சமண சுவட்டைத் தேடி : செங்கங்காடு

சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ ஐந்தாண்டு நிறைவு
மகாமகம் காணவுள்ள 2016இல் சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது முதல் வலைப்பூ ஐந்தாண்டு நிறைவு பெறுவதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். என் எழுத்துக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். களப்பணியைத் தொடர்வோம். 

1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியின்போது புத்தர் சிலைகளை மட்டுமே பார்த்துவந்தேன். திரு தில்லை கோவிந்தராஜன் உள்ளிட்ட பல நண்பர்கள் சமண தீர்த்தங்கரர் சிலைகளின் கூறுகளை எடுத்துக் கூறி அவற்றையும் பார்க்கும்படிக் கூறியதன் அடிப்படையில் புதிய சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன். இவ்வகையில் புத்தருடன் மகாவீரரும் சேர்ந்துகொண்டார். இவ்வாறான வகையில் 29 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் களப்பணியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. 1999இல் விக்ரமத்தில் ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன்.  அச்சிலையைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் செங்கங்காடு என்னுமிடத்தில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.  அந்த சமணரைக் காண செங்கங்காடு செல்வோம். 

13 பிப்ரவரி 1999
விக்ரமத்தில் உள்ள புத்தர் சிலையைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் வேறு ஏதாவது புத்தர் சிலை இருக்கிறதா என்று விசாரித்துக்கொண்டே வந்தேன். அப்போது செங்கங்காடு என்னும் இடத்தில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். விக்ரமத்திலிருந்து செங்கங்காடு செல்வதற்காக விசாரிக்கும்போது ஒவ்வொருவரும் பல வழிகளைக் கூறினர். இறுதியாக பட்டுக்கோட்டை-வேதாரண்யம் சாலையில் முத்துப்பேட்டை தர்கா, தில்லைவளாகம் வழியாகச் செல்லும் பேருந்தில் அங்கு செல்லலாம் என்பதை அறிந்தேன். பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போதே சிலையைப் பற்றி கேட்டேன். பத்தர் கடை நிறுத்தத்தில் இறங்கும்படி கூறினர். அங்கு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எந்தவித சிலையும் காணவில்லை. தொடர்ந்து சுமார் மூன்று கி.மீ நடந்தேன். விசாரித்துச் சென்று ஒரு சமணர் சிலையைக் கண்டேன். அங்குள்ளவர்கள் அந்த சிலை சமணர் என்றும், ஆனால் புத்தர் என்றே கூறிவருவதாகவும் கூறினர். விழா நாள்களில் சூடம் கொளுத்துவதாகவும், சாம்பிராணி போடுவதாகவும், அடிக்கடி எண்ணெய் சேவிப்பதாகவும் (போட்டு  மெழுகுவதாகவும்)  கூறினர். ஒரு புத்தரைக் காணவந்து புதிதாக சமண தீர்த்தங்கரரைக் கண்டுபிடித்தது மறக்கமுடியாத அனுபவமாகும்.



சென்னை அருங்காட்சியக நூலில் (Iconography of the Jain Images in the Districts of Tamil Nadu, 2002) என்னால் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகளில் நான்கு சிலைகளைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.  அவற்றில் செங்கங்காடு சமணர் சிலையும் ஒன்றாகும்.  


"Dr B.Jambulingam, a research scholar of Thanjavur Tamil University in his survey for Buddhist antiquities in Thanjavur region came across a few Jain sculptures scattered in different desolate spots. He has identified four seated Tirthankara stone sculptures at places like Kariyankudi near Taplampuliyur in Tiruvarur Taluk, Tiruvarur District (Sl.No.30), Kottaimedu near Alangudipatti of Pudukottai district (Sl.No.31), on the back side of the Moola Anumar temple in Thanjavur (Sl.No.32) and in Senkadu of Tiruthuraipooondi Taluk of erstwhile Thanjavur district........."


3 நவம்பர் 2011
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தார் மேற்கொள்ளும் சமணத்திட்டத்திற்காக முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினர் அழைத்தபோது அவர்களுடன் நானும், திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கச் சென்றபோது மறுபடியும் செங்கங்காடு சென்றோம். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், 1999இல் நான் சமண தீர்த்தங்கரர் சிலையைப் பார்க்க வந்ததை நினைவுகூர்ந்தார் திரு வி.என்.கோவிந்தசாமி வைத்தியர்.  மறுபடியும் அந்த சமணரைப் பார்த்துவிட்டு, புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். விக்ரமம் என்னுமிடத்தில் புத்தரைப் பார்க்கச் சென்றபோது ஒரு சமணர் சிலையைப் பார்த்த அனுபவம் வித்தியாசமாக அமைந்தது.

