Posts

வருங்கால ஆய்வு மாணவர்களுக்கான பாடம் : ந. பழநிதீபன்

Image
எனது நண்பர், தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றி, தனது கடின உழைப்பாலும் நேர்மையாலும் பணி உயர்வு பெற்று உதவிப் பதிவாளராக இருந்து ஓய்வுப் பெற்று இருப்பவர் முனைவர் திரு. பா ஜம்புலிங்கம் அவர்கள். அவர் என் முகநூல் நண்பர் மட்டுமல்ல நான் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது அலைபேசியில் உரையாடி மகிழும் அன்பரும் ஆவார். அவர் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் "சோழ நாட்டில் பௌத்தம்" என்கிற இந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆவணமாகும். ஆசிரியர் குளிர்சாதன அறைக்குள் இருந்து, பல்வேறு புத்தகங்களை அருகில் வைத்துக் கொண்டு அவைகளிலிருந்து ஆங்காங்கே சில செய்திகளை உருவி உருவாக்கிய புத்தகம் அல்ல இது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நண்பரின் கடின உழைப்பும் அவரது நேர்மையும் அவரது வியர்வையும் நமக்கு வியப்பை ஏற்படுத்தி அன்னாரை அண்ணாந்து பார்க்க வைக்கும்! எனது நண்பர், தனது கள ஆய்வின்போது சோழ நாட்டுப் பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தனது நேரடி கள ஆய்வின் வழியாக 19 புத்தர் சிலைகளையும் 13 சமண தீர்த்தங்கரர்கள் சிலைகளையும் ஒரு நாகப்பட்டின புத்தர்...

பௌத்தக் கலைக் களஞ்சியம் : முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன்

Image
தமிழர் பண்பாட்டில் சிறந்து விளங்கும் கலைகளில் சிற்பக்கலை முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இக்கலையானது வேத ஆகமங்கள், புராணங்கள், சமய இலக்கியங்கள் அடிப்படையில் பல்வேறு சமயங்களில் காணப்படுகின்ற இறை உருவங்களை வழங்க உருவானதாகும். முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜனுடன் நூலாசிரியர் மனித வடிவில் தோன்றி, மக்களைப் பண்படுத்தப் பல்வேறு ஒழுக்க நெறிகளைப் போதித்து இறை நிலையை அடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மகாவீரரும், கௌதம புத்தரும் ஆவர். தமிழகத்தில் இன்றளவும் சமணத்தையும், பௌத்தத்தையும் பின்பற்றுபவர்கள் உள்ளனர்.  சைவ, வைணவ சமயங்கள் மறுமலர்ச்சி அடைவதற்கு முன்பாகச் சமணமும், பௌத்தமும் பரவியிருந்தன. நாளடைவில் அரசியல் மாற்றத்தால் அவை வீழ்ச்சியுற ஆரம்பித்தாலும் அவற்றைத் தொடர்பவர்கள் ஆங்காங்கே வாழ்ந்துள்ளனர். அவர்கள் தனிக்கோயில்கள் எடுப்பித்தும், தொழில் சார்ந்தவர்கள் தாம் செல்லும் இடங்களில் தனியாகச் சிற்பங்களை வைத்தும் வழிபட ஆரம்பித்துள்ளனர். இவ்வழிபாட்டில் பௌத்த சமயத்தினைச் சோழ அரச மரபினர் போற்றி வளர்த்த விதம் குறிப்பிடத்தக்கதாகும். அதற்குச் சான்றாக முதலாம் இராஜராஜசோழன் காலத்து நாகப்பட்டினப் புத்த விகார...

