புத்தர் சிலைகளை ஒருசேரப் பார்க்கும் வாய்ப்பு: சுப்ரஜா கண்ணன்
ஜென் மூலை என்ற ஒருவகையான வாஸ்து தற்போது ப்ரபலமாகி உள்ளது. அதனால் புத்தர் சிலைகளை அனைவரும் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அலங்காரத்திற்காக அல்லாமல் வயல்களின் அருகே, காடுகளின் உள்ளே, குளங்களில், குட்டைகளில், பல்லாயிரம் ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல், வழிப்பாடும் இல்லாமல் கேட்பாரின்றி கிடக்கும் புத்தர் சிலைகளை கண்டதுண்டா? அப்படி கண்டிருந்தாலும் அது புத்தர் சிலை தானா என்று தெரிந்திருக்குக்கூடுமா? புத்தர் வழிபாடு எப்போது தமிழகத்தில் தொடங்கியது? யாரால் கொண்டு வரப்பட்டது? புத்தருக்கென்று தனியாக கோவில்கள் இருந்தனவா? எங்கே? இப்போது அவைகளின் நிலமை என்ன? பண்டைய காலத்து புத்தர் சிலைகளை பார்க்கும்போது இப்படி பல கேள்விகள் நம்முள் எழுகின்றன அல்லவா? இனி அந்தக் கேள்விகளுக்கு இடமில்லை (குறிப்பாக சோழ நாட்டு மக்களுக்கு). சோழநாடு என்று அறியப்படுகின்ற தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகள் அனைத்தையும் தேடி ஆராய்ந்து தொகுப்பாக்கி அனைவரும் பயன்பெறும் வகையில் “Buddhism in Chola Nadu” என்ற புத்தகமாக வெளியிட்டி இருக்கிற...