Posts

அடுத்த தலைமுறையினருக்கான வழிகாட்டி நூல் : அய்யம்பேட்டை என்.செல்வராஜ்

Image
தஞ்சாவூரில் உள்ள வரலாற்று அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் பா. ஜம்புலிங்கம். அவர், சோழ தேசத்தில் பௌத்தத்தின் எஞ்சிய சுவடுகள் தேடி, களப்பயணம் மேற்கொண்டு, கண்டறிந்த புத்தரின் திருமேனிகளை, நூலாக்கம் செய்து, அரிய பொக்கிஷமாக வழங்கி உள்ளார்.. தமிழ் கூறும் நல்லுலகிற்கு, "சோழ நாட்டில் பௌத்தம்" தந்த அறிஞர், பௌத்தத்தின் பொற்காலம், திக்கெட்டில் உள்ளோரையும் சென்றடைய வேண்டுமென்று, ஆங்கிலத்தில் வடித்துத் தந்துள்ள அற்புதமான நூல்... உயர்தரமான பேப்பரில், மௌன மொழி பேசிடும், புத்தர் பெருமானின், அரிதான புகைப்படங்களுடன், தகுந்த விளக்கங்களுடன், வரலாற்று உலகிற்கு வழங்கியுள்ளார்.... ஒரே ஆய்வாளர், தன்னுடைய படைப்பை, தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கி இருப்பது கூடுதல் சிறப்பு... அடுத்த தலைமுறையினர், இதன் தொடர்ச்சியாக, ஆய்வுகள் மேற்கொள்ள, வழிகாட்டும் நூலாகவும் இவை உள்ளன. வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், இல்ல நூலகத்தில், இவ்விரண்டு நூல்களும் உரிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை...... ------------------------------------------------------------------------------------------- நன்றி: திரு அய்யம்பேட்டை என...

வருங்கால ஆய்வாளர்களுக்கு முக்கியத் தரவு : ஜெயபால் இரத்தினம்

Image
உலகின் பழமையான ஆன்மீகப் பாதைகளில் ஒன்றான பௌத்தம், தமிழகத்தில் பொதுக்காலத்திற்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் பரவத்தொடங்கி, பல நூற்றாண்டுகள் வரை உயர் செல்வாக்குடன் திகழ்ந்திருந்து, பின்னர் படிப்படியாக செல்வாக்குக் குறையத்தொடங்கி, பின்னர் சோழர்ஆட்சியில் புத்தெழுச்சி பெற்றது என்பதும், பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் செல்வாக்கிழந்தது என்பதும் ஆய்வாளர்கள் அளிக்கும் தகவல்கள். ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் கலவையுடனும், வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் இலக்குகளுடனும் செயல்பட்டு, நீண்ட நெடிய காலம் தமிழ் மண்ணில் நிலைபெற்றிருந்த பௌத்தம் ஆன்மீகம், தமிழ் மொழி மற்றும் பண்பாடு ஆகியப் பரப்புக்களில் பல அழியாத முத்திரைகளைப் பதித்துள்ளது. அது விட்டுச்சென்ற தடயங்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் புத்தர் பெருமான் சிலைகள். தமிழகத்தில் நிலவிய பௌத்தமதப் பரவலுக்கு சான்றளிக்கும் முக்கியத் தரவுகளில் ஒன்றாக விளங்குவது புத்தர் சிலைகள். சோழநாட்டுப் பகுதிகளில் காணக்கிடைக்கும் புத்தர் சிலைகள் குறித்த ஆய்வாக வெளிவந்திருக்கும் நூல் ‘சோழநாட்டில் பௌத்தம்’. நூலாசிரியர்: முனைவர். பா. ஜம்புலிங்கம் அவர்கள்...

தமிழ்ச் சமூகத்திற்கு அறிவுக்கொடை : திரு இரா.விஜயன்

Image
பௌத்தம் அது தோன்றிய காலத்திலேயேத் தமிழகத்தில் பரவத் தொடங்கிற்று. தமிழ் நிலம், தமிழ்ச்சமணம் என்ற வகைமையை உருவாக்கியது போன்றே, தமிழ்ப் பௌத்த  மரபு ஒன்றையும் ஒத்து உறழ்ந்து இங்கு உருவாக்கிற்று. தமிழ்க் காப்பிய மரபு அந்நிகழ்ச்சிப் போக்கின் பெரும் சான்றாய்த் திகழ்கிறது. குறிப்பாக சோழநாட்டில் அதன் தாக்கம் மிக வீரியமாய் இருந்தது. அத்தாக்கத்தின் அழியாச் சாட்சிகளாய்ச் சோழ நாட்டின் உள்ளொடுங்கிய கிராமங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெரும் புத்தர் கற்சிலைகள் நீடிக்கின்றன. முனைவர் பா. ஜம்புலிங்கம் தனது வாழ்நாள் பணியாக பல பௌத்தத் தலங்களையும், சிதறிக்கிடந்த சிறிய பெரிய புத்தர் சிலைகளையும் தளரா ஆய்வுவேட்கையோடுத் தேடிக் கண்டுபித்துத் தமிழ் சமூகத்திற்கு அறிவுக் கொடையாக அளித்துள்ளார். சோழ நாட்டில் பௌத்தம் என்ற அவரது நேரிய பெருநூலின் மேன்மையை உணர்ந்து போற்றித் தோழர் புது எழுத்து மனோன்மணி அவர்கள் தனது பதிப்புப் பணியின் சாதனைகளில் ஒன்றாக உயரிய வடிவமைப்புடன் துல்லியமான வண்ணப்படங்களுடன் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். சோழ நாட்டில் பௌத்தம், தமிழிலும் ஆங்கிலத்திலும், கெட்டி அட்டையுடன் பக்கத்துக்குப்பக்கம் உயர்...

