Posts

திருவாரூர் மாவட்டத்தில் பௌத்தம்

Image
திருவாரூர் மாவட்டத்தில் பௌத்த சமயச் சான்றுகளாக புத்தர் சிலைகள் இடும்பவனம், இலையூர், உள்ளிக்கோட்டை, கண்டிரமாணிக்கம், கோட்டப்பாடி, சீதக்கமங்கலம், திருநாட்டியத்தான்குடி (இரு சிலைகள்), திருப்பாம்புரம், புதூர், மன்னார்குடி, வலங்கைமான், வளையமாபுரம், விடையபுரம் ஆகிய இடங்களில் உள்ளன. இவற்றில் இலையூர், கண்டிரமாணிக்கம், வலங்கைமானைச் சேர்ந்த சிலைகள் அருங்காட்சியகங்களிலும் விடையபுரம் சிலை குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்திலும் உள்ளன. தலை இல்லாத சிலை, தலைப்பகுதி மட்டும் உள்ள சிலை என்ற வகையில் இவை காணப்படுகின்றன. முதலில் களத்தில் உள்ள சிலைகளைப் பார்த்துவிட்டு அருங்காட்சியகங்களுக்குச் செல்வோம்.  இடும்பவனம் அருகில் காடுவெட்டியில் பொ.ஆ.9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ‘அம்மணசாமி’ என்றழைக்கப்பட்ட அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலை, நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, மேலாடை ஆகியவற்றுடன் இச்சிலை இருந்தது. மன்னார்குடி அருகில் உள்ளிக்கோட்டையில் செட்டியார்மேடு என்னுமிடத்தில் ‘செட்டியார்’ என்று...

அயோத்திதாசர் ஆதவன் விருது

Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களால் 19ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் ஏப்ரல் 2025இல் வெளியிடப்பட்டது.   இப்பட்டியலில் அயோத்திதாசர் ஆதவன் விருது எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா நாளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழைப் பெற்றேன். 24 ஜூன் 2025 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 4.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  விழா, அழைப்பிதழில் உள்ள நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி சிறப்பாக நடைபெற்றது.  என்னுடைய ஏற்புரையில் இவ்விருதிற்காக என்னைத் தேர்ந்தெடுத்த எழுச்சித்தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தேர்வுக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், விருதுகள் பெற்ற சக ஆளுமைகளுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.  இவ்விழாவில்  நிகழ்வில் பல துறைகளைச் சார்ந்த ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். ...

அறிவியலாளர் நெல்லை சு.முத்து

Image
அன்பு நண்பரும் அறிவியல் எழுத்தாளருமான திரு நெல்லை சு.முத்து அவர்கள் இயற்கையெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவருடைய எழுத்தும், வாசிப்பும் போற்றத்தக்கன. நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், மிகச்சிறந்த அறிவியல் நூல்களும் எழுதியவர். அவருடைய அறிவியல் ஆர்வத்தை பிறர் தம்மை அதில் ஈடுபடுத்திக்கொள்ளும் அளவிற்குப் பயன்படுத்தியவர். மிக எளிமையான சொற்களில் அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய அறிவியல் கட்டுரைகளைப் படிக்கும்போது நம்மை உடன் அழைத்துக்கொண்டுபோவது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். எங்கும் நெருடல் இன்றி அதே சமயத்தில் நீண்ட சொற்றொடரைப் பயன்படுத்தாமல் வாசிக்கும்போது மனதில் பதியும் அளவிற்கு எழுதும் ஆற்றல் படைத்தவர். அவர் சொற்களைப் பயன்படுத்தும் விதம் வியப்பினை உண்டாக்கும். அவருடைய மொழிபெயர்ப்பு ஆற்றல் ஆய்வாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். தி வீக் ஆங்கில இதழில் வெளியான நீங்கள் க்ளோன் செய்யப்படலாம் என்ற கட்டுரையினை மொழிபெயர்த்து அறிக அறிவியல் இதழில் எழுதினேன். படியாக்கம் தொடர்பாக நான் முதன்முதலாக எழுதிய அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு அதிகம் பாராட்டினார்....

திருச்சி மாவட்டத்தில் பௌத்தம்

Image
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 200 ஆவது கட்டுரை. தொடர்ந்து வாசித்து, ஆதரவு தரும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. திருச்சி மாவட்டத்தில் பௌத்தத்தின் சான்றுகளாக ஆயிரவேலி அயிலூர், கீழ்க்குறிச்சி, குழுமணி, திருச்சி, திருப்பராய்த்துறை, பேட்டைவாய்த்தலை (இரு சிலைகள்), மங்கலம், முசிறி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளும், கீழ்க்குறிச்சியில் ஒரு கல்வெட்டும் உள்ளன. இவற்றில் மூன்று புத்தர் சிலைகள் திருச்சி அருங்காட்சியகத்திலும், ஒரு சிலை மதுரை அருங்காட்சியகத்திலும் உள்ளன. தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகிலுள்ள ஆயிரவேலி அயிலூரில் ஒரு புத்தர் சிலை உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள இந்தச் சிலை நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், பிரபை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பில் மேலாடை ஆகியவற்றுடன் உள்ளது. மூக்கு, இடது கண், சுருள்முடியின் இடது புறம், மார்பின் ஒரு பகுதி ஆகியவை சிதைந்துள்ளன. இச்சிலைக்குத் திருநீறு பூசி வழிபடுகின்றனர். சிறப்பு நாள்களில் சிலையின் முன்பு கோலம் போட்டு, மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர். திருச்சிக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ. தொலைவில் உள்...

சமண சுவட்டைத் தேடி

Image
மன்னார்குடி, மல்லிநாதஸ்வாமி ஜினாலயத்தின் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று (9 மே 2025) சமண சுவட்டைத் தேடி என்னும் தலைப்பில் உரையாற்றினேன். வாய்ப்பு தந்த திரு பத்மராஜ் ராமசாமி உள்ளிட்ட விழாக்குழுவினருக்கும், உடன் வந்த திரு ராமகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றி.  உரையின் சுருக்கத்தைக் காண்பதற்கு முன்பாகக் கோயிலைச் சற்றே சுற்றி வருவோம். தொடர்ந்து உரையைக் காண்போம். உரையின் சுருக்கம் மன்னார்குடி மல்லிநாதஸ்வாமி ஜீனாலய பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதை எனக்குக் கிடைத்த ஒரு பெரும்பேறாகக் கருதுகிறேன். ஒரு பத்தியாக என்னுடைய முனைவர்ப்பட்ட ஆய்வேட்டில் இடம்பெற்ற குறிப்பானது சற்றே என்னை சமணத்தை நோக்கி இழுத்துச்சென்றது. முனைவர்ப் பட்ட ஆய்விற்காக ( சோழ நாட்டில் பௌத்தம் , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) பௌத்த சமயம் தொடர்பான சான்றுகளைத் தேடிச் சென்றபோது சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறான சிலைகளை தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் செண்பகரன்யேஸ்வரர் கோயில் ,  திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி அருகில்  தப்ளாம்புலியூர்,   அரியலூர் மாவ...