சோழ நாட்டில் பௌத்தம் : புது எழுத்து

 வலைப்பூவில் 150ஆவது பதிவு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, 1995) ஆய்வினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினையும் (சோழ நாட்டில் பௌத்தம், 1999) நிறைவு செய்து, தொடர்ந்து இரண்டு மாமாங்கத்திற்கும் மேலாக களப்பணி மேற்கொண்டு வரும் நிலையில் என் ஆய்வு மேம்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறுகிறது என்பதைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். 

பணியாற்றிக்கொண்டே களப்பணியினை மேற்கொண்டபோது எதிர்கொண்ட சூழல் சற்றே சிரமமானது. இருப்பினும் எந்த நிலையிலும் ஆய்வேட்டில் விடுபாடு இருக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு பல இடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை களப்பணி சென்றேன். அவ்வப்போது பெற்ற அனுபவங்களை என் வலைப்பூவில் பகிர்ந்ததோடு, அதில் மாற்றங்களோ, மேம்பாடோ மேற்கொள்ளும்போது அதனை பதிவின் இறுதியில் தரும் முறையைத் தொடர்ந்து கடைபிடிக்கிறேன்.

நிர்வாகப் பணியாளரான என்னை ஆய்வாளராக உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும்,  ஆய்வில் சேர்ந்த முதல் இன்றுவரை என் முயற்சிக்குத் துணை நிற்கும் அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், ஊடகத்தினர், தகவலாளர்கள், என் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

20 நவம்பர் 2022இல் நூலின் படியை பதிப்பாளர் திரு சுகவன முருகன் (புது எழுத்து, அலைபேசி 98426 47101) அவர்களிடம் எங்கள் இல்ல நூலகத்தில் பெற்ற தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும். நேரில் வந்து நூலின் படிகளைத் தந்த அவருடைய பெருமனது போற்றத்தக்கது. சிறப்பாக வடிவமைத்து நூலாக்கம் செய்த அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. 

எங்கள் இல்ல நூலகத்தில்
பதிப்பாளர் புது எழுத்து திரு சுகவனமுருகன் அவர்களிடமிருந்து 
நூலைப் பெறல்







நூலின் படிகளை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கும், கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்திற்கும், அறிஞர்களுக்கும், நான் பயின்ற கல்லூரிக்கும், பள்ளிக்கும், நண்பர்களுக்கும்,  ஆய்வாளர்களுக்கும் நேரில் சென்று கொடுத்து அவர்களுடைய வாழ்த்துகளைப் பெற்றேன்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் 


பேராசிரியர் சோ.ந.கந்தசாமி, உடன் எங்கள் மகன்கள் பாரத், சிவகுரு 


தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன்
என் நூலுடன், என் குடும்பத்தார் எழுதிய நூல்களையும் வழங்கல் 

பேராசிரியர் க.பாஸ்கரன்


முனைவர் மணி.மாறன் 


முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன் 

முனைவர் வீ.ஜெயபால் 

திரு கரந்தை ஜெயக்குமார்


முனைவர் சீமான் இளையராஜா


முனைவர் ராஜா முகமது 


கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்
பொறுப்பாளர் திரு தயாளன் மற்றும் நூலகர் சரண்யா 

கும்பகோணம் நண்பர் சிற்பக்கலைஞர் ராஜசேகரன் 

  
தொல்லியல் அறிஞர் திரு கி.ஸ்ரீதரன் (சென்னை)

தொல்லியல் அறிஞர் திரு அனந்தபுரம் கோ. கிருட்டினமூர்த்தி (சென்னை)



நான் பயின்ற கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி (தன்)
முதல்வர் முனைவர் நா.தனராஜன்  (13 மார்ச் 2023) 


வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் (13 மார்ச் 2023)



நான் பயின்ற கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு சாரதி (23 மார்ச் 2023)

தமிழ்ப் பல்கலைக்கழக
மேனாள் துணைப்பதிவாளர் திரு இரா.சுப்பராயலு (2 ஜுன் 2023)


கும்பகோணம் நண்பர் திரு சீ. தீனதயாளன் (2 ஜுலை 2023)



எங்கள் மூத்த மகன் ஜ.பாரத், முகநூல் பதிவு, 20 நவம்பர் 2022


என்னுடைய நூல்கள்

1) வாழ்வில் வெற்றி, பிட்டி விஜயகுமார், 269/833, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
சென்னை 600 021,டிசம்பர் 2001, ரூ.46
2) Judgement Stories of Mariyathai Raman (Tr), New Century Book House (P) Ltd, 41B, SIDCO Industrial Estate,
Ambattur,  Chennai 600 098, November 2002, I Edition, Rs.30
3) Tantric Tales of Birbal (Tr), NCBH, November 2002, I Edition, Rs.45
4) Jesting Tales of Tenali Raman (Tr), NCBH,  October 2005, I Edition, Rs.50
5) Nomadic Tales from Greek (Tr), NCBH, May 2007, I Edition, Rs.25
6) படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை 600 098, டிசம்பர் 2004, ரூ.50
7) தஞ்சை மாவட்டத்தில் சமணம்தில்லை.கோவிந்தராஜன், முனைவர் மணி.மாறன் உடன் இணைந்து,  ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர்,
அலைபேசி 94434 76597, 2018, ரூ.130
9) சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம், 635 112,   அலைபேசி 9842647101, செப்டம்பர் 2022, ரூ.1000

7 ஜூலை 2023இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தங்களது பணி மேலும் சிறக்கவும், நூல் வடிவம் பெற்றமைக்கும் வாழ்த்துகள்.

    150-ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  3. அருமை ஐயா
    தங்களின் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  4. தங்களின் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  5. Anonymous05 May, 2023

    வணங்குகிறேன் ஐயா

    ReplyDelete

Post a Comment