Posts

Showing posts from June, 2026

பௌத்த சுவட்டைத் தேடி: கரூர்

Image
26.9.1999 புதுக்கோட்டை மாவட்ட பௌத்த சமயச் சான்றுகளைக் காண்பதற்காக மேற்கொண்ட களப்பணியில் சுந்தரபாண்டியன்பட்டினம் புத்தரைப் பார்க்கத்திட்டமிட்டபோது கரூரில் உள்ள புத்தர் நினைவிற்கு வந்தார். தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார்கோயில் வழியாகக் கரூர் சென்றேன். அங்குள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தரைக் கண்டேன்.  அங்குள்ள கருப்பர்சாமிக்குக் கடா வெட்டுவது புத்தருக்குத் தெரியாமல் இருப்பதற்காக வலது பக்கம் தனியாக புத்தரை வைத்துள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வின்போது மூலவர் நிலவளமுடைய அய்யனார் சாமிக்கு முன்பாகத் திரையைப் போட்டுவிடுவதாகவும் கூறினர்.  அங்குள்ளோருக்கு நன்றி கூறிவிட்டு, அங்கிருந்து பொன்பற்றிக்குச் சென்றேன். அங்கு புத்தர் சிலை எதுவும் காணப்படவில்லை. அங்கிருந்து சுந்தரபாண்டியன்பட்டினம் சென்றேன் . அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதித்துள்ளோம். 10.10.2021 சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" நூல் அச்சுப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது அச்சிலையைக் காண்பதற்காக அங்குச் செல்ல விரும்பினேன். தொல்லியல் ஆய்வுக் கழக நிறு...