Posts

Showing posts from February, 2017

தமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை

Image
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ,  முனைவர் பட்ட ஆய்வு,  களப்பணி,  எழுத்து  உள்ளிட்டவற்றை மேற்கோளாகக் கொண்டு புதிய தலைமுறை இதழில் வெளியான தமிழகத்தில் புத்தர் இருக்கிறார் என்ற தலைப்பிலான கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.  வெளியிட்ட புதிய தலைமுறை இதழுக்கும், கட்டுரையாளர் திரு சு. வீரமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பெரண்டாக்கோட்டை என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சாம்பான் என்ற கடவுளுக்கு வழிபாடு நடத்திவருகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். நாம் அந்த கிராமத்திற்குச் சென்று சாம்பான் வழிபாடு நடைபெறும் இடத்தில்  உள்ள சிலையைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் சாம்பான் என்று சொல்லி வழிபடும் சிலை புத்தரின் சிலை. இந்த குக்கிராமத்தின் உள்ளே புதர்கள் மண்டிய அடர்ந்த காடு போன்ற திடலில் மார்பு மற்றும் கழுத்துப்பகுதிகள் உள்ளே புதைந்துள்ள நிலையில் தலையை மட்டும் வெளியே காட்டி மெல்லிய புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார் புத்தர். இந்த புத்தர் சிலை சாம்பான் என்ற பெயரில் காலம்கால