Posts

Showing posts from 2012

In search of imprints of Buddhism: Jaipur

Image
I get feedback from friends and well wishers about my research. Of them, the letters written by Prof. Mital of Jaipur (80) were touching. On seeing the quote about my research in "Bodhi's Tamil Afterglow" by S.Anand, Outlook , July 19, 2004,   he wrote his first letter on 31.7.2004 and subsequently he enquired much about Buddhism. In his first letter he said: "I had the privilege of living with the modern day Buddha - Mahatma Gandhi for four years 1944-48". In another letter he said: "...I am 80, if God gives me an opportunity to visit that side I shall make it a point to see you and that you in person....". I feel very happy to share with you the information contained in those letters. Now, over to Jaipur.     Letter dated 31.7.2004 Hari Om 31.7.2004       Dear Dr.Jambulingam,  I have learnt that the subject of your doctoral thesis was 'Buddhism in the Chola country'. This has aroused my curiousity. I earnestly ...

பௌத்த சுவட்டைத் தேடி : ஜெய்ப்பூர்

Image
எனது ஆய்வைப் பற்றிப் பலர் நேரிலும், தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் கருத்துக்கள் கூறிவருகின்றனர். அவற்றில் புதிய செய்திகளும், வாழ்த்துச்செய்திகளும் காணப்படும். அவ்வாறான ஒரு பதிவில் நான் மறக்க முடியாதது ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு பெரியவர் எழுதிய கடிதங்கள். 17 ஜூலை 2004 நாளிட்ட அவுட்லுக் இதழில் எனது ஆய்வை மேற்கோள் காட்டி வெளிவந்த கட்டுரையைப் படித்த, ஜெய்ப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் மிட்டல் எனக்கு எழுதிய கடிதங்களில் உள்ள செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.    கடிதம் நாள் 31.7.2004 பேரா.என்.எஸ் மிட்டல்  4/190 எஸ் எப் எஸ் அகர்வால் பார்ம், மான்ஸரோவர், ஜெய்ப்பூர், தொலைபேசி 0141-2400233 அன்புள்ள டாக்டர் ஜம்புலிங்கம்,    உங்களுடைய முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு சோழ நாட்டில் பௌத்தம் என்பதையறிந்தேன். அது என்னுள் ஓர் ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது. இந்த ஆய்வு தொடர்பான உங்களது கணிப்புகளையும், முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும், (இயலுமாயின்) சில புத்தர் சிற்பங்களின் வண்ணப் புகைப்படங்களையும்  எனக்கு அனுப்பிவைக்கும்படி மிகவும் ஆவல...

பௌத்த சுவட்டைத்தேடி : உள்ளிக்கோட்டை

Image
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டையில் 2004இல் நான் பார்த்த இளவரசனை மறுபடியும் அண்மையில் காணச்சென்றபோது பெற்ற அனுபவத்தை அறிய உள்ளிக்கோட்டை செல்வோம். நவம்பர் 2004 மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை என்னுமிடத்தில் புத்தர் சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்ல உரிய வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன். அவ்வாறான பெயரில் ஒரு ஊரைப் பற்றி நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. காத்திருந்த நாள் வந்தது. தஞ்சாவூர்- மன்னார்குடி-பட்டுக்கோடை என்ற நிலையில் மன்னார்குடி-பட்டுக்கோட்டை சாலையில் வடசேரி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் உள்ளிக்கோட்டை சென்றேன். வழக்கம்போல் பேருந்தைவிட்டு இறங்கியதும் புத்தரைப் பற்றி விசாரித்தேன். வயதான பெண்மணி ஒருவர் "இளவரசனைப் பார்க்கவந்தியா, சந்தோசமா இருக்குப்பா" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தபோதிலும் எனது நடையைத் தொடர்ந்தேன். அருகில் மற்றொருவரிடம் கேட்டபோது அவர், "குதிரையில வேகமாக வந்த இராஜகுமாரனைப் பார்க்க நீங்கள் வந்ததறிந்து மகிழ்ச்சி. இப்பகுதியில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு தொண்டு செய்துகொண்டிருக்கும் தவத்திரு மாதவகுமாரசுவா...

பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டைவாய்த்தலை

Image
பேட்டைவாய்த்தலையில் 1998இல் முதன்முதலாக புத்தர் சிலை பார்க்கச் சென்றது, அச்சிலை 2002இல் திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது, அவ்வாறு காட்சிப்படுத்தப்பட நான் அனுப்பிய அஞ்சலட்டைதான் காரணம் என 2008இல் அறிந்தது என்ற பின்னணியில் முதலில் பேட்டைவாய்த்தலைக்கும், பின்னர் திருச்சிக்கும் செல்வோம். மார்ச் 1998 திருச்சிப் பகுதியின் களப்பயணத்தின்போது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தேன். திருச்சியில் காணப்படும் புத்தர் சிற்பங்களைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய இடங்களில் ஒன்று திருச்சி-கோயம்புத்தூர் சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள பேட்டைவாய்த்தலை.அங்கு செல்ல உரிய நாளை எதிர்நோக்கியிருந்தேன். செப்டம்பர் 1998 திட்டமிட்ட ஒரு நாளில் பேருந்தில் அங்கு சென்றேன். பிற இடங்களைப் பார்த்துவிட்டு, அவ்வூரைச் சென்றடைய மாலை நேரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி, புத்தர் சிலை உள்ள இடத்தைப் பற்றி பல இடங்களில் விசாரித்தேன். அப்போது மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்புறம் ஒரு சிலை உள்ளதாகக் கூறினர். பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் ...

பௌத்த சுவட்டைத் தேடி : பட்டீஸ்வரம்

Image
என் ஆய்வு தொடங்கிய நாள் முதல் என்னை அதிகம் ஈர்த்த இடங்களில் ஒன்று பட்டீஸ்வரம் பகுதி. ஏனெனில் அப்பகுதியில் அதிகமான புத்தர் சிற்பங்கள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன. பட்டீஸ்வரம் அருகே கோபிநாதப்பெருமாள்கோயில் என்னுமிடத்தில் ஒரு தோப்பில் அருகருகே இரு புத்தர் சிற்பங்களை முந்தைய களப்பணியில் பார்த்தோம். மறுபடியும் தற்போது பட்டீஸ்வரம் போவோம் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள புத்தரைப் பார்க்க.   அக்டோபர் 1993 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்து, ஆய்வியல் நிறைஞர் ஆய்வு மேற்கொள்ள தொடங்கிய காலகட்டம். எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்த நிலையில் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் (1940) நூல் எனக்கு முதன்முதலாகத் துணைக்கு வந்தது. அவர் அந்நூலில் புத்தர் சிற்பங்கள் உள்ளதாகக் கூறிச் சில இடங்களைக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டிருந்த இடங்களில் தற்போது புத்தர் சிற்பங்கள் இருக்கிறனவா என்பதை உறுதி செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றேன். அவ்வாறாக அவர் சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட இடங்களில் ஒன்று கும்பகோணம் அருகிலுள்ள ...

