Posts

Showing posts from May, 2024

மதிப்புரை

Image
நூல் வடிவம் பெறும் சோழ நாட்டில் பௌத்தம் மதிப்புரை/அறிமுகம் (தமிழ்ப்பதிப்பு) அண்டனூர் சுரா/ புதிய புத்தகம் பேசுது அய்யம்பேட்டை செல்வராஜ் / தமிழ் அமுது அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி/ புக் டே இந்து தமிழ் திசை எஸ்.ராமகிருஷ்ணன் இணையதளம் கந்தசாமி, சோ.ந. கரந்தை ஜெயக்குமார் கனக. அஜிததாஸ்/ முக்குடை குடவாயில் பாலசுப்ரமணியன் குட்ரீட்ஸ் தளம் சக்தி பிரகாஷ் சக்திவேல், பா./ கொலுசு சக்திவேல், பா./ தமிழ் நெஞ்சம் சந்திரசேகர், வே. / போதிமுரசு சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி 2023 தினமணி / இந்த வாரம் கலாரசிகன் தினமணி/ நூல் அரங்கம் தினமலர் நெடுஞ்செழியன், தி. மணி. மாறன்/தமிழ்ப் பல்கலைக்கழகம் மணி. மாறன்/மக்கள் சிந்தனைப் பேரவை மாதவன், சு./செம்மொழித் தமிழறம் மார்க்ஸ், அ./ மானுடம் ரவிக்குமார், க. விக்கிப்பீடியா விச்வநாதன், நா./ பேசும் புதிய சக்தி ஜெயபாலன், க. ஜெயபிரகாஷ், இ. மதிப்புரை/அறிமுகம் (ஆங்கிலப்பதிப்பு) Deivanayagam, G. Federal Jayabalan, K/ Book Day  (in Tamil) Kandaswamy, S.N. Karanthai Jayakumar  (in Tamil) Ks the Nature Admirer One Minute Birding Payum Oli  (in Tamil) Subbarayalu, R...

மாமனிதர் திரு ச.அப்பாண்டைராஜ்

Image
தஞ்சாவூர் கோட்டை அமரர் திரு. சக்கரவர்த்தி முதலியார் இளைய மகன் அன்பகம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற, தஞ்சாவூர் ஜினாலயத்தின் அறங்காவலரும், ஏடகம் அமைப்பின் பெரும் புரவலரும் பொறுப்பாளருமான திரு அப்பாண்டைராஜ் ஐயா அவர்கள் இறந்த செய்தி எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. அவருடன் பழகிய அனைவருமே அவருடைய மென்மையான பேச்சு, கனிவான குணம், பழகும் இனிய பாங்கு போன்றவற்றை அறிவார்கள். அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகுவார். ஒருமுறை அவரிடம் பேசியவர்கூட அவரை என்றும் மறக்கமாட்டார்கள். அவர் ஏடகம் அமைப்பிற்கும், பழகிய என்னைப் போன்ற பலருக்கும் ஒரு பக்கபலமாக இருந்துவந்துள்ளார். சுறுசுறுப்பினையும், எப்பணியையும் ஏற்கும் துணிவையும் அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். வயதுவேறுபாடு பார்க்காமல் களத்தில் இறங்கி உழைக்கும் பெருமகனார். பணியில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் அவர் தந்த ஊக்கமானது எங்களை புத்துணர்ச்சியோடு முன்னெடுத்துச்செல்ல மிகவும் உதவியாக இருந்தது. எந்தவொரு சிரமமான சூழலையும் மாறாப்புன்னகையோடு எதிர்கொள்வார். நடக்கமுடியாது, சிரமம் என்று நாங்கள் நினைத்த பல பொறுப்புகளை தானே முன்னின்று நடத்திச் ச...