சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 2023
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை (Chennai International Book Fair, 16-18 ஜனவரி 2023) முன்னிட்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காப்புரிமை நூற்றொகுப்பில் புது எழுத்து வெளியிட்டுள்ள சோழநாட்டில் பெளத்தம் (பா.ஜம்புலிங்கம்), திருச்சாழல் (கண்டராதித்தன்), கூலிக்காரப் பயலுக (அறிவழகன் கைவல்லியம்) ஆகிய மூன்று நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் என் நூலும் உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
இச்செய்தியைப் பெருமையுடன் எனக்குத் தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதோடு ஒளிப்படங்களை அனுப்பிய என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் பதிப்பாளர் புது எழுத்து திரு சுகவன முருகன் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதொடர்பான திரு சுகவன முருகன், திரு அறிவழகன் கைவல்லியம் ஆகியோரின் முகநூல் பதிவுகள்
இக்கண்காட்சிக்குச் சென்ற எங்கள் இளைய மகன் திரு சிவகுரு அனுப்பிய புகைப்படங்கள்.
சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி 2025க்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காப்புரிமை நூற்றொகுப்பில் புது எழுத்து வெளியீடான என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் ஆங்கில நூலின் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
4 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
அருமை... வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteமகிழ்ச்சி வாழ்த்துகள் எமது...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
ReplyDelete