Posts

Showing posts from 2016

வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம்

Image
வலைப்பதிவர் திருமதி தேனம்மை லெஷ்மணன், அவரது தளத்தின் சாட்டர்டே போஸ்ட் பதிவிற்காக என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். என் பௌத்த ஆய்வினை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையை அவரது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். அவர் என்னை அறிமுகப்படுத்திய விதம் என்னை நெகிழவைத்துவிட்டது.  எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.  இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இவரைப் பற்றி முழுமையாக இங்கே வாசியுங்கள் :) ...

பெரம்பலூர் திரு இரத்தினம் ஜெயபால் வருகை

Image
ஆகஸ்டு 2016இல் ஒரு நாள். பெரம்பலூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. திரு இரத்தினம் ஜெயபால் (மின்னஞ்சல்  jayabalrathinam@gmail.com ) என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். என் பௌத்த ஆய்வு தொடர்பான வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வருவதாகவும், தான் எழுதவுள்ள நூல் தொடர்பாக என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.  பிற நாள்களில் அலுவலகப்பணி என்ற நிலையில் அரசு விடுமுறை நாள்களில் மட்டுமே அறிஞர்களையும், நண்பர்களையும் ஆய்வு தொடர்பாக சந்தித்து வரும் நிலையில் வாய்ப்பான ஒரு விடுமுறை நாளில் வரும்படி கூறினேன்.  ஓய்வு நேரம் ஆய்வு நேரமே. திரு இரத்தினம் ஜெயபால் உடன் ஜம்புலிங்கம் (இல்ல நூலகத்தில்) இருவருக்கும் வசதியான 15 ஆகஸ்டு 2016 அன்று வருவதாகக் கூறி, அன்று வந்திருந்தார். பேரூராட்சியில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவர் தொல் பழங்காலம் முதல் தற்காலம் வரை பெரம்பலூர் வட்டார வரலாறு தொடர்பாக நூல் எழுதவுள்ளதாகவும், பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செய்திளைப் பற்றி அறிய விரும்புவதாகவும் தன் ஆவலை வெளிப்படுத்தினார். பெரம்பலூரைத் தலைநகராகக் ...

பௌத்த சுவட்டைத் தேடி : கங்கைகொண்ட சோழபுரம்

Image
10 பிப்ரவரி 1997 சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்வில் திருச்சி மாவட்டமும் அடங்கும் என்ற நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஊர்களுக்கு களப்பணி செல்லத் திட்டமிட்டேன். தஞ்சாவூரில் பல இடங்களைச் சுற்றியதால் ஓரளவு என்னால் திட்டமிட முடிந்தது. திருச்சியில் பார்க்வேண்டியவை மற்றும் பார்க்க வேண்டியவர்கள் என்ற நிலையில் திட்டமிட்டு தொல்லியல் துறை பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் அருங்காட்சியகம் சென்றேன்.  அப்போது திருச்சி அருங்காட்சியக் காப்பாளர் திரு ராஜமோகன் அவர்களுடன் விவாதித்ததில் எனக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று, அரியலூர் கோட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரு புத்தர் சிலை என்பதுதான். நான் களப்பணி சென்ற காலத்தில் அரியலூர் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. ஆய்வின் களம் என்ற நிலையில் அரியலூர் செல்லும் நாளுக்காகக் காத்திருந்தேன்.   டி.என்.வாசுதேவராவ் (1979) ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாகக் குறிப்பிட்ட இடங்களில் அரியலூர் புத்தரும் ஒன்று. புதுச்சேரி பிரெஞ்சு ஆ...

பௌத்த சுவட்டைத் தேடி : சுத்தமல்லி

Image
ஆகஸ்டு 1999 பௌத்த ஆய்வு தொடர்பாக களப்பணி மேற்கொண்டபோது தமிழகத்திலுள்ள பல அருங்காட்சியகங்களுக்குச் சென்று சோழ நாட்டு புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கச் சென்றேன். களத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவத்திலிருந்து வித்தியாசமானது அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவம். அவ்வகையில் சுத்தமல்லி சிலையைக் கண்டேன். இந்த சுத்தமல்லி எந்த மாவட்டத்தில் தற்பொழுது உள்ளது என்ற ஆர்வத்தை உண்டாக்கியது இந்தக் களப்பணி. வாருங்கள் பயணிப்போம். சுத்தமல்லி புத்தர் (அரசு அருங்காட்சியகம், சென்னை) சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் சென்றபோது சோழ நாடு தொடர்பான மூன்று புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. அவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவலஞ்சுழி (நின்ற நிலை புத்தர்), எரையூர் (அமர்ந்த நிலை) மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுத்தமல்லி (அமர்ந்த நிலை) என்ற குறிப்புடன் இருந்தன. முதன்முதலாக நின்ற நிலையிலான புத்தரின் கற்சிலையை அங்குதான் கண்டேன். சுத்தமல்லி புத்தர் சிலை 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்ற குறிப்போடு (Accession No.1432/62) காணப்பட்டது. தஞ்...

புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் : எஸ்.ஏ.எதிரிவீர

Image
கடந்த பதிவில் களப்பணி சென்றுவந்த நிலையில் தற்போது பௌத்தக் கொள்கைகள் தொடர்பான ஒரு நூலைப் பார்ப்போம். ஆய்வில் சேர்ந்த காலகட்டத்தில் நான் படித்த நூல்களில் ஒன்று பௌத்த அடிப்படைக் கொள்கைகளைக் கொண்ட புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் என்னும் நூல்.  பௌத்தக் கொள்கைகளை மிகவும் எளிதாக இந்நூல் முன்வைக்கிறது. புத்தரும் பவுத்தமும், புத்தரின் வாழ்க்கை, தம்மம், சில அடிப்படை போதனைகள், நான்கு உன்னத வாய்மைகள், உன்னத எண்வழிப்பாதை, மனித ஆளுமையின் பகுப்பாய்வு, இருப்பின் உண்மை நிலை, மறுபிறப்பு, தியானம், நிப்பாணம், அறவோர், சங்கம் போன்றவை உள்ளிட்ட 21 தலைப்புகளைக் கொண்டமைந்துள்ளது. இந்நூலில் காணப்படும் சில கருத்துகளைக் காண்போம். புத்தரின் போதனைகள் கற்கத்தக்கன. பயிலத்தக்கன. உணரத்தக்கன. நடைமுறைப்படுத்துதலும், உணர்தலும் வலியுறுத்தப்படுகின்றன. ஏனெனில் வை உடனுக்குடன் பயனளிக்கின்றன. (ப.8) ஒருவர் ஒரு கயிற்கைக் கண்டு பாம்பென எண்ணிக்கொண்டால் அங்கே அச்சம், சலனம், கவலை, துன்பம் அனைத்தும் தோன்றுகிறது. இருந்தாலும், அது உண்மையில் ஒரு துண்டுக்கயிறே என்று அவர் அறியமுற்படும்போது அச்சம், சலனம், கவலை, துன்பம் ஆகிய எதுவ...

பௌத்த சுவட்டைத் தேடி : கீழவாசல்

Image
1999இல் புதுச்சேரி  பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் (French Institute of Pondicherry)  புத்தர் சிலை தொகுப்பில் இருந்த புகைப்படங்களில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள வீரபத்திரர் சிற்பத்தைக் கண்டபோது, அது புத்தர் அல்ல என்றதும், நான் தெரிவித்ததன் அடிப்படையில் அந்நிறுவனத்தார் உரிய திருத்தத்தினை தம் தொகுப்பில் மேற்கொண்டதும், அந்த சிலையைப் பார்க்க சுமார் 20 ஆண்டுகள் ஆனதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். 1999இல் தொடங்கிய தேடல் சூன் 2016இல்  நிசும்பசூதனி கோயிலின் குடமுழுக்கின்போது  நிறைவேறியது.  சற்றே பின்னோக்கிச் செல்வோமா? பிப்ரவரி 1999 முதன்முதலாக என் ஆய்வு தொடர்பாக புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களைத் திரட்ட புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றபோது அங்குள்ள சுமார் 50க்கு மேற்பட்ட புத்தர் சிற்பங்கள் தொடர்பான பதிவுகளைக் காணமுடிந்தது. அப்பதிவுகளில் (எண்.5671.7) ஒரு சிலை கீழவாசல், தஞ்சாவூர் என்ற குறிப்புடன் வீரபத்திரர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புத்தர் சிலைகளைப் பற்றிய தொகுப்பில் இவ்வாறான புகைப்படம் இருந்தது வித்தியாசமாக இருந்தது.  பாண்டிச்சேரி களப்பண...

