பௌத்த சுவட்டைத் தேடி : திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது திருப்பராய்த்துறையில் முதன்முதலாகக் காணப்படுகின்ற புத்தர் சிலையாகும். திருப்பராய்த்துறை புத்தர் புகைப்படம் நன்றி : பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், பாண்டிச்சேரி தகவல் உதவி : திரு க.ரவிக்குமார் ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் உடன் பா.ஜம்புலிங்கம் புத்தர், திருப்பராய்த்துறை, கி.பி.10ஆம் நூற்றாண்டு, என்ற குறிப்புடன் அந்த சிலை உள்ளது. திருப்பராய்த்துறை புத்தர் சிலைக்குப் பின்புறம் பிரபை உள்ளது. மார்பில் ஆடையும், தலையில் தீச்சுடரும் உள்ளன. முகம் தெளிவாகத் தெரியவில்லை. வழக்கமாக புத்தர் சிலைக்குள்ள பிற கூறுகள் இதில் உள்ளன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பௌத்த எச்சங்களின் சமூக மற்றும் கலாச்சார மதிப்பு (Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district), என்ற தலைப்பில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகின்ற ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் (8344856826) திருச்சி அருகேயுள்ள திருப்பராய்த்துறையைச் சேர்ந்த புத்தர் சிலையைப் பற்றி