In search of imprints of Buddhism : Ayyampet

Image
After registering for research, among others, I started to search for a new Nagapattinam Buddha bronze in the study area. I attempted to find one such bronze since 1993. But only in 1999, I had the chance of seeing it. This is the second finding, the first one being the moustach Buddha.   Since 1856 more than 350 Buddha bronzes were unearthed, from Nagapattinam.  They are exhibited in many museums in India and abroad. During the field study carried out alongwith Mr Ayyampet Selvaraj, we found a new Nagapattinam Buddha bronze sculpture in Ayyampet, Thanjavur district. The family members who came from Nagapattinam and settled at Ayyampet worship the Buddha as Munisvaran, for the past three generations. It is of 9 cm height.  The left hand rests on the lap while the right hand is in bhumisparsa or earth-touching attitude. The face, body, and the upper garment are not clear. The iconographical feature of this image resembled one of the Nagapattinam Buddha bronzes exhibited ...

பௌத்த சுவட்டைத் தேடி : மங்கலம்

Image
மே 1998 8.5.1998இல் வந்த தி இந்து நாளிதழில் என் ஆய்வுப்பகுதியில் காணப்படுகின்ற ஒரு புத்தர் சிலையைப் பற்றிய செய்தியைக் கண்டேன்.  இதுவரை நூல்களையும், கட்டுரைகளையும் சான்றுகளாகக் கொண்டிருந்த எனக்கு முதன்முதலாக நாளிதழ் செய்தியும் சான்றாக அமைந்ததைக் கண்டேன். அன்று வந்த செய்தி (10th century Buddha statue to get separate shrine, The Hindu , 8.5.1998) மூலமாக, திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மங்கலம் என்னுமிடத்திலுள்ள அரவாண்டியம்மன் கோயிலில் பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு புத்தர் சிலை உள்ளதாகவும், அதை வைப்பதற்காக தனியாக ஒரு சன்னதி கட்டப்பட்டு வருவதாகவும் வரலாற்றறிஞர் திரு கி.ஸ்ரீதரன் கூறியிருந்தார். அந்தப் புத்தர் மீசையோடு இருந்ததும், அது நாளிதழ்களில் செய்தியாக  வந்ததும் நினைவில் நிற்கும் அனுபவம்.  ஜூன் 1998 செய்தி வந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் தஞ்சை மாவட்டத்தில் தழைத்த பௌத்தம் என்ற தலைப்பில் என் உரையினைப் பதிவு செய்வதற்காக திருச்சி, அகில இந்திய வானொலி நிலையத்திற்குச் சென்றேன். பதிவு முடிந்தபின் அங்கிருந்து மங்கலம் செல்லத் திட்டமிட்டு, திருச்சியிலிருந்து முசிறிக்குச் சென்ற...

Buddhism and Tamil : Mayilai Seeni Venkatasamy (Tr) S.Thillainayagam et al

Image
என் முனைவர்ப்பட்ட ஆய்விற்கு முதன்மை ஆதாரமாக நான் பயன்படுத்திய நூல்களில் முக்கியமானது  பௌத்தமும் தமிழும்  நூலாகும். அண்மையில் வெளியாகியுள்ள அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் என்னுடைய கட்டுரை இடம்பெற்றுள்ளது.  இலண்டன் பல்கலைக்கழக முனைவர்ப்பட்ட ஆய்வாளரான (Doctoral candidate  at Goldsmiths, University of London) திரு ஆதவன் பழனி, சில மாதங்களுக்கு முன் என்னைத் தொடர்பு கொண்டார். வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளதாகவும், அப்பணியில் பிறருடன் தானும் இணைந்துள்ளதாகவும் கூறி, அந்நூலின் பின்னிணைப்புகளில் பௌத்தம் தொடர்பான என்னுடைய ஆங்கிலக்கட்டுரை இடம்பெற இசைவினைக் கேட்டிருந்தார். நானும் இசைவினைத் தெரிவித்திருந்தேன். தற்போது அந்நூல் ( Buddhism and Tamil, Mayilai Seeni Venkatasamy, Translated by S.Thillainayagam, Aadhavan Pazhani, and G.Udhayaraj, Routledge, I Edition, 2025 ) வெளிவந்ததையும், அதில் என் கட்டுரை (Buddha statues in the Chola country, pp.133-139) இடம்பெற்றிருப்பதையும் அறிந்தேன். அந்நூலின் அன்பளிப்புப்படி...