Posts

Showing posts from 2017

அகிம்சை நடை 47

Image
5 நவம்பர் 2017 திட்டமிடப்பட்டதற்கான அறிவிப்பு 2017 அக்டோபர் இறுதி வாரத்தில் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன் தொலைபேசிவழி தொடர்புகொண்டு "தஞ்சாவூர்ப் பகுதியிலுள்ள சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்ப்பதற்காக சமண அமைப்பினர் சென்னையிலிருந்து 5 நவம்பர் 2017 அன்று வருகின்றார்கள். திரு  தில்லை கோவிந்தராஜனிடம் இதுபற்றிக் கூறியுள்ளேன்.  நாமும் அவர்களோடு கலந்துகொள்வோம் "  என்று தெரிவித்திருந்தார். அதன்படி நாங்கள் மூவரும் செல்வதாகத் திட்டமிட்டோம். மழையின் காரணமாக அப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அறிந்தோம். 19 நவம்பர் 2017இல் இப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதை திரு அப்பாண்டைராஜன் உறுதி செய்தார். அவருடைய தலைமையில் 19 நவம்பர் 2017 காலை 6.45 மணியளவில்  சுமார் 20 பேர் கொண்ட குழுவினர்  தஞ்சாவூர் தெற்கு வீதியிலிருந்து வேனில் கிளம்பினோம்.  முன்னர் வருவதாக இருந்த மணி.மாறனும், தில்லை கோவிந்தராஜனும் விடுப்பு எடுக்க இயலா நிலை மற்றும் அவசரப்பணி காரணமாக வர இயலாமல் போனது.    பயணத்தின்போது அவர் அகிம்சை நடையைப் பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார...

23ஆவது பௌர்ணமி பெருவிழா

Image
சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி மகாபோதி பௌத்த சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் என் வலைத்தளத்தினை தொடர்ந்து வாசித்து வருவதாகவும், நான் குறிப்பிட்டுள்ள பெரண்டாக்கோட்டை புத்தரைக் காணவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து, அந்த இடம் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தனர். அவர்கள் வரும்போது நானும் அவர்களுடன் வந்து அந்த புத்தர் சிலையைப் பார்க்கவேண்டும் என்றும் கேட்டிருந்தனர். என்னுடைய சொந்தப் பணிகள் காரணமாக நான் வர இயலா நிலையைத் தெரிவித்திருந்தேன். அவர்கள் குழுவாக அங்கு சென்று பெரண்டாக்கோட்டையிலுள்ள புத்தரைப் பார்த்து வந்த அனுபவங்களை என்னிடம் தெரிவித்தனர்.  தொடர்ந்து 3 நவம்பர் 2017இல் அவர்களுடைய சங்கத்தில் நடைபெறவுள்ள 23ஆவது பௌர்ணமிப் பெருவிழாவில் கலந்துகொண்டு என் பௌத்த ஆய்வு தொடர்பாக சிறப்புரையாற்றும்படி அழைப்பு விடுத்தனர். குறுகிய கால இடைவெளியில் நண்பர்களுக்குத் தெரிவிக்க இயலா நிலையில் நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் மட்டுமே தெரிவித்திருந்தேன். அவர் நிகழ்விற்கு வந்ததோடு அதனைப் பதிவாகத் தன் தளத்தில் படங்களுடன் பதிவிட்டிருந்தார்.  திருச்சி BHEL மகாபோதி சங்கத்...

சமண சுவட்டைத் தேடி : மீண்டும் கவிநாடு

Image
அக்டோபர் 2013இல் புதுக்கோட்டை அருகே சமணர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. முனைவர் சந்திரபோஸ் அவர்கள் பார்க்கச் சென்றபோது தலையுடன் இருந்த சிலை, சில நாள்கள் கழித்து அவரோடு நான் சென்றபோது தலையில்லாமல் இருந்தது. அந்த சிலை புத்தர் சிலை என்று கூறப்பட்டு, பின்னர் களப்பணியின்போது சமண தீர்த்தங்கரர் என்று உறுதி செய்யப்பட்டது. அந்த சிலையின் கண்டுபிடிப்பு தொடர்பான அனுபவங்களை பௌத்த சுவட்டைத் தேடி : கவிநாடு என்ற தலைப்பில் முன்னர் வாசித்துள்ளோம். 1 அக்டோபர் 2017  சிலையின் தலைப்பகுதி புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டதை திரு கஸ்தூரிரங்கன் அவர்களின் முகநூல் பதிவு வழியாக அறிந்தேன். தொலைபேசிவழி தொடர்பு கொண்டு அவருக்கும் மரபு நடை குழுவினருக்கும் நன்றி தெரிவித்தேன்.  அக்டோபர் 2017இல், இச்சிலை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது போல செய்தி வெளியாகியிருந்தது. செய்தி நறுக்குகளை முகநூல் பக்கங்களிலும் காணமுடிந்தது. முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் பற்றிய விவரங்களோ, மேற்கோளோ இவற்றில் காணப்படவில்லை. தி இந்து, 1 அக்டோபர் 2017 புதிய தலைமுறை, 1 அக்டோபர் 20...

சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர்

Image
புத்தர் சிலைகளைத் தேடி களப்பயணம் செல்லும்போது பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமண சிலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் புதுக்கோட்டையில் உள்ள சில சமணப்படுகைகளையும், சித்தன்னவாசலில் உள்ள சிலைகளையும் கண்டேன். அந்த ஒரு தாக்கம் சரவணகோலாவிற்குச் செல்லும் ஆர்வத்தை உண்டாக்கியது. எங்கள் மூத்த மகன் பாரத், பெங்களூரில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சரவணபெலகோலா சென்றேன். முழுக்க முழுக்க சிலையின் அமைப்பையும் நுணுக்கத்தையும் காணும் ஆர்வமே அதற்குக் காரணம். மறுபடியும் ஆகஸ்டு 2017இல் என் மனைவி திருமதி பாக்கியவதி, இளைய மகன் சிவகுரு ஆகியோருடன் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில்  ( பெங்களூரிலிருந்து 100 மைல், மைசூரிலிருந்து 60 மைல், ஹாசன் ரயில் நிலையத்திலிருந்து 32 மைல் தூரத்தில்)  "விந்தியகிரி",  "தொட்டபெட்டா" (பெரியமலை),  "இந்திரகிரி" என்று பல பெயர்களில் அழைக்கப்படுறது. இருப்பினும் விந்தியகிரி மலையில்தான்  57 அடி உயர, ஒரே கருங்கல்லால் ஆன, கோமதீஸ்வரர் சிலை வடக்கு நோக்கிய...