Posts

Showing posts from May, 2015

தமிழர் வழிபாடு : முனீஸ்வர புத்தர்

Image
அரண்மனையைத் துறந்தவர்...துறவறம் பூண்டவர இளவரசர் கௌதம புத்தர். அவரது பௌத்த மதம் ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக பின்பற்றப்பட்டது. அவருடைய சிலைகளை தேடுவதை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வேள்வியாக செய்து வருகிறார், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் ஜம்புலிங்கம். அவரது அனுபவங்கள்: "நான் 'எம்ஃபில்' பட்டத்துக்காக கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் தொடர்பாக ஆய்வு செய்ய விரும்பினேன். ஆனால், ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருந்தது. தமிழில் படித்து, ஆங்கிலத்தில் புரிந்துகொண்டு, எழுதுவது சிரமம் என்பதால் 'தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்தேன். முதலில், தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் போய்ப் பார்த்தேன். அவை தொடர்பான விவரங்களையும் நூல்களையும் படித்து....சிலைகள் காணப்பட்ட இடங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகளை சேகரித்தேன். பின்னர், நேரம் கிடைத்தபோது அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். இந்த மாவட்டத்தில் பெரும்பாலான புத்தர் சிலைகள்...அமர்ந்த நிலையில் அல்லது தியான கோலத்தில் உள்ளன. நின்றப...