Posts

Showing posts from 2024

ஓர் அரிய பெட்டகம் : முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Image
தமிழ்ப்பதிப்பினை வழங்கும் இனிய தருணம் (நவம்பர் 2022) ஆங்கிலப்பதிப்பினை வழங்கும் இனிய தருணம் (ஜூலை 2024) ஓர் அரிய பெட்டகம் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குறிஞ்சி மலரும். அதுபோன்றுதான் மிக அரிதாக ஆண்டுகள் பல கடந்து தமிழகத்தில் பெளத்தம் பற்றிய ஓரிரு நூல்கள் மலர்கின்றன. அதுபோன்றே பெளத்தம் பற்றி ஆய்வோர் இன்று தமிழகத்தில் மிகச்சிலரே. அவர்கள் வரிசையில் முனைவர் பா. ஜம்புலிங்கம் தன் கடின உழைப்பால் பெளத்தம் பற்றி ஆய்ந்து வருவதோடு முக்கிய தரவுகளை ஒளிப்படங்களுடன் ஆவணப்படுத்தியும் வருகின்றார். அவர்தம் கடுமையான உழைப்பின் அற்புதமான வெளிப்பாடுதான் சோழநாட்டில் பெளத்தம் எனும் இந்நூல். சங்க காலம் தொடங்கி தஞ்சையின் அரசர் செவ்வப்ப நாயக்கர் காலம் வரை (16ஆம் நூற்றாண்டு) சோழநாட்டில் உள்ள பெளத்த சமயம் சார்ந்த இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், விகாரங்கள் எனப் பல தரவுகளைக் காலவரிசைப்படி தொகுத்து ஆய்வு மேற்கொள்ளப்பெற்றுள்ளது. சோழநாட்டில் பெளத்த சமய முக்கிய கேந்திரங்களாக விளங்கிய இடங்கள் கடற்றுரை பட்டினங்களான பூம்புகாரும், நாகையும் ஆகும். நூலாசிரியர் காவிரிப்பூம்பட்டினம் பற்...

இவர் புத்தர் இல்லை, பகவர்

Image
இவர் புத்தர் இல்லை, பகவர். “கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் சிலை உள்ளது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்” என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். [1]   நாகேஸ்வரர் திருமஞ்சன வீதியிலுள்ள பகவத் (பகவ) விநாயகர் கோயிலின் கருவறையில் விநாயகர் சிலையும்,  முன் மண்டபத்தில் அவர் கூறிய சிலையும் உள்ளது. அவரது கருத்தை எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் அப்படியே பதிவுசெய்தேன். [2]   அக்கோயிலுக்கு அருகில் பகவத் படித்துறை உள்ளது.   தஞ்சாவூர் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், முதலமைச்சரான கோவிந்த தீட்சிதர் மற்றும் மராட்டிய மன்னர்கள் காவிரி ஆற்றங்கரைகளை அழகுபடுத்த விரும்பிப் படித்துறைகளையும், கோயில்களையும், நீராழி மண்டபங்களையும் கட்டினர். காவிரியின் இரு...

தமிழக பௌத்தம் குறித்தான ஒரு கலைக்களஞ்சியம் : பேரா.கனக. அஜிததாஸ்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: பேரா. கனக அஜிததாஸ்/ முக்குடை , செப்டம்பர் 2024 ------------------------------------------------------------------------------------------- திரு உதயசங்கர் முகநூல் பதிவு, 17 டிசம்பர் 2024 திரு அய்யம்பேட்டை செல்வராஜ் முகநூல் பதிவு, 19 டிசம்பர் 2024 12 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல் : கரந்தை ஜெயக்குமார்

Image
          சிந்தனை.      ஒரே சிந்தனை.      சற்றேரக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை. இந்த சிந்தனையை மையப்படுத்தியத் தேடல்.      தேடல் என்றால் சாதாரணத் தேடல் அல்ல.      பேருந்து.      மிதி வண்டி.      இரண்டும் இல்லையேல் நடை.      தன் குடும்பத்திற்காகத் தேடவில்லை.      தான் சார்ந்த சமூகத்திற்காகத் தேடவில்லை.      தான் சார்ந்த இனத்திற்காகத் தேடவில்லை.      சுத்தமான, சுயநலமற்றத் தேடல்.      துளியும் தன்னலமற்றத் தேடல்.      புத்தரைத் தேடுகிறார். தொடர்ந்து அவருடைய தளத்தில் வாசிக்க :  ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல்   ------------------------------------------------------------------------------------------- நன்றி: கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ , ...

Extraordinary Book : Supraja Kannan

Image
I am thrilled to share my thoughts on this extraordinary book, “Buddhism in Chola Nadu”. Delving deep into the book will transport us to an era, where the Buddhism was at its peak. It accords a plethora of information about the history and influence of Buddhism in the Chola dynasty. Some of the fascinating factors: Before entering into the subject, the author describes the geography of Chola Nadu in detail, including its districts and significant places associated with this ancient region, providing a solid foundation for understanding the history that follows. The author’s meticulous research and references from ancient texts reveal Buddhism’s flourishing past in these areas. The careful curation of quotes and names from various literary sources, including the revered  Thirukural, Silapathigaram, and Manimegalai  makes for an engaging read. The author elaborates on the religious significance of place names and the items associated with Buddha, making the content both interest...

புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம்

Image
புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம் தமிழகத்துப் பல்கலைக்கழக ஆய்வேடுகளின் தரம் குறைந்து வருகின்றது என்று கல்வியாளர்கள் குறைபட்டுக்கொள்வது உண்டு. இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயினும் தரமான ஆய்வாளர்கள் தோன்றித் தரமான ஆய்வேடுகளை வழங்கி வருவதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவ்வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சராகவும், சுருக்கெழுத்தராகவும் பணியைத் தொடங்கிப் படிப்படியே தம் அயராத உழைப்பாலும் ஆர்வத்தாலும் முனைவர் பட்டம் வரை ஆய்வு செய்து பட்டம் பெற்று, அப் பல்கலைக்கழத்தின் உதவிப் பதிவாளர் வரை உயர் பொறுப்புகளைப் பெற்ற முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் கடந்துவந்த பாதை, ஆய்வுத்துறையில் ஈடுபட விரும்பும் ஆய்வாளர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் என்பது என் நம்பிக்கை. பா. ஜம்புலிங்கம் அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் கும்பகோணத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் பாலகுருசாமி - தர்மாம்பாள். பெற்றோரின் கண்டிப்பால் மட்டும் பள்ளிக்குச் சென்ற இவருக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. நாளும் வகுப்பாசிரியர் “பிடிவாரண்டு” போட்டுதான் இவரைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்...

Buddhism in Chola Nadu, now in English

Image
I am delighted to inform one and all that  Buddhism in Chola Nadu   (Pudhu Ezuthu, Kaveripattinam, 2023), the English version of my earlier Tamil version ( Chola Nattil Bautham , Pudhu Ezuthu, Kaveripattinam, 2022)  has just come out. I wanted to publish it in Tamil and English, as soon as I was awarded a doctorate by Tamil University, Thanjavur, Tamil Nadu. But it took more than two decades to bring the work in Tamil and English.  Many scholars and friends advised me to bring out its English version. Their encouragement and my interest in translation to bring it out in English since the beginning helped me to achieve my goal.  I take this opportunity to extend my thanks to all of them.  It took more than one year to bring out this version. I made some modifications then and there. A Buddha statue from Thanjavur Museum, Thanjavur, Tamil Nadu, and a head of Buddha found during a field study in Pazhayarai, Thanjavur district, are additions to this work. The t...

மாமனிதர் திரு ச.அப்பாண்டைராஜ்

Image
தஞ்சாவூர் கோட்டை அமரர் திரு. சக்கரவர்த்தி முதலியார் இளைய மகன் அன்பகம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற, தஞ்சாவூர் ஜினாலயத்தின் அறங்காவலரும், ஏடகம் அமைப்பின் பெரும் புரவலரும் பொறுப்பாளருமான திரு அப்பாண்டைராஜ் ஐயா அவர்கள் இறந்த செய்தி எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. அவருடன் பழகிய அனைவருமே அவருடைய மென்மையான பேச்சு, கனிவான குணம், பழகும் இனிய பாங்கு போன்றவற்றை அறிவார்கள். அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகுவார். ஒருமுறை அவரிடம் பேசியவர்கூட அவரை என்றும் மறக்கமாட்டார்கள். அவர் ஏடகம் அமைப்பிற்கும், பழகிய என்னைப் போன்ற பலருக்கும் ஒரு பக்கபலமாக இருந்துவந்துள்ளார். சுறுசுறுப்பினையும், எப்பணியையும் ஏற்கும் துணிவையும் அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். வயதுவேறுபாடு பார்க்காமல் களத்தில் இறங்கி உழைக்கும் பெருமகனார். பணியில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் அவர் தந்த ஊக்கமானது எங்களை புத்துணர்ச்சியோடு முன்னெடுத்துச்செல்ல மிகவும் உதவியாக இருந்தது. எந்தவொரு சிரமமான சூழலையும் மாறாப்புன்னகையோடு எதிர்கொள்வார். நடக்கமுடியாது, சிரமம் என்று நாங்கள் நினைத்த பல பொறுப்புகளை தானே முன்னின்று நடத்திச் ச...