Posts

Showing posts from October, 2012

பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டைவாய்த்தலை

Image
மார்ச் 1998 திருச்சிப் பகுதியின் களப்பயணத்தின்போது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தேன். திருச்சியில் காணப்படும் புத்தர் சிற்பங்களைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய இடங்களில் ஒன்று திருச்சி-கோயம்புத்தூர் சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள பேட்டைவாய்த்தலை.அங்கு செல்ல உரிய நாளை எதிர்நோக்கியிருந்தேன். செப்டம்பர் 1998 திட்டமிட்ட ஒரு நாளில் பேருந்தில் அங்கு சென்றேன். பிற இடங்களைப் பார்த்துவிட்டு, அவ்வூரைச் சென்றடைய மாலை நேரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி, புத்தர் சிலை உள்ள இடத்தைப் பற்றி பல இடங்களில் விசாரித்தேன். அப்போது மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்புறம் ஒரு சிலை உள்ளதாகக் கூறினர். பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் கோயில் இருந்தது. பேருந்து வசதி இல்லாத நிலையில் அருகிலிருந்த கடையில் மிதிவண்டி வாடகைக்குக் கேட்டேன். வெளியூர்க்காரர்களுக்கு மிதிவண்டி தருவதில்லை என்ற பதில் வந்தது. ஆய்வு தொடர்பாக நான் வந்த விவரத்தைக் கூறி அதற்கான கடிதத்தைக் காண்பித்தேன். "ஆய்வுன்னா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது, தர முடியாதுன்னா தரமுடியாது" என...