தம்ம பதம் : ப.ராமஸ்வாமி

Image
புத்த பெருமான் அருளிய அறநெறிகளைக் கொண்டது தம்ம பதம் . பௌத்தத் திருமுறைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்நூல் ப.ராமஸ்வாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இரட்டைச் செய்யுட்கள், கருத்துடைமை, சிந்தனை, புஷ்பங்கள், பேதை, ஞானி, முனிவர், ஆயிரம், தீயொழுக்கம், தண்டனை, முதுமை, ஆன்மா, உலகம், புத்தர், களிப்பு, இன்பம், கோபம், குற்றம், சான்றோர், மார்க்கம், பலகை, நரகம், யானை, அவா பிக்கு, பிராமணன் என்ற 26 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.    இந் நூலில் உள்ள அறநெறிக்கருத்துகள் சிலவற்றைப் பார்ப்போம்.   இரட்டைச் செய்யுள் (ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்திரங்களால் விளக்கப் பெற்றது) கூரை செம்மையாக வேயப்படாத வீட்டினுள் மழை நீர் பாய்வதுபோல் நன்னெறிப் பயிற்சியில்லாத மனத்தினுள் ஆசைகள் புகுந்துவிடுகின்றன. (13) கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழை நீர் இறங்காததுபோல் நன்னெறிப் பயிற்சியுள்ள மனத்தினுள் ஆசைகள் நுழைய முடியா. (14) பேதை   எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப்போடு அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவே நற்செயல். (10)  ஞானி   நன...

பௌத்த சுவட்டைத் தேடி : பரிநிர்வாண புத்தர் சிலை

Image
சோழ நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பௌத்தம் தொடர்பான ஆய்வின்போது அமர்ந்த நிலை மற்றும் நின்ற நிலையிலான புத்தர் சிலைகளைப் பார்த்துள்ளேன். எனது பௌத்த ஆய்வினைப் பாராட்டும் நண்பர்களில் ஒருவரான முனைவர் இரா. பாவேந்தன் பரிநிர்வாண புத்தர் சிலையின் புகைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பினைத் தந்துள்ளார். அச்சிலையைப் பற்றி அறிய அழைக்கிறேன். ஏப்ரல் 19 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக தமிழ் உதவிப்பேராசிரியரும், துணைவேந்தரின் தொழில்நுட்ப மற்றும் தனி அலுவலுருமான நண்பர் முனைவர் இரா. பாவேந்தன் அவர்கள் தன் முகநூல் பதிவாக கீழ்க்கண்ட கிடந்த நிலையிலான புத்தரைப் பற்றிய ஒரு பதிவினை எழுதியிருந்தார். முன்பொரு முறை இந்த புத்தர் சிலையின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அப்போது புகைப்படத்தோடு எவ்வித குறிப்பும் காணப்படவில்லை. "அரிய புத்தர் சிற்பம் ... கண்டுபிடிக்க உதவுங்கள்.. தமிழகத்தில் அழிந்து வரும்/அழிக்கப்பட்டு வரும் பெளத்த கலை வரலாற்று பொக்கிஷங்களில் இந்த படத்தில் உள்ள சிற்பம் என் கவனத்தை கவர்ந்தது. கடந்த ஆண்டு இந்த புகைப்படத்தை என் முக நூலில் வெளியிட்டேன். ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரிடம் எந்...

பௌத்த சுவட்டைத் தேடி : வயலக்காவூர்

Image
இளம்போதி என்னும் வலைப்பூவில் எழுதி வரும் திரு ஏழு. கலைக்கோவன், ஒரு புகைப்படத்தை அனுப்பி அது புத்தரா, சமண தீர்த்தங்கரரா என்று கேட்டுள்ளார். புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றியும், காஞ்சீபுரம் பகுதியில் காணப்படும் புத்தர் சிலைகளைப் பற்றியும் அவர் எழுதி வருகிறார்.  அச்சிலையைப் பார்க்க சோழ நாட்டிலிருந்து காஞ்சீபுரம் மாவட்டத்திற்குப் போவோம் வாருங்கள்.   காஞ்சீபுரம் வட்டம் வாலாஜாபாத் வட்டம், நெய்க்காடுபாக்கம் வயலக்காவூர் என்னுமிடத்தில் உள்ள அ ச்சிலை புத்தரா தீர்த்தங்கரரா என்ற ஐயத்தை பின்வரும் அடையாளங்கள் உண்டாக்குகின்றன என்று அவர் கூறியுள்ளார். 1) தோள் பட்டைக்கு மேல் உள்ள உருவம் 2) சீவர ஆடை 3) கையில் பூ போன்று உள்ளது. ஆனால் தாமரையா என்று சொல்ல முடியவில்லை. தெளிவாக இல்லை. தமிழகத்தில் சோழ நாட்டை (ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை) எனது களமாகக் கொண்டு புத்தர் சிலைகளையும், சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் பார்த்த நிலையில் ஓரிரு சிலைகளை மட்டுமே பிற பகுதிகளில் பார்த்துள்ளேன். பல இடங்களில் இருந்தும் இதுபோன்ற கடிதங்கள் வரும் நிலையில் அதிகமான பணியின் ...