Posts

Showing posts from June, 2025

அயோத்திதாசர் ஆதவன் விருது

Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களால் 19ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் ஏப்ரல் 2025இல் வெளியிடப்பட்டது.   இப்பட்டியலில் அயோத்திதாசர் ஆதவன் விருது எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா நாளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழைப் பெற்றேன். 24 ஜூன் 2025 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 4.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  விழா, அழைப்பிதழில் உள்ள நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி சிறப்பாக நடைபெற்றது.  என்னுடைய ஏற்புரையில் இவ்விருதிற்காக என்னைத் தேர்ந்தெடுத்த எழுச்சித்தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தேர்வுக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், விருதுகள் பெற்ற சக ஆளுமைகளுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.  இவ்விழாவில்  நிகழ்வில் பல துறைகளைச் சார்ந்த ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். ...

அறிவியலாளர் நெல்லை சு.முத்து

Image
அன்பு நண்பரும் அறிவியல் எழுத்தாளருமான திரு நெல்லை சு.முத்து அவர்கள் இயற்கையெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவருடைய எழுத்தும், வாசிப்பும் போற்றத்தக்கன. நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், மிகச்சிறந்த அறிவியல் நூல்களும் எழுதியவர். அவருடைய அறிவியல் ஆர்வத்தை பிறர் தம்மை அதில் ஈடுபடுத்திக்கொள்ளும் அளவிற்குப் பயன்படுத்தியவர். மிக எளிமையான சொற்களில் அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய அறிவியல் கட்டுரைகளைப் படிக்கும்போது நம்மை உடன் அழைத்துக்கொண்டுபோவது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். எங்கும் நெருடல் இன்றி அதே சமயத்தில் நீண்ட சொற்றொடரைப் பயன்படுத்தாமல் வாசிக்கும்போது மனதில் பதியும் அளவிற்கு எழுதும் ஆற்றல் படைத்தவர். அவர் சொற்களைப் பயன்படுத்தும் விதம் வியப்பினை உண்டாக்கும். அவருடைய மொழிபெயர்ப்பு ஆற்றல் ஆய்வாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். தி வீக் ஆங்கில இதழில் வெளியான நீங்கள் க்ளோன் செய்யப்படலாம் என்ற கட்டுரையினை மொழிபெயர்த்து அறிக அறிவியல் இதழில் எழுதினேன். படியாக்கம் தொடர்பாக நான் முதன்முதலாக எழுதிய அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு அதிகம் பாராட்டினார்....

திருச்சி மாவட்டத்தில் பௌத்தம்

Image
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 200 ஆவது கட்டுரை. தொடர்ந்து வாசித்து, ஆதரவு தரும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. திருச்சி மாவட்டத்தில் பௌத்தத்தின் சான்றுகளாக ஆயிரவேலி அயிலூர், கீழ்க்குறிச்சி, குழுமணி, திருச்சி, திருப்பராய்த்துறை, பேட்டைவாய்த்தலை (இரு சிலைகள்), மங்கலம், முசிறி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளும், கீழ்க்குறிச்சியில் ஒரு கல்வெட்டும் உள்ளன. இவற்றில் மூன்று புத்தர் சிலைகள் திருச்சி அருங்காட்சியகத்திலும், ஒரு சிலை மதுரை அருங்காட்சியகத்திலும் உள்ளன. தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகிலுள்ள ஆயிரவேலி அயிலூரில் ஒரு புத்தர் சிலை உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள இந்தச் சிலை நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், பிரபை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பில் மேலாடை ஆகியவற்றுடன் உள்ளது. மூக்கு, இடது கண், சுருள்முடியின் இடது புறம், மார்பின் ஒரு பகுதி ஆகியவை சிதைந்துள்ளன. இச்சிலைக்குத் திருநீறு பூசி வழிபடுகின்றனர். சிறப்பு நாள்களில் சிலையின் முன்பு கோலம் போட்டு, மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர். திருச்சிக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ. தொலைவில் உள்...