Posts

Showing posts from August, 2025

பௌத்த சுவட்டைத் தேடி: ஆவுடையார்கோயில்

Image
புதுக்கோட்டை, தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் திரு ஆ.மணிகண்டன்,  புதுக்கோட்டை   மாவட்டம்   ஆவுடையார்கோயிலில்  தான் கண்டுபிடித்த  தலையில்லாத ஒரு புத்தர் சிலை யைக் காண அழைக்கவே அவருடைய குழுவினருடன் 16 ஆகஸ்டு 2025இல் களப்பணி சென்றேன்.  அச்சிலையைப் பற்றியும்,  அது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளையும் காண்போம்.  ஆவுடையார்கோயில் பெரிய கண்மாய் பெருமடை வாய்க்கால் மேட்டில் உள்ள இச்சிலை இம்மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற இரண்டாவது புத்தர் சிலை ஆகும். இதனை உள்ளூரில் தலையில்லா சாமி என்றழைக்கின்றனர். இதற்குக் களிமண்ணால் தலை செய்து வைத்தால் மழை பெய்யும் என்று அவர்கள் நம்புகின்றனர்.  சோழ நாட்டில் இவ்வாறாகப் பல இடங்களில் புத்தரை மழையோடு தொடர்புபடுத்தி பல நம்பிக்கைகள் காணப்படுகின்றன . இந்தச் சிலையைப் பார்த்தபோது கீழக்குறிச்சி புத்தர் நினைவிற்கு வந்தார். சிலையின் அமைப்பும், இருந்த இடமும் சற்றொப்ப கீழக்குறிச்சியைப் போலவே இருந்தது.   48 செமீ உயரமுள்ள இச்சிலை பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் ச...

சமண சுவட்டைத் தேடி: வெள்ளாளவயல்

Image
புதுக்கோட்டை, தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் திரு ஆ.மணிகண்டன் குழுவினருடன் 16 ஆகஸ்டு 2025இல் மேற்கொண்ட களப்பணி.   பயணம் தொடரும்... தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் புத்தர் சிலைகளைப் பார்க்கச் சென்று சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்த்துள்ளேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடிப்பட்டியில் புத்தர் சிலையைப் பார்க்கச் சென்று, சமண தீர்த்தங்கரர் சிலையைப் பல ஆண்டுகளுக்குமு முன்னர் பார்த்துள்ளேன். தற்போது ஒரு அழகான சமண தீர்த்தங்கரர் சிலையைப் பார்த்தது நினைவில் நிற்கும் அனுபவம் ஆகும். இச்சிலையைக் காணச் சென்றபோது பார்த்த பிறிதொரு சிலையைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், வெள்ளாளக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மகாவீரர் சிலை தொடர்பான நாளிதழ் செய்திகள். ------------------------------------------------------------------------------------------- நன்றி: திரு ஆ.மணிகண்டன் குழுவினர்,  நாளிதழ்கள் ------------------------------------------------------------------------------------------- 29 ஆகஸ்டு 2025இல் மேம்படுத்தப்பட்டது.

கல்கத்தா அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகள் : ஆய்வுமணிக் கருத்தரங்கு

Image
  ------------------------------------------------------------------------------------------- நன்றி:  ஆய்வுமணி பதிப்பாசிரியர்  :  முனைவர் துரை. குணசேகரன் -------------------------------------------------------------------------------------------

அருமொழி சோழன் விருது

Image
சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவும், தஞ்சாவூர் தமிழ்ச்சங்கமும் இணைந்து 3 ஆகஸ்டு 2025ஆம் நாள் இராஜராஜசோழர் முடி சூடிய 1040ஆவது ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சாவூர் பெரிய கோயில் பெத்தண்ணன் கலையரங்கில் நடத்தின. இவ்விழாவில் அருமொழி சோழன் விருதினைப் பெற்றேன். (வலமிருந்து) உதயசங்கர், ச.கிருஷ்ணமூர்த்தி, பெ.வெங்கடேசன்,  பாபாஜி ராஜா போன்ஸ்லே, செ.இராமநாதன், ஜான் பீட்டர், ஜம்புலிங்கம், சொ.சாந்தலிங்கம்,க.பன்னீர்செல்வம், வி.ப.யதீஸ்குமார் உள்ளிட்டோர் தஞ்சாவூர், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மைசூர் இந்தியத் தொல் ஆய்வுத்துறை பேரறிஞர் முனைவர் க.பன்னீர்செல்வம், குழுத்தலைவர் மருத்துவர் சா.உதயசங்கர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை துணை இயக்குநர் திரு வி.ப.யதீஸ்குமார், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் துறைத்தலைவர் முனைவர் ச.இரவி, குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி, உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர், அறம் வரலாற்றாய்வு மையத் தலைவர் திரு அறம் கிருஷ்ணன், திரு செ.இராமநாதன், இந்து சமய அறநிலையத்...