Posts

Showing posts from April, 2025

பௌத்தத் தமிழியல் பொதுவியல் (தொகுதி 1) : முனைவர் சு.மாதவன்

Image
ஆய்வு வாழ்த்துரை முனைவர் சு.மாதவன் எழுதியுள்ள பௌத்தத் தமிழியல்-பொதுவியல் 1 என்ற இந்நூல் எட்டு கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு பெரிய தேடலை இந்நூலின் மூலம் ஆரம்பிக்கின்ற நூலாசிரியர் பௌத்த மற்றும் சமணம் தொடர்பான மொழி, வரலாறு, மெய்யியல் உள்ளிட்ட பொருண்மைகளை தமிழ் இலக்கியத் தளத்திலும், பிற தளங்களிலும் அமைத்து அவற்றை நடைமுறை வாழ்வியலோடு ஒத்து நோக்குகின்றார். இக்கட்டுரைகளைப் பற்றிய ஒரு பறவைப்பார்வை மூலமாக ஆசிரியரின் நுண்மான் நுழைபுலத்தினை அறியமுடியும். “அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்” என்ற முதல் கட்டுரையில் அறம், தருமம், நீதி ஆகிய மூன்றும் இலக்கியத் தமிழ் மரபிலும் இந்தியத் தத்துவ மரபிலும் கொண்டுள்ள தனித்த சிறப்பியல்புகளும், பொதுவியல்புகளும், பயனுறும் இடம், சூழல், விளைவு ஆகியவற்றுக்கேற்ப பொருள் வேறுபாடுகளும் கொண்டுள்ளமை ஒப்புநோக்கீட்டு அளவில் ஆராயப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய மரபில் வைதீக மரபு, அவைதீக மரபு கலந்து வெளிப்படும் நிலையில் தருமம், நீதி என்பதோடு மட்டுமன்றி புண்ணியம் என்பதோடும் இணைத்து குறிப்பிடப்படும் அனைத்து நன்னெறிகளையும் சுட்டும் ஒரே சொல்லா...

மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தம்

Image
மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தச் சமயச் சான்றுகளில் முதன்மையான இடத்தைப் பெறுவது பூம்புகார் எனப்படுகின்ற காவிரிப்பூம்பட்டினம் ஆகும் . தொண்டை நாட்டில் காஞ்சிபுரத்தைப் போல சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்த பௌத்த மையமாக விளங்கியது . இவ்வூர் சங்க காலம் முதற்கொண்டு பௌத்த சமயச் செல்வாக்கினைக் கொண்டிருந்தது . கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் என்று பெயர் பெறும் . 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் தலைசிறந்த பட்டினமாகத் திகழ்ந்தது . அந்நாளில் பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறித்தது . பூம்பட்டினம் எனவும் , பூம்புகார் எனவும் அந்நகர்க்கு அமைந்த பெயர்களை ஆராயும்போது , ஓர் அழகிய கடற்கரை நகராக அது விளங்கியதை உணரமுடிகிறது .  பொ . ஆ . மு .3 ஆம் நூற்றாண்டில் மகிந்தர் இலங்கைக்குச் சென்று பௌத்த சமயத்தைப் பரப்புவதற்கு முன்பாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி அங்கு ஏழு பௌத்த விகாரங்களைக் கட்டினார் என்றும் , சிலப்பதிகாரத்திலும் , மணிமேகலையிலும் கூறப்படுகின்ற இந்திர விகாரங்கள் இவர்...