுடியும். “அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்” என்ற முதல் கட்டுரையில் அறம், தருமம், நீதி ஆகிய மூன்றும் இலக்கியத் தமிழ் மரபிலும் இந்தியத் தத்துவ மரபிலும் கொண்டுள்ள தனித்த சிறப்பியல்புகளும், பொதுவியல்புகளும், பயனுறும் இடம், சூழல், விளைவு ஆகியவற்றுக்கேற்ப பொருள் வேறுபாடுகளும் கொண்டுள்ளமை ஒப்புநோக்கீட்டு அளவில் ஆராயப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய மரபில் வைதீக மரபு, அவைதீக மரபு கலந்து வெளிப்படும் நிலையில் தருமம், நீதி என்பதோடு மட்டுமன்றி புண்ணியம் என்பதோடும் இணைத்து குறிப்பிடப்படும் அனைத்து நன்னெறிகளையும் சுட்டும் ஒரே சொல்லா...

மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தம்

Image
மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தச் சமயச் சான்றுகளில் முதன்மையான இடத்தைப் பெறுவது பூம்புகார் எனப்படுகின்ற காவிரிப்பூம்பட்டினம் ஆகும் . தொண்டை நாட்டில் காஞ்சிபுரத்தைப் போல சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்த பௌத்த மையமாக விளங்கியது . இவ்வூர் சங்க காலம் முதற்கொண்டு பௌத்த சமயச் செல்வாக்கினைக் கொண்டிருந்தது . கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் என்று பெயர் பெறும் . 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் தலைசிறந்த பட்டினமாகத் திகழ்ந்தது . அந்நாளில் பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறித்தது . பூம்பட்டினம் எனவும் , பூம்புகார் எனவும் அந்நகர்க்கு அமைந்த பெயர்களை ஆராயும்போது , ஓர் அழகிய கடற்கரை நகராக அது விளங்கியதை உணரமுடிகிறது .  பொ . ஆ . மு .3 ஆம் நூற்றாண்டில் மகிந்தர் இலங்கைக்குச் சென்று பௌத்த சமயத்தைப் பரப்புவதற்கு முன்பாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி அங்கு ஏழு பௌத்த விகாரங்களைக் கட்டினார் என்றும் , சிலப்பதிகாரத்திலும் , மணிமேகலையிலும் கூறப்படுகின்ற இந்திர விகாரங்கள் இவர்...