Posts

Showing posts from 2022

சோழ நாட்டில் பௌத்தம் : நூல் மதிப்புரை

Image
சோழ நாட்டில் பௌத்தம்   ( புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, செப்டம்பர் 2022, அலைபேசி: +91 9842647101, +91 6374230985, மின்னஞ்சல் : editorpudhuezuthu@gmail.com ) என்ற என்னுடைய நூலைப் பற்றி நாளிதழ்களிலும், பிற தளங்களிலும், வலைப்பூவிலும் வெளியான மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், நன்றியுடன்.  தினமணி, 26 டிசம்பர் 2022 முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்களின் மதிப்புரை 6 ஜனவரி 2023 தி இந்து தமிழ் திசை, 13 ஜனவரி 2023 1.  துபாய் புத்தர் , கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ, 23 நவம்பர் 2022 2. சோழ நாட்டில் பௌத்தம்:  முனைவர் பா.ஜம்புலிங்கனார், கரந்தை ஜெயக்குமார்,  24 நவம்பர் 2022 3. சோழ நாட்டில் பௌத்தம், தினமணி,  நூல் அரங்கம், 26 டிசம்பர் 2022 4. ஒரு நாள், ஒரு நூல் 1, சோழ நாட்டில் பௌத்தம்,  செம்மொழித்தமிழறம், முனைவர் சு.மாதவன் வலைப்பூ, 1 ஜனவரி 2023 5.முனைவர் சோ.ந.கந்தசாமி, 6 ஜனவரி 2023  6. புத்தகத்திருவிழா 2023, சோழ நாட்டில் பௌத்தம் , இந்து தமிழ் திசை, 13 ஜனவரி 2023   7.சோழ நாட்டில் பௌத்தம்,  குட்ரீட்ஸ் தளம் , 17 பிப்ரவரி 2023 8. சோழ நாட்டில் பௌத்தம் நூல் அறிமுக விழா , தினமணி, 22 பிப

சோழ நாட்டில் புத்தர் சிலைகள் : தமிழ் மரபு அறக்கட்டளை

Image
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பாக 30 நவம்பர் 2022இல் நடைபெற்ற, இணையவழி உரைத்தொடரில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை தொடர்பான நிகழ்வுகளைப் பகிர்கிறேன். தமிழ் மரபுக்கு நன்றி. 26 நவம்பர் 2022இல் நடைபெறுவதாக இருந்த நிகழ்வு தவிர்க்க இயலாத காரணங்களால் 30 நவம்பர் 2022இல் நடைபெற்றது. ----------------------**--------------------- அனைவருக்கும் வணக்கம், வரும், நவம்பர் 30 ஆம் தேதி புதன்கிழமை... இந்திய / இலங்கை நேரம் மாலை 6:00 மணிக்கு... தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் ----------------------**--------------------- திசைக்கூடல் - 312 ----------------------**--------------------- இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சி ----------------------**--------------------- திருவள்ளுவர் ஆண்டு 2053, கார்த்திகை 14 30-11-2022, புதன்கிழமை ----------------------**--------------------- தலைப்பு: "சோழ நாட்டில் புத்தர் சிலைகள்" - (சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்) சிறப்புரையாளர்: முனைவர். பா. ஜம்புலிங்கம் பௌத்த ஆய்வாளர் உதவிப் பதிவாளர் (பணிநிறைவு) தமிழ்ப

சோழ நாட்டில் பௌத்தம் : மதிப்புரை : திரு கரந்தை ஜெயக்குமார்

Image
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலினைப் பற்றிய மதிப்புரையை தன்னுடைய வலைப்பூவில் பகிர்ந்த திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.  இந்நூலுக்கான முதல் மதிப்புரை இதுவே என்பதில் மகிழ்ச்சி. --------   துபாய் புத்தர்   தேடிச் சோறுநிதந் தின்று – பல      சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர்      வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் –  பல வேடிக்கை மனிதரைப் போல – நான்      வீழ்வே னென்றுநினைத் தாயோ?      இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும். காரணம், வேடிக்கை மனிதராய் வீழ்ந்துவிடாமல், இப்புவியில், தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை, அழுத்தமாய் விட்டுச் செல்ல, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள்.      இவரது உழைப்பு.      இவரது தேடல்.      ஓயாத தேடல்.      ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப் படிப்பிற்காகத் தேடினார்.      முனைவர் பட்ட ஆய்விற்காகத் தேடினார்.      ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுவிட்டார்.      முனைவர் பட்டமும் பெற்றவிட்டார்.      தான் பார்த்துக் கொண்டிருந்த பணியி