துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும்!

இந்து மதம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களின் தாயகம் இந்தியா. இவற்றில் இ ந்தியாவுக்கு வெளியிலும் ஆதிக்கம் செலுத்திய மதம் பௌத்தம். அன்றைய காலத்தில் ஒரு குட்டி காஸ்மோபாலிட்டனாக இ ருந்த தஞ்சையிலும் பௌத்தத்தின் தாக்கம் இ ருந்து, காலப்போக்கில் அருகிப்போய்விட்டது. இ ந்தச் சூழலில் தஞ்சை மண்ணில் பௌத்தத்தின் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஆய்வாளராகிய முனைவர் பா.ஜம்புலிங்கத்தைச் சந்திக்கச் சென்றோம். தஞ்சை சரஸ்வதி மகாலில் தனது நண்பரைப் பார்க்க வந்திருந்த ஜம்புலிங்கத்துடன் நிகழ்ந்த சந்திப்பு இ து. நெற்றியில் திருநீறு துலங்க நம்மை வரவேற்றார் ஜம்புலிங்கம். "தீவிர சைவ சமய பக்தரான நீங்கள் பௌத்தம் தொடர்பான ஆராய்ச்சியில் இ றங்கியது எப்படி என்ற கேள்வியிலிருந்து நம் உரையாடலைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன் " என்றேன். 'ஹா... ஹா... ' என்று சிரித்தபடி பேச ஆரம்பித்தார் ஜம்புலிங்கம். "சோழ நாட்டில் பௌத்தத்தின் தடத்தைத் தேடும் ஆய்வை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கினேன். அன்று முதல் இ ன்று வரை என்னைப் பார்க்கும்...