உலக மரபு வாரம் 2023 : தமிழக நடுகல் மரபு

தஞ்சாவூர், சங்கீத மகாலில் உலக மரபு வாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய நடுகல் மரபு தொடர்பான வரலாற்றுக் கண்காட்சி 19.11.2023 முதல் 24.11.2023 வரை நடைபெற்றது. நடுகல் மர பினை ஒரு பறவைப்பார்வையில் நம் முன் கொண்டுவந்து நிறுத்திய அமைப்பாளர்களின் முயற்சி போற்றத்தக்கதாகும். இக்கண்காட்சிக்குச் சென்றது ஒரு நினைவில் நிற்கும் அனுபவம். நடுகற்களைப் பற்றி உரிய குறிப்புகளுடன் காட்சிப்படுத்திப்பட்டிருந்த விதமும், பார்வையாளர்களுக்கு யாக்கை குழுவினர் விளக்கிய விதமும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக "மரபுச்சின்னங்களைக் கண்டறிதல், ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வுக்கான எதிர்காலத் திட்டமிடல்", என்ற தலைப்பில் 24.11.2023இல் நடைபெற்ற கலந்துரையாடல் குழுவில் பங்கேற்று, கருத்துகளைத் தெரிவிக்கும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். அப்போது ஆய்வின்போது நான் கண்ட புத்தர் சிலைகளைப் பற்றியும் என்னுடைய சோழ நாட...