Posts

Showing posts from May, 2023

தமிழகத்தில் பௌத்தம் : முனைவர் தேமொழி

Image
முனைவர் தேமொழி எழுதியுள்ள தமிழகத்தில் பௌத்தம் என்னும் நூல் ஐந்து தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. புத்தரின் திருவுருவத் தோற்றம் (பக்.14-33), தமிழ்நாட்டுப் பௌத்த சிற்பங்கள் (பக்.34-44) என்ற தலைப்பின்கீழ் உள்ள கட்டுரைகளில் கலையியல் நோக்கில் புத்தரின் சிற்பங்களைப் பற்றியும், சிலைகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முக்கோற்பவர் (பக்.45-59) கட்டுரை முக்கோற்பவர் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக்குறிப்புகள் (பக்.60-79) என்ற கட்டுரை தமிழக வரலாற்றை அறிவதில் அளிக்கும் பங்கினை அளிக்கிறது. எண்குணத்தான் (பக்.60-91) எண்வகைப்பட்ட குணங்களை பலவித சான்றுகளுடன் அணுகுகிறது. இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம். "தொடக்ககால இந்தியக்கலையில் (பொ.ஆ.ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்) புத்தர் மனித வடிவில் சித்தரிக்கப்படவில்லை. குறியீடுகளாக மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளார்." (ப.14) "கனிஷ்கர் காலத்தில்தான் மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடு தோன்றுகிறது....புத்தரின் முதல் சிற்பம் கனிஷ்கர் காலத்தில் உருவாக்கப்பட்டது." (ப.23) "சிந்து சமவெளிக்கு அப்பால் வளர்ந்த கா...

ஒரு மாதிரி ஆய்வு : முனைவர் தி.நெடுஞ்செழியன்

Image
ஒரு மாதிரி ஆய்வு சோழ நாட்டில் பௌத்தம் என்னும் நூலை உருவாக்கிய முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உதவிப் பதிவாளராகப் பணி ஓய்வு பெற்றவர். இவர் சிறந்த ஓர் ஆய்வாளர் மட்டுமல்லாமல், சிறந்த வாசிப்பாளர். அதுவும் தன் இளமைக் காலம் முதல் இன்று வரை ஆங்கில இந்து நாளேடு, பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழ்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆளுமைத் திறன் கொண்டு நிர்வாகத்திலும் சிறந்து விளங்கியவர்.  இப்படியான பன்முக ஆற்றல் கொண்ட முனைவர் பா.ஐம்புலிங்கம் தன் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சோழ நாட்டில் பௌத்தம் என்னும் தலைப்பைத் தேர்வு செய்து, அறைக்குள் முடங்கி, நூலகங்களில் தரவுகளைச் சேகரித்து முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்யாமல், பௌத்தம் தொடர்பான ஆய்வுகளைத் தேடிக் களங்களுக்குச் சென்றவர் என்ற பெருமைக்குரியவர். அவரால் கண்டெடுக்கப்பட்ட புத்தச் சிலைகளின் எண்ணிக்கை மிகஅதிகம் எனில் வியப்பில்லை. சோழ நாட்டில் ...