Posts

ஆய்வாளர்களுக்கு அரும்பெரும் பொக்கிஷம்

Image
தமிழில் படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் வாசிப்பது அருமையாக இருக்கிறது 1993 தொடங்கி தற்பொழுது வரை காடுகரைகள் வயல்வெளிகள் என ஊரூராக அலைந்து திரிந்து அரும்பாடுப்பட்டு நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளையும், புடைப்புச் சிற்பங்களையும் கண்டுபிடித்து இருக்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள். இவைகளை தொகுத்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புது எழுத்து பதிப்பத்தின் மூலமாக வெளியிட்டு இருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த உயரிய வளவளத் தாளில் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களோடு சிறு குறிப்பும் வரைந்திருக்கிறார். இச்சிலைகளின் காலம் கிபி 10ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 15-17ம் நூற்றாண்டு வரைக்கும் நீளுகிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு அரும்பெரும் பொக்கிஷமாக திகழப் போகிறது. இவை பிற்கால சோழர்களின் ஆட்சியெல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கிடைத்தவை மட்டுமே. இதே போன்று பாண்டிய, சேர, பல்லவ நாடுகளிலும் இளைஞர்கள் களப்பணியில் ஈடுபட வேண்டுமென்பதற்கு அய்யா நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். போற்றுதலுக்குரிய இவ்வரிய பணியை செய்து கொடுத்த அய்யாவுக்கு நன்றி. --------------------------------------------------------------------------...

வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்

Image
அசோகர் காலத்தில் தென்னிந்தியாவிற்கு வந்த பவுத்தம். தமிழ்நாட்டிலும் பரவியது. இதற்கு இலக்கியங்கள், வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் சான்றுகளாக இருந்து வருகின்றன. முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் தனது களப்பணி மூலமாக பூம்புகார், நாகப்பட்டினம் உள்ளிட்ட புத்த விகாரங்களுக்கும்.. புத்தர் கோயில்களுக்கும் நேரில் சென்று புத்தரின் சிற்பங்கள் குறித்து ஆய்வுகள் செய்து அவற்றில் புத்தர் சிலைகள் புத்தர் அல்லாத சிலைகள் பற்றி விரிவாக ஆய்வு நோக்கில் ஆராய்ந்து சோழ நாட்டில் பவுத்தம் என்ற நூலை 2022 ஆம் ஆண்டு படிமம் பதிப்பகம் சார்பில் வெளியிட்டார். இந்நூலில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகள் குறித்து படத்துடன் விரிவாக ஆய்வு நோக்கில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.. இந்நூல் தற்போது ஆங்கிலத்தில் "BUDDHISM IN CHOLA NADU" எனும் தலைப்பில் பல்வேறு புத்தர் சிற்பங்களுடன் படிமம் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது.. முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் களப்பணியும்.. ஆய்வுகளும் வரலாற்...

In search of imprints of Buddhism: Art Gallery, Thanjavur

Image
After registering for M.Phil, ( Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district , Madurai Kamaraj University, Madurai, 1995) I started referring to the books on Buddhism. Later in order to understand the iconographical aspects of Buddha, I planned to visit the museums in the composite Thanjavur district, Tamil Nadu, India. I came to know, that in those days, in mid-1990s, Buddha statues were found in Art Gallery and Tamil University Museum. Through my friends I came to know that I could get some important information about the Buddha statues if I meet former Curator of Art Gallery, Mr S.Rathnasabapathy before my visit to the Art Gallery. So, I went to his house. I introduced myself to him and about my work. He told me that in his forthcoming books he discussed about the two granite Buddha statues (Stone Sculptures, Manuscript, 1983) and one Nagapattinam Buddha bronze sculpture (Divine Bronzes (Miscellaneous), Manuscript, 1983) exhibted in the Art Gallery and gave...

வரலாற்று ஆய்வில் சிறு சேதாரச்சில்லும் உதவும்

Image
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள   சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு வரலாற்று நூலின் பக்கங்களிலிருந்து   சொல்லமுடியாத பெயர்தெரியாத ஓர் உணர்வு நம் மனதை கனக்கவைக்கிறது. காரணம், பீடும் பெருமையும் கொண்டிருந்த ஓர் மன்னர்குலமோ மத நிறுவனமோ அல்லது மற்ற ஏதோ ஓர் அமைப்போ காலவோட்டத்தில் பலகாரணிகளால் தன் நிலை இழந்து மறைவைத் தொட்டும் தொடாமலும் விட்டுப்போன அவற்றின் சுவடுகள் ஒரு சரித்திரத்தை அதன் பல நூற்றாண்டுகளின் வீழ்ச்சியை நாம் நூல் வாசிக்கும் சிறுபொழுதில் நம்முள் இறக்கிவைத்துவிடுகிறது. பரதகண்ட பூமிப்பரப்பில் பொ.ஆ.முன் ஐந்தாம்  நூற்றாண்டில்  கவுதமபுத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட புத்தமதம் தென்னிந்தியாவில்-தமிழகத்தில் இருந்தும் பின் மறைந்துபோனது. அது அக்கம்பக்க நாடுகளில் பரவியிருக்கிறது. அந்த வரலாற்றுப் பெருவெளியைப் பார்வையிட்டு அதனுள் சோழநாட்டை மட்டும் எல்லைகாட்டி  அதுபற்றி வாசித்து அறியப்பட்ட, அதனுள் தேடிக்கிடைத்த ஆதாரங்கள் மெய்ப்பிக்க உதவும் அயல்நாட்டவர் குறிப்புகள் என்று ஒல்லும் வகையிலெல்லாம் உழைத்து மெய்ம்மை...

புத்தர் சிலைகளை ஒருசேரப் பார்க்கும் வாய்ப்பு: சுப்ரஜா கண்ணன்

Image
ஜென் மூலை என்ற ஒருவகையான வாஸ்து தற்போது ப்ரபலமாகி உள்ளது. அதனால் புத்தர் சிலைகளை அனைவரும் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அலங்காரத்திற்காக அல்லாமல் வயல்களின் அருகே, காடுகளின் உள்ளே, குளங்களில், குட்டைகளில், பல்லாயிரம் ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும்‌ இல்லாமல், வழிப்பாடும் இல்லாமல் கேட்பாரின்றி கிடக்கும் புத்தர் சிலைகளை கண்டதுண்டா? அப்படி கண்டிருந்தாலும் அது புத்தர் சிலை தானா என்று தெரிந்திருக்குக்கூடுமா? புத்தர் வழிபாடு எப்போது தமிழகத்தில் தொடங்கியது? யாரால் கொண்டு வரப்பட்டது? புத்தருக்கென்று தனியாக கோவில்கள் இருந்தனவா? எங்கே? இப்போது அவைகளின் நிலமை என்ன? பண்டைய காலத்து புத்தர் சிலைகளை பார்க்கும்போது இப்படி பல கேள்விகள் நம்முள் எழுகின்றன அல்லவா? இனி அந்தக் கேள்விகளுக்கு இடமில்லை (குறிப்பாக சோழ நாட்டு மக்களுக்கு). சோழநாடு என்று அறியப்படுகின்ற தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை‌ சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகள் அனைத்தையும் தேடி ஆராய்ந்து தொகுப்பாக்கி அனைவரும் பயன்பெறும் வகையில் “Buddhism in Chola Nadu” என்ற புத்தகமாக வெளியிட்டி இருக்கிற...