Posts

Showing posts from 2016

வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைத்தளம்

Image
வலைப்பதிவர் திருமதி தேனம்மை லெஷ்மணன் அவரது தளத்தின் சாட்டர்டே போஸ்ட் பதிவிற்காக என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். என் பௌத்த ஆய்வினை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையை அவரது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். அவர் என்னை அறிமுகப்படுத்திய விதம் என்னை நெகிழவைத்துவிட்டது. என் கட்டுரை வெளியான அவரது தளத்தின் பக்கத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன்.  எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.  இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவ

பெரம்பலூர் திரு இரத்தினம் ஜெயபால் வருகை

Image
ஆகஸ்டு 2016இல் ஒரு நாள். பெரம்பலூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. திரு இரத்தினம் ஜெயபால் (மின்னஞ்சல்  jayabalrathinam@gmail.com ) என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். என் பௌத்த ஆய்வு தொடர்பான வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வருவதாகவும், தான் எழுதவுள்ள நூல் தொடர்பாக என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.  பிற நாள்களில் அலுவலகப்பணி என்ற நிலையில் அரசு விடுமுறை நாள்களில் மட்டுமே அறிஞர்களையும், நண்பர்களையும் ஆய்வு தொடர்பாக சந்தித்து வரும் நிலையில் வாய்ப்பான ஒரு விடுமுறை நாளில் வரும்படி கூறினேன்.  ஓய்வு நேரம் ஆய்வு நேரமே. திரு இரத்தினம் ஜெயபால் உடன் ஜம்புலிங்கம் (இல்ல நூலகத்தில்) இருவருக்கும் வசதியான 15 ஆகஸ்டு 2016 அன்று வருவதாகக் கூறி, அன்று வந்திருந்தார். பேரூராட்சியில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவர் தொல் பழங்காலம் முதல் தற்காலம் வரை பெரம்பலூர் வட்டார வரலாறு தொடர்பாக நூல் எழுதவுள்ளதாகவும், பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செய்திளைப் பற்றி அறிய விரும்புவதாகவும் தன் ஆவலை வெளிப்படுத்தினார். பெரம்பலூரைத் தலைநகராகக் கொண்டு அமைந்து

பௌத்த சுவட்டைத் தேடி : அரியலூர்

Image
10 பிப்ரவரி 1997 சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்வில் திருச்சி மாவட்டமும் அடங்கும் என்ற நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஊர்களுக்கு களப்பணி செல்லத் திட்டமிட்டேன். தஞ்சாவூரில் பல இடங்களைச் சுற்றியதால் ஓரளவு என்னால் திட்டமிட முடிந்தது. திருச்சியில் பார்க்வேண்டியவை மற்றும் பார்க்க வேண்டியவர்கள் என்ற நிலையில் திட்டமிட்டு தொல்லியல் துறை பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் அருங்காட்சியகம் சென்றேன்.  அப்போது திருச்சி அருங்காட்சியக் காப்பாளர் திரு ராஜ்மோகன் அவர்களுடன் விவாதித்ததில் எனக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று, அரியலூர் கோட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரு புத்தர் சிலை என்பதுதான். நான் களப்பணி சென்ற காலத்தில் அரியலூர் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. ஆய்வின் களம் என்ற நிலையில் அரியலூர் செல்லும் நாளுக்காகக் காத்திருந்தேன்.   டி.என்.வாசுதேவராவ் (1979) ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாகக் குறிப்பிட்ட இடங்களில் அரியலூர் புத்தரும் ஒன்று. பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (F

பௌத்த சுவட்டைத் தேடி : சுத்தமல்லி

Image
21 மற்றும் 23 ஆகஸ்டு 1999 பௌத்த ஆய்வு தொடர்பாக களப்பணி மேற்கொண்டபோது தமிழகத்திலுள்ள பல  அருங்காட்சியகங்களுக்குச் சென்று சோழ நாட்டு புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கச் சென்றேன். களத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவத்திலிருந்து வித்தியாசமானது அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவம். அவ்வகையில் சுத்தமல்லி சிலையைக் கண்டேன். இந்த சுத்தமல்லி எந்த மாவட்டத்தில் தற்பொழுது உள்ளது என்ற ஆர்வத்தை உண்டாக்கியது இந்தப் பயணம். மற்ற புத்தர் சிலைகளிலிருந்து சற்று வித்தியாசமான நிலையில் இந்த புத்தர். வாருங்கள் பார்ப்போம்.  சுத்தமல்லி புத்தர், அரசு அருங்காட்சியகம், சென்னை (புகைப்படம் : பா.ஜம்புலிங்கம், 1999) சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் சென்றபோது சோழ நாடு தொடர்பான மூன்று புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது.  அவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவலஞ்சுழி (நின்ற நிலை புத்தர்), எரையூர் (அமர்ந்த நிலை) மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுத்தமல்லி (அமர்ந்த நிலை) என்ற குறிப்புடன் இருந்தன. முதன்முதலாக நின்ற நிலையிலான புத்தரின் கற்சிலையை அ

புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள்

Image
கடந்த பதிவில் களப்பணி சென்றுவந்த நிலையில் தற்போது பௌத்தக் கொள்கைகள் தொடர்பான ஒரு நூலைப் பார்ப்போம். ஆய்வில் சேர்ந்த காலகட்டத்தில் (1993) நான் படித்த நூல்களில் ஒன்று பௌத்த அடிப்படைக் கொள்கைகளைக் கொண்ட புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் என்னும் நூல். பௌத்தக் கொள்கைகளை மிகவும் எளிதாக இந்நூல் முன்வைக்கிறது. புத்தரும் பவுத்தமும், புத்தரின் வாழ்க்கை, தம்மம், சில அடிப்படை போதனைகள், நான்கு உன்னத வாய்மைகள், உன்னத எண்வழிப்பாதை, மனித ஆளுமையின் பகுப்பாய்வு, இருப்பின் உண்மை நிலை, மறுபிறப்பு, தியானம், நிப்பாணம், அறவோர், சங்கம் போன்றவை உள்ளிட்ட 21 தலைப்புகளைக் கொண்டமைந்துள்ளது.  இந்நூலில் காணப்படும் சில கருத்துகளைக் காண்போம்.      புத்தரின் போதனைகள் கற்கத்தக்கன. பயிலத்தக்கன. உணரத்தக்கன. நடைமுறைப்படுத்துதலும், உணர்தலும் வலியுறுத்தப்படுகின்றன. ஏனெனில் வை உடனுக்குடன் பயனளிக்கின்றன. (ப.8) ஒருவர் ஒரு கயிற்கைக் கண்டு பாம்பென எண்ணிக்கொண்டால் அங்கே அச்சம், சலனம், கவலை, துன்பம் அனைத்தும் தோன்றுகிறது. இருந்தாலும், அது உண்மையில் ஒரு துண்டுக்கயிறே என்று அவர் அறியமுற்படும்போது அச்சம், சலனம், கவலை, துன

பௌத்த சுவட்டைத் தேடி : தஞ்சாவூர் கீழவாசல்

Image
1999இல் புதுச்சேரி  பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் (French Institute of Pondicherry)  புத்தர் சிலை தொகுப்பில் இருந்த புகைப்படங்களில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள வீரபத்திரர் சிற்பத்தைக் கண்டபோது, அது புத்தர் அல்ல என்றதும், நான் தெரிவித்ததன் அடிப்படையில் அந்நிறுவனத்தார் உரிய திருத்தத்தினை தம் தொகுப்பில் மேற்கொண்டதும், அந்த சிலையைப் பார்க்க சுமார் 20 ஆண்டுகள் ஆனதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். 1999இல் தொடங்கிய தேடல் சூன் 2016இல்  நிசும்பசூதனி கோயிலின் குடமுழுக்கின்போது  நிறைவேறியது.  சற்றே பின்னோக்கிச் செல்வோமா? பிப்ரவரி 1999  முதன்முதலாக என் ஆய்வு தொடர்பாக புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களைத் திரட்ட புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றபோது அங்குள்ள சுமார் 50க்கு மேற்பட்ட புத்தர் சிற்பங்கள் தொடர்பான பதிவுகளைக் காணமுடிந்தது. அப்பதிவுகளில் (எண்.5671.7) ஒரு சிலை கீழவாசல், தஞ்சாவூர் என்ற குறிப்புடன் வீரபத்திரர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புத்தர் சிலைகளைப் பற்றிய தொகுப்பில் இவ்வாறான புகைப்படம் இருந்தது வித்தியாசமாக இருந்தது.  பாண்டிச்சேரி களப்பணி முடிந்து தஞ்சாவூர் திரும