Posts

Showing posts from May, 2024

மதிப்புரை

Image
நூல் மதிப்புரை 1. நூல் வடிவம் பெறும் சோழ நாட்டில் பௌத்தம் , 3.11.2022 2. துபாய் புத்தர்  : திரு கரந்தை ஜெயக்குமார், 23.11.2022 3.  சோழ நாட்டில் பௌத்தம், தினமணி,  நூல் அரங்கம், 26.12.2022 4. பேருழைப்பின் பெருவிளைச்சல்  : முனைவர் சு.மாதவன், 2.1.2023 5.  முனைவர் சோ.ந.கந்தசாமி , 6.1. 2023, 20.10.2024 6.  புத்தகத்திருவிழா 2023, சோழ நாட்டில் பௌத்தம் , இந்து தமிழ் திசை, 13.1.2023 7. சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 2023 , 17.1.2023 8.  குட்ரீட்ஸ் தளம் , 17.2.2023 9.  சோழ நாட்டில் பௌத்தம் நூல் அறிமுக விழா , கரந்தை ஜெயக்குமார், 24.2.2023 10. ஓர் அரிய பெட்டகம்  : முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், 13.4.2023 11. ஒரு மாதிரி ஆய்வு  : முனைவர் தி.நெடுஞ்செழியன், 27.5.2023 12. துல்லியமான படங்களைக் கொண்ட நூல்  :  அ.மார்க்ஸ், மானுடம், மே ஜூலை 2023   13. தமிழில் முக்கியமான ஆவணம் , நா.விச்வநாதன், பேசும் புதிய சக்தி, ஜூலை 2023 14.  சிலைகள் சொல்லும் உண்மை , எஸ்.ரா. இணையதளம், 17.7.2023 15. பௌத்த மெய்யியல் தேடலுக்குரிய சான்று  : அன...

மாமனிதர் திரு ச.அப்பாண்டைராஜ்

Image
தஞ்சாவூர் கோட்டை அமரர் திரு. சக்கரவர்த்தி முதலியார் இளைய மகன் அன்பகம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற, தஞ்சாவூர் ஜினாலயத்தின் அறங்காவலரும், ஏடகம் அமைப்பின் பெரும் புரவலரும் பொறுப்பாளருமான திரு அப்பாண்டைராஜ் ஐயா அவர்கள் இறந்த செய்தி எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. அவருடன் பழகிய அனைவருமே அவருடைய மென்மையான பேச்சு, கனிவான குணம், பழகும் இனிய பாங்கு போன்றவற்றை அறிவார்கள். அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகுவார். ஒருமுறை அவரிடம் பேசியவர்கூட அவரை என்றும் மறக்கமாட்டார்கள். அவர் ஏடகம் அமைப்பிற்கும், பழகிய என்னைப் போன்ற பலருக்கும் ஒரு பக்கபலமாக இருந்துவந்துள்ளார். சுறுசுறுப்பினையும், எப்பணியையும் ஏற்கும் துணிவையும் அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். வயதுவேறுபாடு பார்க்காமல் களத்தில் இறங்கி உழைக்கும் பெருமகனார். பணியில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் அவர் தந்த ஊக்கமானது எங்களை புத்துணர்ச்சியோடு முன்னெடுத்துச்செல்ல மிகவும் உதவியாக இருந்தது. எந்தவொரு சிரமமான சூழலையும் மாறாப்புன்னகையோடு எதிர்கொள்வார். நடக்கமுடியாது, சிரமம் என்று நாங்கள் நினைத்த பல பொறுப்புகளை தானே முன்னின்று நடத்திச் ச...