Posts

Showing posts from July, 2015

புத்தரைத் தேடி : தினமணி

Image
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான  ஆய்வு தொடர்பாக 2008 தொடங்கி கீழ்க்கண்ட இதழ்களில் எனது பேட்டிகள் வெளியாகியுள்ளன. தினமணி பேட்டியை இப்பதிவிலும், பிற பேட்டிகளை கீழ்க்கண்ட இணைப்புகளிலும் காணலாம். வெளியிட்ட இதழ்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ------------------------------------------------------------------------------------------- புத்தரைத்தேடி (எனது முதல் பேட்டி) 6.1.2008 நாளிட்ட தினமணி கதிர் இணைப்பு  ------------------------------------------------------------------------------------------- எந்தக் காரியத்தையும் ஆதாய நோக்கத்தோடே பார்த்துப் பழகிய நம் சமூகத்தில் ஓர் ஆய்வாளராக இருப்பது பெரிய பாடுதான். அதுவும் வயல்களிலும், மரத்தடிகளிலும், தலை தனியாக முண்டம் தனியாக அடையாளம் சிதைந்து சிதைந்து கிடக்கும் சிலைகளைப் பற்றியும் அதை ஆய்வு செய்து கொண்டிருப்பவரைப் பற்றியும் அரசுக்கோ சமூகத்துக்கோ என்ன அக்கரை இருக்கிறது;  ஆதாயம் இருக்கிறது? ! தமிழ்நாட்டில் பழங்கால சிலைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. யாரோ ஓர் ஆய்வாளர் சிலையைக் கண்டறிகிறார் ; குறிப்பெடுக்கிறார். நம் ஆள்கள் அட அப்படியா! எ