Posts

Showing posts from November, 2022

சோழ நாட்டில் பௌத்தம் : மதிப்புரை : திரு கரந்தை ஜெயக்குமார்

Image
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலினைப் பற்றிய மதிப்புரையை தன்னுடைய வலைப்பூவில் பகிர்ந்த திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.  இந்நூலுக்கான முதல் மதிப்புரை இதுவே என்பதில் மகிழ்ச்சி. --------   துபாய் புத்தர்   தேடிச் சோறுநிதந் தின்று – பல      சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர்      வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் –  பல வேடிக்கை மனிதரைப் போல – நான்      வீழ்வே னென்றுநினைத் தாயோ?      இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும். காரணம், வேடிக்கை மனிதராய் வீழ்ந்துவிடாமல், இப்புவியில், தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை, அழுத்தமாய் விட்டுச் செல்ல, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள்.      இவரது உழைப்பு.      இவரது தேடல்.      ஓயாத தேடல்.      ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப் படிப்பிற்காகத் தேடினார்.      முனைவர் பட்ட ஆய்விற்காகத் தேடினார்.      ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுவிட்டார்.      முனைவர் பட்டமும் பெற்றவிட்டார்.      தான் பார்த்துக் கொண்டிருந்த பணியி

சோழ நாட்டில் பௌத்தம் : புது எழுத்து

Image
  வலைப்பூவில் 150ஆவது பதிவு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, 1995) ஆய்வினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினையும் (சோழ நாட்டில் பௌத்தம், 1999) நிறைவு செய்து, தொடர்ந்து இரண்டு மாமாங்கத்திற்கும் மேலாக களப்பணி மேற்கொண்டு வரும் நிலையில் என் ஆய்வு மேம்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறுகிறது என்பதைப் பகிர்வதில் மகிழ்கின்றேன்.  பணியாற்றிக்கொண்டே களப்பணியினை மேற்கொண்டபோது எதிர்கொண்ட சூழல் சற்றே சிரமமானது. இருப்பினும் எந்த நிலையிலும் ஆய்வேட்டில் விடுபாடு இருக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு பல இடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை களப்பணி சென்றேன். அவ்வப்போது பெற்ற அனுபவங்களை என் வலைப்பூவில் பகிர்ந்ததோடு, அதில் மாற்றங்களோ, மேம்பாடோ மேற்கொள்ளும்போது அதனை பதிவின் இறுதியில் தரும் முறையைத் தொடர்ந்து கடைபிடிக்கிறேன். நிர்வாகப் பணியாளரான என்னை ஆய்வாளராக உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும்,  ஆய்வில் சேர்ந்த முதல் இன்றுவரை என் முயற்சிக்குத் துணை நிற்கும் அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், ஊடகத்தினர், தக