நூல் வடிவம் பெறும் சோழ நாட்டில் பௌத்தம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (B.Jambulingam, Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, Madurai Kamaraj University, Madurai, 1995) ஆய்வினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினையும் (பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999), புதுதில்லி, நேரு டிரஸ்ட் மூலமாக ஓர் ஆய்வுத்திட்டத்தினையும் (Buddhism in the Cola country, Project, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 2002) நிறைவு செய்தேன்.
பணியாற்றிக்கொண்டே களப்பணியினை மேற்கொண்டபோது எதிர்கொண்ட சூழல் சற்றே சிரமமானது. இருப்பினும் எந்த நிலையிலும் ஆய்வேட்டில் விடுபாடு இருக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு பல இடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை களப்பணி சென்றேன். அவ்வப்போது பெற்ற அனுபவங்களை என் வலைப்பூவில் பகிர்ந்ததோடு, அதில் மாற்றங்களோ, மேம்பாடோ மேற்கொள்ளும்போது அதனை பதிவின் இறுதியில் தரும் முறையைத் தொடர்ந்து கடைபிடிக்கிறேன்.
நிர்வாகப் பணியாளரான என்னை ஆய்வாளராக உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும், ஆய்வில் சேர்ந்த முதல் இன்றுவரை என் முயற்சிக்குத் துணை நிற்கும் அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், ஊடகத்தினர், தகவலாளர்கள், என் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
20..11.2022இல் நூலின் படியை பதிப்பாளர் திரு சுகவன முருகன் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம், 635 112, அலைபேசி 9842647101, மின்னஞ்சல்: editorpudhuezuthu@gmail.com, செப்டம்பர் 2022, ரூ.1000) அவர்களிடம் எங்கள் இல்ல நூலகத்தில் பெற்ற தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும். நேரில் வந்து நூலின் படிகளைத் தந்த அவருடைய பெருமனது போற்றத்தக்கது. சிறப்பாக வடிவமைத்து நூலாக்கம் செய்த அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
![]() |
தொடர்ந்து அதன் ஆங்கிலப்பதிப்பினையும் (Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2/203, Anna Nagar, Kaveripattinam, 635 112, Mobile 9842647101, email: editorpudhuezuthu@gmail.com, 2023. Rs.1500) சிறப்பாக அவரே பதிப்பித்து என் முயற்சிக்குத் துணைநின்றார். அதன் முதல் படியை 7.7.2024இல் சென்னையில் எங்கள் மூத்த மகன் இல்லத்தில் நேரில் வந்து தந்தார். |
.jpg)





தங்களது பணி மேலும் சிறக்கவும், நூல் வடிவம் பெற்றமைக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete150-ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள்
அருமை... வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteதங்களின் பணி தொடர வாழ்த்துகள்
தங்களின் பணி தொடர வாழ்த்துகள்
ReplyDeleteவணங்குகிறேன் ஐயா
ReplyDelete