Posts

Showing posts from 2026

தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தச் சுவடுகள் : தமுஎகச மாநில மாநாட்டு சிறப்பு மலர் 2025

Image
தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தச் சுவடுகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தச்சுவடுகளாகக் கல்வெட்டு, புத்தர் சிலைகள், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள், புத்தர் சிற்பங்கள், ஓவியம் ஆகியவை காணப்படுகின்றன. பக்தி இயக்கக் காலத்தில் பௌத்தத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டபோதிலும், அதற்குப் பின்னர் பௌத்தத்தின் தாக்கமானது தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளதை இச்சான்றுகள் உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டில் கீழ்க்குறிச்சி, நாகப்பட்டினம், கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் பௌத்தம் தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் காலத்தால் அண்மையானது குடமூக்கு என்றும், குடந்தை என்றும் அழைக்கப்படுகின்ற கும்பகோணத்தில் உள்ளது. பாடல் பெற்ற தலமான கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டின் மூலமாகத் திருவிளந்துறை என்னுமிடத்தில் ஒரு புத்தர் கோயில் இருந்ததை அறியமுடிகிறது. செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின்போது விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்ட இக்கல்வெட்டு குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் ஆகும். எலந்துறை என்றழைக்கப்படும் அவ்வூரில் புத்தர் கோயில் இருந்ததற்கான எச்சங்களையோ, புத்தர் சிலையையோ தற்போது காணமுடியவில்லை....

பௌத்த சுவட்டைத் தேடி : கலைக்கூடம், தஞ்சாவூர்

Image
ஆய்வியல் நிறைஞர்ப் பட்ட ஆய்விற்காக ( Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district , Madurai Kamaraj University, Madurai, 1995) முதலில் பௌத்தம் தொடர்பாக நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். பின்னர் புத்தர் சிலைகளின் அமைப்பையும், காலத்தையும் அறிந்துகொள்ள ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியங்களுக்குச் செல்லத் திட்டமிட்டேன். தஞ்சாவூரில் அருங்காட்சியகங்கள் என்ற நிலையில் அக்காலகட்டத்தில், 1990களின் இடையில், கலைக்கூடத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும் மட்டுமே புத்தர் சிலைகள் உள்ளதை அறிந்தேன். தஞ்சாவூர், கலைக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பாக மேனாள் காப்பாட்சியர் திரு எஸ்.இரத்தினசபாபதி அவர்களைச் சந்தித்தால் புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைப் பெறமுடியும் என்பதை நண்பர்கள் மூலமாக அறிந்தேன். அவரைச் சந்திக்க அவருடைய இல்லத்திற்குச் சென்று, நான் மேற்கொண்டு வருகின்ற ஆய்வினைப் பற்றி கூறினேன். அவர், தான் எழுதி வெளிவரவுள்ள நூலில் கலைக்கூடத்திலுள்ள இரு புத்தர் சிலைகளைப் பற்றியும் ( Stone Sculptures , Manuscript, 1983), ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திரு...

மண்ணில் புதைந்த மௌன சாட்சியங்கள்! : டி.வி.சோமு

Image
தமிழக வரலாற்றில் சோழ மண்டலம் என்பது கலைகளின் புகலிடம். அங்குள்ள சைவ, வைணவத் தடயங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ஒருகாலத்தில் செழித்தோங்கிய பௌத்தத்திற்கு வழங்கப்படவில்லை. இந்த வரலாற்று இடைவெளியை நிரப்ப, தனது வாழ்நாளின் 30 ஆண்டுகளை அர்ப்பணித்து, முனைவர் பா. ஜம்புலிங்கம்  அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் உருவாக்கியுள்ள ' சோழ நாட்டில் பௌத்தம் ' நூல் ஒரு காலப்பேழை. அர்ப்பணிப்புமிக்க நூலாசிரியர்   தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் பா. ஜம்புலிங்கம், வெறும் அலுவலகப் பணியாளராகத் தன் காலத்தைக் கழிக்கவில்லை. 1990-களிலேயே தொடங்கிய இவரது தேடல், சோழ நாட்டின் வயல்வெளிகளிலும், ஏரிக்கரைகளிலும், சிதைந்த கோயில்களிலும் புதைந்து கிடந்த புத்தரைத் தேடிக் கண்டடைந்தது. 60-க்கும் மேற்பட்ட சிலைகளைப் பட்டியலிட்டு, அதில் 17 இடங்களை முதன்முதலில் அடையாளப்படுத்திய இவரது ஆய்வு நேர்மை, இந்திய வரலாற்று ஆய்வுலகிற்கே ஒரு பாடம். நூலின் சிறப்பம்சங்கள்: ஒரு வரலாற்று மீட்பு அரிய ஆவணப்படுத்துதல்: காலத்தால் சிதைக்கப்பட்ட, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்...

புத்தர் சிலையைத் தேடி... : தினமணி

Image
  ------------------------------------------------------------------------------------------- நன்றி: வி.என்.ராகவன் / தினமணி , கொண்டாட்டம் 18.1.2026 -------------------------------------------------------------------------------------------

வரலாற்றுச் சிறப்புமிக்க நூல் : ஞானியார் வீ.ஜெயபால்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: ஞானியார் முனைவர் வீ. ஜெயபால்  ------------------------------------------------------------------------------------------- நூல் தேவைக்குத் தொடர்புகொள்ள:  

சைவமும் பௌத்தமும் : ஆறாம் உலகச் சைவ மாநாடு

Image
2026 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.   ******************* சைவமும் பௌத்தமும் ------------------------------------------------------------------------------------------- நன்றி:  ஆறாம் உலகச் சைவ மாநாடு,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1997 -------------------------------------------------------------------------------------------