Posts

Showing posts from March, 2017

பௌத்த சுவட்டைத் தேடி : அய்யம்பேட்டை

Image
ஆய்வுக்காகப் பதிவு செய்தபின், பிற தேடல்களுடன், களப்பகுதியில் புதியதாக ஒரு நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டேன்.  ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 1993 முதல் இல்  இறங்கியபோதும், அவ்வாறான ஒரு திருமேனியைக் காணும் வாய்ப்பு 1999இல் கிடைத்தது.   மீசை புத்தரை அடுத்து இது  கண்டுபிடிப்பு பற்றிய இரண்டாவது  நாளிதழ் செய்தியாகும் .  நாகப்பட்டினத்தில் கி.பி.1856இலிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன.   அவை உள்நாட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையில் ஒரு புதிய நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் கண்டோம். நாகப்பட்டினத்திலிருந்து குடிபெயர்ந்து அய்யம்பேட்டையில் வந்துள்ள ஒரு குடும்பத்தார் மூன்று தலைமுறையாக இத்திருமேனியை முனீஸ்வரர் என்று வழிபட்டுவருகின்றனர். இது 9 செ.மீ. உயரமுள்ளது. அமர்ந்த நிலையில், வலது கை தரையைத் தொட...