பௌத்த சுவட்டைத் தேடி : கண்டிரமாணிக்கம்

Image
மறுபடியும் மிக அழகான புத்தர் சிற்பத்தைக் காணும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. இந்த சிற்பம் சோழ நாட்டில் காணப்படுகின்ற 66ஆவது புத்தர் சிற்பமாகும். நான் பார்த்த பெரிய சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த வாரம் இச்சிற்பத்தைப் பார்த்தபோது பெற்ற பிரமிப்பையும், தற்போது இச்சிற்பம் உள்ள நிலையை அறிந்தபின் பெற்ற வேதனையையும் பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் கண்டிரமாணிக்கம் செல்வோம். 23 ஜூலை 2012 கண்டிரமாணிக்கம் அருகே புத்தர் சிற்பம் இருப்பதாகத் தனக்குத்தகவல் வந்துள்ளதாக வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரணியம் அவர்கள் தெரிவித்தார். மறுநாளே அவருடன் அங்கு செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. 24 ஜூலை 2 012  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலுள்ள கண்டிரமாணிக்கம் என்னும் ஊருக்கு மகிழ்வுந்தில் சென்றோம். குறிப்பிட்ட இடத்தை நெருங்கும்போது தினத்தந்தி நிருபர் திரு சிவராமன் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் திரு காளிமுத்து ஆகியோர் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். புத்தர் சிற்பம் இருந்த இடத்திற்கு எங்களை அவர்கள் அழைத்துச்சென்றனர். மேட்டுத்தெருவில் திரு மணிகண்டன் வீட்டுக் கட...

சோழ நாட்டில் புத்தர் சிலைகள் : வழிபாடும் நம்பிக்கைகளும்

Image
சோழ நாட்டில் புத்தர் சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்படுவதைக் களப்பணியின்போது காணமுடிந்தது. அவ்வாறு வழிபாடு நடத்தப்படும் வழிபாடுகள் பற்றியும், புத்தர் தொடர்பாக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் பற்றியும் அறிந்துகொள்ள இம்மாதக் களப்பணியில் இணைந்துகொள்ள அழைக்கிறேன். அனைத்து இடங்களுக்கும் ஒரே முறை செல்வது சாத்தியமாகாது என்ற நிலையில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே உங்களைத் துணைக்கு அழைக்கிறேன், வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன். அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒகுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புட்பவனம், புத்தமங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி, விக்கிரமங்கலம், விக்ரமம், வெள்ளனூர் உள்ளிட்ட பல இடங்களில் புத்தருக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அய்யம்பேட்டையில் முனீஸ்வரன் என்றும், பெரண்டாக்கோட்டையில் சாம்பான் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி என்றும் புத்தரை வழிபடுகின்றனர். ஒகளூர் பெரம்பலூர் அருகே ஒகளூர் என்னும் சிற்றூரில் அமர்ந்த நிலையில் தியானகோலத்தில் புத்தர் சிலை ஒன்று ஊரின் நடுவில் உள்ளது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் வியாபா...

சோழ நாட்டில் புத்தர் செப்புத்திருமேனிகள்

Image
நாகப்பட்டின புத்தரின் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை ஆவணப்படுத்துவது என் ஆய்வின் ஒரு பகுதியாக அமையும். அதற்கு அடிப்படையாக அமைந்தது டி.என். இராமச்சந்திரன் எழுதிய  Nagapattinam and other Buddhist bronzes in Madras Museum   ( Director of Museums, Chennai, I Edition 1954, Reprint 1992) நூலாகும். இக்கட்டுரைக்கான தேடல் நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகளைப் பற்றியதாகும். நாகப்பட்டினம் என்றால் பௌத்த விகாரமும் அங்கிருந்த புத்தர் செப்புத்திருமேனிகளும் நினைவுக்கு வந்துவிடும்.  நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.   முதலாம் இராஜராஜன் (கி.பி.985 முதல் 1014 வரை) அனுமதியுடன் ஸ்ரீவிஜயநாட்டு மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மன் ஒரு பௌத்த விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டினான். இராஜராஜன் தனது 21ஆவது ஆட்சியாண்டில் நாகப்பட்டினம் அருகேயுள்ள ஆனைமங்கலம் என்ற ஊரைக் கொடையாக வழங்கினான். முதலாம் இராஜராஜனுக்குப் பின் அவனது மகன் இராஜேந்திரன் அதனை உறுதி செய்தான். அந்த விகாரம் இராஜராஜப்பெரும்பள்ளி என அழைக்கப்பட...