Posts

Showing posts from April, 2015

பௌத்த சுவட்டைத் தேடி : நாட்டாணி

Image
அய்யம்பேட்டை அருகில் மணலூரில்   கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றி  எழுதியிருந்ததைக் கண்ட தஞ்சாவூர் அருகேயுள்ள நாட்டாணி கிராமத்தைச் சேர்ந்த  விஜயகுமார் என்பவர் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி. மாறனிடம் தன் ