பௌத்த சுவட்டைத் தேடி : புத்தமங்கலம்
ஜனவரி 1995
ஜனவரி 1999
டிசம்பர் 1999
உள்ளே அமர்ந்த கோலத்தில் அழகான சிலையைப் பார்த்தேன். மழை வருவதற்காக சிலையின் தலையில் பட்டை மிளகாய் அரைத்து மேலே ஊற்றி, எருக்கம்பூ மாலை போட்டால் ஓரிரு மணி நேரத்தில் மழை வரும் என்றும், முன்னர் இவ்வாறு செய்துவந்ததாகவும், தற்போது மண்டபம் கட்டி விட்டதால் அவ்வாறு செய்யமுடியவில்லை என்றும் கூறினர். திருநாட்டியத்தான்குடி, விக்கிரமங்கலம், கிராந்தி ஆகிய இடங்களில் மழையைத் தொடர்புபடுத்திக் கூறுவதைக் களப்பணியின்போது நான் கேட்டுள்ளேன். கோடைக் காலத்தில் தாய்லாந்திலிருந்து புத்த மதத்தினர் அங்கு வந்து முடி எடுத்து விழா நடத்தி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவர் என்றும் தெரிவித்தனர்.இவ்வாறாக முடியெடுப்பதை புட்பவனம் செல்லும்போது கேள்விப்பட்டேன். புத்தருடன் வழிபாட்டில் நம்பிக்கையைத் தொடர்புபடுத்துவதைக் களப்பணியின்போது பல இடங்களில் காணமுடிந்தது.
ஜூலை 2004
தாய்லாந்து மாணவர்கள் புத்தமங்கலத்தில் உள்ள புத்தர் கோயிலின் மேற்கூரையில் செங்கல் ஓடுகளைப் பதிக்கவுள்ளதாக நாளிதழில் செய்தியை (நாகை அருகே புத்தர் சிலைக்குக் கோயில் கட்டிய தாய்லாந்து மாணவர்கள், தினமணி, 14.7.2004) கோயிலின் படத்துடன் (கீழுள்ள படம்) வெளியானதைக் கண்டேன்.
எனது ஆய்வின்போது மேற்கொண்ட களப்பணியில் புத்தமங்கலம் என்ற பெயரில் மூன்று ஊர்களைக் காணமுடிந்தது. அவை முறையே கும்பகோணம் காரைக்கால் சாலையில் கிள்ளியூர் அருகிலும், கும்பகோணம் சீர்காழி சாலையிலும், கீழ்வேளுர் அருகேயும் உள்ளன. இவ்விடங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் அருகேயுள்ள புத்தமங்கலத்தில் மட்டுமே புத்தர் சிலையைக் காணமுடிந்தது. பௌத்தம் அல்லது புத்தர் தொடர்பான பெயர்களைக் கொண்ட வேறு எந்த ஊரிலும் இவ்வாறாக புத்தர் சிலையைக் காணமுடியவில்லை. அவ்வகையில் புத்தமங்கலம் பெற்றுள்ள சிறப்பை என்னால் உணரமுடிந்தது.
வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்களுடன் ஆய்வு தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தபோது பௌத்தம் தொடர்பான பெயர்கள் உள்ள ஊர்களைப் பார்க்கும்படிக் கூறியிருந்தார். என்னுடைய ஆய்வின் ஒரு பகுதியாக இவ்வாறான ஊர்களைத் தேடலும் அமைந்தது.
ஜனவரி 1999
டிசம்பர் 1999க்குள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டை பல்கலைக்கழகத்தில் அளிப்பதற்கு வசதியாக அதிகமாக களப்பணி மேற்கொண்டிருந்தேன். நாளிதழ்களிலும், பிற நூல்களிலும் வரும் செய்திகளைத் தொகுத்து வந்தேன். இந்நிலையில் நாளிதழில் (துண்டித்த தலையுடன் கூடிய புத்தர் சிலை, தினமலர், 1.1.1999) ஒரு செய்தியைக் கண்டேன். "நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் அகரகடம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட புத்தர்மங்கலம் கிராமத்தில் புத்தர் சிலை உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தலைப்பகுதி மட்டும் தனியே துண்டிக்கப்பட்ட சிலை அநாதையாகக் கிடந்தது. இந்த நிலையில் கிராம பிரமுகர்கள் சிலர் முயற்சித்து தாய்லாந்து நாட்டுப் புத்த மதத்தினரின் உதவியுடன் கிராம மக்கள் சிலை இருந்த இடத்தில் பீடம் ஒன்றை அமைத்து புத்தர் சிலையை அந்தப் பீடத்தில் வைத்தனர். ஆனால் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் அவர்களால் தனியாக பிரித்து எடுக்க முடியாத வகையில் இணைக்கமுடியாத வகையில் என்றும் அச்சிலை துண்டித்த தலையுடன்தான் இன்னமும் அந்த பீடத்தில் உள்ளது".
களப்பணியின்போது அய்யம்பேட்டை,
முழையூர் முதலிய இடங்களில் புத்தர் சிலையின் தலைப் பகுதி இருந்ததாகக்
கேள்விப்பட்டேன். ஆனால் முதன்முதலாக தற்போதுதான் இவ்வாறாக தலைப்பகுதி
இணைக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றி அறிந்தேன். அச்சிலையைக் காணும் நாளை
ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்.
தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்குப் பேருந்தில் பயணித்து, பின்னர் அங்கிருந்து கீழ்வேளூர் சென்றேன். பேருந்தைவிட்டு இறங்கி சிலை இருக்கும் இடத்தைப் பற்றி விசாரித்தேன். "வெளிநாட்டு புத்தபிட்சுகள் வருவார்களே அந்தக் கோயிலைக் கேட்கிறீர்களா" என்றார் ஒருவர். "மழையை வரவழைக்கும் சாமியைப் பார்க்க வந்தீங்களா" என்றார் மற்றொருவர். மிக அருகில் அவ்விடம் உள்ளது என்றும் நடந்து சென்றுவிடலாம் என்றும் கூறினர். சுமார் 2 கிமீ நடந்து செல்லவேண்டியிருந்தது. அங்கு அழகான கூரையுடன் கூடிய மண்டப அமைப்பில் இருந்த கோயிலைக் கண்டேன்.
உள்ளே அமர்ந்த கோலத்தில் அழகான சிலையைப் பார்த்தேன். மழை வருவதற்காக சிலையின் தலையில் பட்டை மிளகாய் அரைத்து மேலே ஊற்றி, எருக்கம்பூ மாலை போட்டால் ஓரிரு மணி நேரத்தில் மழை வரும் என்றும், முன்னர் இவ்வாறு செய்துவந்ததாகவும், தற்போது மண்டபம் கட்டி விட்டதால் அவ்வாறு செய்யமுடியவில்லை என்றும் கூறினர். திருநாட்டியத்தான்குடி, விக்கிரமங்கலம், கிராந்தி ஆகிய இடங்களில் மழையைத் தொடர்புபடுத்திக் கூறுவதைக் களப்பணியின்போது நான் கேட்டுள்ளேன். கோடைக் காலத்தில் தாய்லாந்திலிருந்து புத்த மதத்தினர் அங்கு வந்து முடி எடுத்து விழா நடத்தி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவர் என்றும் தெரிவித்தனர்.இவ்வாறாக முடியெடுப்பதை புட்பவனம் செல்லும்போது கேள்விப்பட்டேன். புத்தருடன் வழிபாட்டில் நம்பிக்கையைத் தொடர்புபடுத்துவதைக் களப்பணியின்போது பல இடங்களில் காணமுடிந்தது.
களப்பணியில் புத்தமங்கலம் என்ற பெயரில் மூன்று ஊர்களைக் காணமுடிந்தது. இச்சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் 'புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி' என்ற சொற்றொடரைக் காணமுடிந்தது. இப்பெயரில் உள்ள ஊர்களில் இங்கு மட்டுமே புத்தர் சிலை உள்ளது.
ஜூலை 2004
தாய்லாந்து மாணவர்கள் புத்தமங்கலத்தில் உள்ள புத்தர் கோயிலின் மேற்கூரையில் செங்கல் ஓடுகளைப் பதிக்கவுள்ளதாக நாளிதழில் செய்தியை (நாகை அருகே புத்தர் சிலைக்குக் கோயில் கட்டிய தாய்லாந்து மாணவர்கள், தினமணி, 14.7.2004) கோயிலின் படத்துடன் (கீழுள்ள படம்) வெளியானதைக் கண்டேன்.
எனது ஆய்வின்போது மேற்கொண்ட களப்பணியில் புத்தமங்கலம் என்ற பெயரில் மூன்று ஊர்களைக் காணமுடிந்தது. அவை முறையே கும்பகோணம் காரைக்கால் சாலையில் கிள்ளியூர் அருகிலும், கும்பகோணம் சீர்காழி சாலையிலும், கீழ்வேளுர் அருகேயும் உள்ளன. இவ்விடங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் அருகேயுள்ள புத்தமங்கலத்தில் மட்டுமே புத்தர் சிலையைக் காணமுடிந்தது. பௌத்தம் அல்லது புத்தர் தொடர்பான பெயர்களைக் கொண்ட வேறு எந்த ஊரிலும் இவ்வாறாக புத்தர் சிலையைக் காணமுடியவில்லை. அவ்வகையில் புத்தமங்கலம் பெற்றுள்ள சிறப்பை என்னால் உணரமுடிந்தது.
செப்டம்பர் 2021
1999க்குப் பின்னர், முன்னர் பார்த்த அச்சிலை மறுபடியும் காண்பதற்காக களப்பணி மேற்கொண்டேன். தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் வழியாக கீழ்வேளூர் சென்று அங்கு தேரடியை ஒட்டி அமைந்துள்ள சாலையில் புத்தமங்கலத்திற்குச் சென்றேன். சுமார் 2 கி.மீ. தூரம்.முந்தைய களப்பணி நினைவிற்கு வந்தது. அப்போது சிறிது தூரம் சேறும் சகதியுமாக நடந்து போகச் சிரமப்பட்டுச்சென்றேன். இப்போதும் சற்றொப்ப அதே அனுபவம். ஒரு கி.மீ. நடந்து சென்றபின், அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் நடக்க சிரமப்பட்டேன். வழக்கம் போல சிலை உள்ள இடத்தை விசாரித்தபோது அனைவரும் "வெளிநாட்டுக்காரர்கள் வருவார்களே? அந்தப் புத்தர் கோயிலுக்குத்தானே?" என்று கேட்டனர். "போகும் வழியில் நாய்கள் அதிகமாக இருக்கும் கவனமாகச் செல்லுங்கள்" என்று கூறினர்.
1999க்குப் பின்னர், முன்னர் பார்த்த அச்சிலை மறுபடியும் காண்பதற்காக களப்பணி மேற்கொண்டேன். தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் வழியாக கீழ்வேளூர் சென்று அங்கு தேரடியை ஒட்டி அமைந்துள்ள சாலையில் புத்தமங்கலத்திற்குச் சென்றேன். சுமார் 2 கி.மீ. தூரம்.முந்தைய களப்பணி நினைவிற்கு வந்தது. அப்போது சிறிது தூரம் சேறும் சகதியுமாக நடந்து போகச் சிரமப்பட்டுச்சென்றேன். இப்போதும் சற்றொப்ப அதே அனுபவம். ஒரு கி.மீ. நடந்து சென்றபின், அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் நடக்க சிரமப்பட்டேன். வழக்கம் போல சிலை உள்ள இடத்தை விசாரித்தபோது அனைவரும் "வெளிநாட்டுக்காரர்கள் வருவார்களே? அந்தப் புத்தர் கோயிலுக்குத்தானே?" என்று கேட்டனர். "போகும் வழியில் நாய்கள் அதிகமாக இருக்கும் கவனமாகச் செல்லுங்கள்" என்று கூறினர்.
பள்ளிக்காலத்தில் நான் நாய்க்கடியால் அவதிப்பட்டுள்ளேன். ஆதலால் எனக்கு நாயைக் கண்டாலே ஒவ்வாமை. என்னைக் கடித்த நாய் உயிருடனும், எந்த பாதிப்புமின்றி இருந்தால்தான் எனக்கு நல்லதாம், இல்லாவிட்டால் என் உடல் நலன் பாதிக்கும் என்று கூறி என்னுடைய ஆத்தா அந்த நாய் உயிருடன் இருக்கிறதா என்று தினமும் போய்ப் பார்த்துவந்ததெல்லாம் நினைவிற்கு வந்தது. மிகவும் கவனமாகச் சென்றேன். சென்றவழியில் நாய்கள் என்னைப் பார்த்தபோது அதைப் பார்க்காததுபோலவே நடந்து சென்றேன். ஒருவழியாகக் கோயிலை நெருங்கினேன்.
இப்போது பராமரிப்பின்றி அக்கோயில் இருந்ததைக் காணமுடிந்தது. அவ்விடத்திற்குச் சென்று உள்ளே புத்தரைக் காண்பது மிகவும் சிரமமாக இருந்தது. உள்ளே சென்றேன். வழக்கம்போல் புத்தர் அமைதியுடன் இருந்தார். அவரைக் கண்டதும் மன நிறைவு. சோழ நாட்டுப் புத்தர் சிலைகளில் முகம் முற்றிலும் தோய்ந்து அடையாளம் தெரியாமல் இருப்பது இச்சிலைதான். அதற்கு முன்பாக நான் எடுத்துச்சென்றிருந்த துணியை வைத்து சிலையையும், சிலையுள்ள மேடையையும், சிலைக்குப் பின்னும் சுத்தமாகத் துடைத்தேன். அருகிலுள்ள வீட்டில் தண்ணீர் கேட்டேன். ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீரும், ஒரு மக்கும் தந்தார்கள். தண்ணீரால் சிலையைச் சுத்தமாகக் கழுவி, பின்னர் புகைப்படம் எடுத்தேன்.
பீடத்தில் அமர்ந்த நிலை, தியான கோலம், தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், பரந்த மார்பு, திண்ணிய தோள்கள், மார்பிலும் இடுப்பிலும் ஆடை, நெற்றியில் திலகக்குறி, வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி ஆகியவற்றுடன் அச்சிலை இருந்தது.
சிலையைப் பார்க்கவும், சுத்தம் செய்யவும் உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி கூறினேன். இக்கோயில் முன்பிருந்த பொலிவை மறுபடியும் பெற வேண்டும் என்ற விழைவுடன் அங்கிருந்து கிளம்பினேன், அஸ்தமனமாகும் சூரியனை ரசித்துக்கொண்டே.
2023
இந்தப் புத்தர் சிலை என்னுடைய நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளிலும் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2022, ப.105), (Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2023, p.60) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 2024
இந்தப் புத்தரைப் பற்றிய தி இந்து நாளிதழில் வெளியான செய்தியில் என் மேற்கோள் வெளியானது.
ஜனவரி 2025
இந்தக் கட்டுரை, சற்று மேம்படுத்தப்பட்ட நிலையில், மும்பையிலிருந்து வெளிவருகின்ற கால நிர்ணய் 2025இல் வெளியாகியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
24.12.2025இல் மேம்படுத்தப்பட்டது.
















மழை வருவதற்காக சிலையின் தலையில் பட்டை மிளகாய் அரைத்து மேலே ஊற்றி, எருக்கம்பூ மாலை போட்டால் ஓரிரு மணி நேரத்தில் மழை வரும்
ReplyDeleteமக்களின் நம்பிக்கைகள்தான் எத்தனை விதம்.தங்களின் பணி தொடரட்டும்.நன்றி
பணிசிறக்க வாழ்த்துக்கள் அய்யா,
ReplyDeleteசரவணா இரா