Posts

Showing posts from 2015

பௌத்த சுவட்டைத் தேடி : 23 ஆண்டு களப்பணியில் 29 சிலைகள்

Image
பௌத்த சுவட்டைத் தேடி : 23 ஆண்டு களப்பணியில் 29 சிலைகள்  தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பௌத்த ஆய்வின்போது 16 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. 1993இல் பௌத்த ஆய்வில் அடியெடுக்கும்போது இவ்வாறாகத் தேடல் முயற்சி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. மயிலை சீனி வேங்கடசாமியை அடியொற்றியும், பின் வந்த அறிஞர்களைத் தொடர்ந்தும் சென்ற வகையில் பல இடங்களில் சிலைகளைக் காணமுடிந்தது. தமிழகத்தில் இக்காலகட்டத்தில் இவ்வாறாக அதிக எண்ணிக்கையில் இப்பகுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது என் எண்ணம். பௌத்த ஆய்விற்கு வழிவகுத்துத் தந்த  தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நன்றியோடு, நினைவுகூர்ந்து,  என் ஆய்விற்குத் துணை நிற்கும் அனைவருக்கும் நன்றிகூறி    களத்திற்கு அழைக்கின்றேன்.   களப்பணி மிக எளிதாக இருக்கும் என எண்ணி களத்தில் இறங்கினேன். இறங்கியபின்னர்தான் அதிலுள்ள சிரமங்களை அறியமுடிந்தது. சில இடங்களில் உள்ளூர் மக்கள் தாமாகவே முன்வந்து உதவினர். சில இடங்களில் போதிய உதவி கிடைக்கவில்லை. பல இடங...

பௌத்த சுவட்டைத் தேடி : விக்ரமம்

Image
1999இல் பார்த்த ஒரு புத்தர் சிலையை மறுபடியும் பார்க்கச் சென்றபோது கிடைத்த அனுபவங்களைக் காண தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விக்ரமம் செல்வோம், வாருங்கள். 29 ஜனவரி 1999 விக்ரமம், பள்ளிவிருத்தி, பூதமங்கலம் களப்பணி சென்றபோது விக்ரமம் களப்பணி மேற்கொண்டேன். தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை-மதுக்கூர் பேருந்தில் சென்று, மதுக்கூரிலிருந்து ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இரண்டு கிமீ தொலைவில் உள்ள விக்ரமம் சென்றேன். விசாரித்து, புத்தர் சிலை இருந்த இடத்திற்குச் சென்று, புத்தரைப் பார்த்தேன். போதிய நேரமின்மையால் உரிய விவரங்களைச் சேகரிக்கமுடியவில்லை. 13 பிப்ரவரி 1999 மறுபடியும் விக்ரமம். தோப்பில் இருந்த புத்தரைக் காண திரு சண்முகவேல் உதவி செய்தார். இச்சிலையை செட்டியார் சிலை என்றும், சிலை இருக்கும் இடத்தை புத்தடி செட்டிக்கொல்லை என்றும் கூறினார். அவரது தாயார் திருமதி பாக்கியத்தம்மாள் (72) அந்த புத்தரைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்.  "வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கலின்போது தேங்காய் உடைத்து சாம்பிராணி போடுவோம். முதலில் எண்ணெய் எடுக்கும்போது புத்தருக்கு சாத்திவிட்டே பயன்படுத்துவோம்...அவ்வப்போது வேண்டுதல் ...

பௌத்த சமயமும் மத நல்லிணக்கச் சிந்தனைகளும்

Image
முந்தைய பதிவுகளில் பௌத்தம் தொடர்பாக களப்பணிகள் குறித்தும், பௌத்தம் தொடர்பாக வெளிவந்த நூல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இப்பதிவில் பௌத்தம் சமயம் தொடர்பான மத நல்லிணக்கச் சிந்தனைகளைக் காண்போம். ஆய்வேட்டினை அளித்தபின்னர் அவ்வப்போது கருத்தரங்குகளில் ஆய்வுப்பொருண்மை தொடர்பாக கட்டுரைகளை அளித்துவருகிறேன். அவ்வகையில் கட்டுரை வாசித்ததும், கருத்தரங்கு தொடர்பான செய்தி நாளிதழில் வந்ததும் நினைவில் நிற்கும் அனுபவம்.  கருத்தரங்க அழைப்பிதழ்  இரண்டாம் அமர்வில் என் கட்டுரை   தினமலர் , 26 மார்ச் 2000 ------------------------------------------------------------------------------------------- 21 மார்ச் 2000 / அ.வ.வ.கல்லூரி, மன்னம்பந்தல்/ மதம் மனிதம் சமூகம்  கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை ------------------------------------------------------------------------------------------- 15 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Buddha spotting in Chola country fills his weekends

Image
Chennai:  B Jambulingam’s search for Buddha idols began with an ordinary visit to a remote village in Thanjavur in the 1980s. The villagers had excavated a Buddha idol, and Jambulingam noted down the dimensions of the stone idol on a cigarette packet. Back home in Thanjavur, he started studying various aspects of the idol.     His research drew him to Buddhism, and he began travelling to villages across Tamil Nadu in search of Buddha statues.     He once pedalled more than 25 miles on his old Hercules bicycle to see a Buddha idol in Puthur. Jambulingam has identified 66 Buddha idols in the erstwhile Chola country, and the journey is still on.     “I have found 66 Buddha statues in Thanjavur, Tiruchi and Pudukottai districts during my field study. Many were in the sitting posture. The latest Buddha, the 66th, was found during my study in Kandramanickam in July 2012,” he said.     The most...

அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் (வரலாற்று நாடகம்) : பட்டுக்கோட்டை குமாரவேல்

Image
நான் படித்த நூல்களில் ஒன்று அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் (வரலாற்று நாடகம்) . 104 காட்சிகளைக் கொண்ட வரலாற்று நாடகமாக உள்ள இந்நூலில் புத்தரது வரலாற்றை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் பட்டுக்கோட்டை குமாரவேல். நாடகப்பாத்திரங்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளவிதம், ஒவ்வொரு காட்சியையும் அமைத்துள்ள முறை, நிகழ்வுகளை மனதில் பதியும்வகையில் தந்துள்ள பாங்கு போன்றவை மிகவும் சிறப்பாக இந்நூலில் அமைந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த இந்நூலை அண்மையில் மறுபடியும் படித்தேன். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அவ்வரலாற்று நிகழ்வை நாடமாக்கித் தந்துள்ள ஆசிரியரைப் பாராட்டி, அந்நூலை வாசிப்போம், வாருங்கள். காட்சி 7 (இடம் : அரண்மனை / மன்னர், அரசி, அந்தணர்கள்) சுத்தோதனர் : ஜோதிட வல்லுநர்களே...இளவரசனின் ஜாதகம் பார்த்து பலனைச் சொல்லி இந்த நாட்டு இளவரசருக்கு நீங்கள் பெயரிடவேண்டும். அந்தணர்1 : இளவரசனுக்கு சித்தார்த்தன் என்று பெயரிடுங்கள். அந்தணர்2 : குழந்தையின்னி வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். அந்தணர்3 : குழந்தை இளவரசானதும் அவர் நாட்டம் அரசியலில் இருந்தால் பெரிய சக்கரவர்த்தியாக வாழ்வார...

புத்தரைத் தேடி....!

Image
எந்தக் காரியத்தையும் ஆதாய நோக்கத்தோடே பார்த்துப் பழகிய நம் சமூகத்தில் ஓர் ஆய்வாளராக இருப்பது பெரிய பாடுதான். அதுவும் வயல்களிலும், மரத்தடிகளிலும், தலை தனியாக முண்டம் தனியாக அடையாளம் சிதைந்து சிதைந்து கிடக்கும் சிலைகளைப் பற்றியும் அதை ஆய்வு செய்து கொண்டிருப்பவரைப் பற்றியும் அரசுக்கோ சமூகத்துக்கோ என்ன அக்கரை இருக்கிறது;  ஆதாயம் இருக்கிறது? ! தமிழ்நாட்டில் பழங்கால சிலைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. யாரோ ஓர் ஆய்வாளர் சிலையைக் கண்டறிகிறார் ; குறிப்பெடுக்கிறார். நம் ஆள்கள் அட அப்படியா! என வாய் பிளந்துவிடு வேறு வேலையைப் பார்க்க சென்றுவிடும்போதும் ஆய்வாளர்கள் தன் வேலையைத் தொடருகிறார்கள். முனைவர் பா.ஜம்புலிங்கமும் அப்படித்தான். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். கண்காணித்தோமா போனோமா என 'சாமர்த்தியமாக' இல்லாமல் சோழ நாட்டில் பௌத்த சமயம் வேரூன்றியது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதுவரைக்கும் 64 புத்தர் சிலைகளை அவர் கண்டறிந்திருக்கிறார். ஜம்புலிங்கத்துக்குப் பூர்வீகம் கும்பகோணம். சின்ன வயதிலிருந்தே வரலாற்றில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஏதோ ஓர் ஆய்வு...

Tracing footprints of Buddhism in Chola country

Image
------------------------------------------------------------------------------------------- Tracing footprints of Buddhism in Chola country B Jambulingam tells CE about his research on which led him to find at least 57 ancient Buddha statues in 10 districts of Tamil Nadu. by N.Ramesh Thanjavur:  B.Jambulingam (56), who has been working as an office Superintendent of Tamil University, an ardent Saivite, whose search for Buddhism in Chola Country led him to identify as many as 67 ancient Buddha statues made of granite in 10 districts. Of these, most of the statues were found in eight districts which could be called the Chola country. Reminiscing his foray into academic research, while still working as an administrator, Jambulingam said one of the Vice-Chancellor of Tamil University helped the non-academic staff to pursue their academic interests. “When I registered for MPhil at  Madurai   Kamaraj   University , I wanted to do research ...