ஆய்வுக்கு ஓய்வேது? : பேராசிரியர் இராம. குருநாதன்

Image
’சோழநாட்டில் பெளத்தம்’ நூலினைப் படித்து நெடுங்காலம் ஆயிற்று. பல்வேறு அலுவல்கள், பயணங்கள், கூட்டங்கள் எனக் காலம் கழிந்தது. இப்போதுதான் அந்நூல் பற்றி எழுதக் காலம் கனிந்தது. இருப்பினும் அலைபேசி வழியே தங்களின் நிகழ்வுகளைப் பார்த்துவருகிறேன். ஆய்வுக்கு ஓய்வேது? அலைகளுக்கும் காற்றுக்கும் ஓய்வுண்டா? தங்களின் ஆய்வுக்கும் தேடல் முயற்சிக்கும் ஓய்வேது?. இயங்கிக்கொண்டே இருப்பது உள்ளத்திற்கு உரமல்லவா! அது உடலுக்கும் உணர்வுக்கும் மகிழ்ச்சி அளிக்குமல்லவா? அந்த வகையில் இடைவிடாத முயற்சி தங்களுடையது. அதற்கென் வாழ்த்துகள். நூலில் நுழைந்ததுமே பதிப்புரையில் அரிய செய்திகளைக் குறிப்பிட்டிருப்பதும், தேடலில் பயணித்ததைத் தக்க வகையில் தந்திருப்பதும் பாராட்டுக்குரியவை. மிகவும் பழமையான மதங்களில் புத்த மதமும் ஒன்று. புத்தரின் சிந்தனைகள் தமிழகம் மட்டுமன்றி உலகெங்கும் பயணித்தவை. சங்க காலத்திலேயே புத்தர் சிந்தனைகள் இருந்துள்ளன என்பதற்குச் சங்க இலக்கியப்புலவர்களின் கருத்தோவியங்களே சான்று. சங்க காலத்திய புலவர்கள் சிலர் புத்தமதத்தையும் தழுவியிருந்தார்கள். ஒரு சொற்பொழிவுக்காக, இலங்கைக்கு நான் சென்றிருந்தபோது, நம்மூரில்...

போற்றத்தக்க முயற்சி : முனைவர் பா.மதுசூதனன்

Image
உலக மக்களை நல்வழியில் பண்படுத்தி அவர்களின் வாழ்வு சிறப்புற வழிநடத்தும் மகான்கள் அவதரித்த இப்புண்ணிய பூமியில், மனிதகுலம் சிறக்கவும் அவர்களின் வாழ்வு மேம்படவும், அவர்களது இன்னல்கள் களைந்தெறியவும் ஒரு அணையா ஜோதியாக அவதரித்தவர் மகான் கௌதம புத்தர் ஆவார். அத்தகைய மகான் தோற்றுவித்த புத்த சமயம் சோழநாட்டில் தொன்றுதொட்டு வளர்ந்து வந்ததாக பல வரலாற்றுச் செய்திகளை நான் படித்துள்ளேன். அதன் வழியில் நண்பர் முனைவர்.பா.ஜம்புலிங்கம் அவர்கள் ‘சோழநாட்டில் பௌத்தம்’ என்ற தலைப்பில்  வழங்கியுள்ள அற்புதமானதொரு வரலாற்று ஆய்வு நூல் மிகவும் சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்கும் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். சைவம் வைணம் போன்ற சமயங்கள் தமிழகத்தில் தொன்றுதொட்டு வளர்வதற்கு முன்னர் பௌத்த மதம் பரவியிருந்த செய்திகள் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது. சோழ நாட்டில் பௌத்தம் வளர்ந்ததற்கான குறிப்புகள் பல ஆய்வு நூல்கள் மூலமாக அறியப்பெறுகிறது. அவ்வழியில் நண்பர் ஜம்புலிங்கம் அவர்கள் எழுதிய இப்புத்தகம் சோழ நாட்டில் பௌத்தம் வளர்ந்த செய்திகள் போன்றவை அவரது ஆய்வுத்தேடல்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ...