வரலாற்றுத் தரவுகளை மிகைப்படுத்தாதீர்கள்
கும்பகோணத்தில் தொடங்கிய உங்கள் கல்விப் பயணம், தமிழ்ப் பல்கலைக்கழகம் வரை எப்படி அமைந்தது? கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி ஆரம்பப்பள்ளியில் கற்ற கல்வி, தாத்தாவிடம் கற்றுக்கொண்ட நாளிதழ் வாசிப்புப்பழக்கம், அக்காலகட்டத்தில் பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப்பயிற்சி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது பெற்ற கடிதம் எழுதும் திறன் என்ற பின்புலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது அங்கிருந்த கல்விச்சூழல் பல நிலைகளில் கைகொடுத்தது. கல்வியாளர்களுக்கான தட்டச்சுப்பணிகளை மேற்கொண்டபோது பல அனுபவங்களைப் பெற்றேன். ஒரு காலத்தில் அலுவல்நிலைப்பணியாளராக இருந்தபோது நான் அனுப்பிய, தமிழ்ப் பல்கலைக்கழக செய்தி மலரிலும், காலாண்டிதழ்களிலும் என் கட்டுரைகளும், புத்தர் சிலை கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகளும் வெளியானது என் தொடர் முயற்சியின் வெற்றியாகக் கருதுகிறேன். தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்ற என்னை ஒரு ஆய்வாளனாக ஆக்கியது இந்தச் சூழலே. சோழ நாட்டின் பௌத்த, சமண வரலாற்றை ஆய்வு செய்யும் ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? கல்லூரிக்காலத்தில், 1970க...