நன்றி
1999 மற்றும் 2011 களப்பணிகளின்போது  உதவிய திரு வி.என்.கோவிந்தசாமி வைத்தியர் 
---------------------------------------------------------------
வரலாற்றறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி மற்றும் வலைப்பதிவர் திரு கரந்தை ஜெயக்குமார் ஆகியோருடன் இரண்டாவது முறையாக (முதலில் 1999இல் தனியாகச் சென்றேன்) விக்ரமம் புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றபோது பெற்ற அனுபவம் பற்றி நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் தன் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு என் நன்றி.
---------------------------------------------------------------

Comments

  1. முனைவர் அவர்களே, உங்களது தனிஒருவர் பணி மகத்தானது. உங்களது வலைத்தளத்தை முதன்முதல் கண்டவுடன், நீங்கள் ஒரு புத்திஸ்ட் என்றுதான் எண்ணினேன். அப்புறம் உங்கள் பழைய பதிவுகள், புதிய பதிவுகள் , படங்கள் அனைத்தையும் பார்த்த பின்னரே நீங்கள் சமயப்பொறை மிக்க சைவ நம்பிக்கையாளர் என்பதனைத் தெரிந்து கொண்டேன். ஐந்தாண்டு நிறைவு பெற்ற உங்களது ’சோழநாட்டில் பௌத்தம்” வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள்.
    எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. happy new year :) and wishes to the fifth year of blogging about bhuddism !!! congrats sir. ( tamil font illa :)

    ReplyDelete
  3. உங்கள் பனி தொடரட்டும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete
  4. வணக்கம் முனைவரே... தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ஐந்தாம் ஆண்டை நிறைவு செய்தமைக்கு எமது வாழ்த்துகள்
    தொடர்ந்து பல நல்ல விடயங்களை எங்களுக்கு அளிப்பீர்கள் என ஆவலுடன் நானும்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  5. தனி ஒருவராக நீங்கள் சாதித்திருக்கும் பணிகள் அற்புதம். பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா! வரும் தலைமுறையினரும் உங்களது இந்த வலைத்தலத்தினால் பயன் பெறுவார்கள். தமிழ் உலகம் உள்ளளவும் உங்கள் பணிகளும் பேசப்படும்.
    உங்கள் வலைத்தளத்திற்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  6. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. உங்கள் பணி அளப்பரியது.க்ஷ் பாராட்ட வார்த்தைகள் இல்லை ,, பணிமேல்ம் தொடர வாழ்த்துக்கள் ஐயா ..

    ReplyDelete
  8. அருமையான பணி ஐயா...
    தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  9. பணி தொடரட்டும்
    உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!
    (வேதாவின் வலை)

    ReplyDelete
  10. வணக்கம்.

    தங்களது சீரிய பணி மென்மேலும் சிறக்கட்டும்.

    மறைந்து கிடக்கும் இதுபோன்ற வரலாற்றுக் கருவூலங்கள் தங்களால் இவ்வாண்டும் வெளிப்படுத்தப்படட்டும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் என் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  11. தங்களின் பணி தொடர்வதற்கு இறைவன் நலம் அருள்வானாக..

    தங்களனைவருக்கும் -
    அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
    எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்!..

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  13. செயற்கரிய செயல்களை செய்து சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளீர்கள்.எஸ்.ரா சொன்னது போல நீங்கள் வேறு நாட்டில் இருந்திருந்தால் உயரிய இடம் கிடைத்திருக்கும். அரசு உங்களை கௌரவித்து உங்கள் ஆராய்ச்சிக்கு உதவ வேண்டும் . இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா!

    தங்களது தேடலும் பணியும் என்னைச் சிலிர்க்க வைக்கின்றன.
    எங்களுக்கே தெரியாத விடயங்கள் பல உங்களின் பதிவுகளால் புலனாகிறது! வரும் சந்ததியினருக்கு வரலாற்றினை எளிதாக அறிந்து கொள்ள இவை உதவும் என்பதில் மனம் மிகவே மகிழ்கின்றேன்!
    தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்!..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    என் உளங்கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. அருமை, வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  17. வலையுலகில் மட்டுமல்ல ,வரலாற்றிலும் இடம் பிடித்து விட்டீர்கள் ,வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  18. வழி வழியாய் மனிதனின் எண்ணங்களும் செயல்களும் மாற்றத்தை நோக்கியே சென்றுக் கொண்டிருக்கும்.அவை கடந்து வந்த பாதையினையும் அனுபவங்களையும் ஏற்றுக் கொண்டு புது வாழ்க்கையை தொடங்கும் .நீங்கள் உங்கள் பணியினை மிக்க மகிழ் வோடும் ஆராய்ச்சிகளுடன் செய்கீறீர்கள்.மிக்க நன்று.

    ReplyDelete
  19. 5--ஆம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள்!
    புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. வணக்கம். பாராட்டுக்கள். தமிழக வரலாற்றில் இடம் பெற வேண்டிய நிகழ்வுகளை மீண்டு கொண்டுவந்ததற்கு நன்றி. மேலும் உங்கள் பணி சிறக்க இறைவனை பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா!
    உங்கள் சிறப்பான அரும்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! வரலாற்றுக் கருவூலங்களைத் தேடிக் கண்டுபிடித்து பதியும் உங்கள் பணி அளப்பரியது! பல நன்றிகள்! மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க நல்ல உடல்நலனும் நேரமும் வாய்க்க இறைவனை வேண்டுகிறேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete

Post a Comment