Posts

Showing posts from August, 2026

ஆய்வாளர்களுக்கு அரும்பெரும் பொக்கிஷம்

Image
தமிழில் படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் வாசிப்பது அருமையாக இருக்கிறது 1993 தொடங்கி தற்பொழுது வரை காடுகரைகள் வயல்வெளிகள் என ஊரூராக அலைந்து திரிந்து அரும்பாடுப்பட்டு நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளையும், புடைப்புச் சிற்பங்களையும் கண்டுபிடித்து இருக்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள். இவைகளை தொகுத்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புது எழுத்து பதிப்பத்தின் மூலமாக வெளியிட்டு இருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த உயரிய வளவளத் தாளில் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களோடு சிறு குறிப்பும் வரைந்திருக்கிறார். இச்சிலைகளின் காலம் கிபி 10ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 15-17ம் நூற்றாண்டு வரைக்கும் நீளுகிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு அரும்பெரும் பொக்கிஷமாக திகழப் போகிறது. இவை பிற்கால சோழர்களின் ஆட்சியெல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கிடைத்தவை மட்டுமே. இதே போன்று பாண்டிய, சேர, பல்லவ நாடுகளிலும் இளைஞர்கள் களப்பணியில் ஈடுபட வேண்டுமென்பதற்கு அய்யா நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். போற்றுதலுக்குரிய இவ்வரிய பணியை செய்து கொடுத்த அய்யாவுக்கு நன்றி. --------------------------------------------------------------------------...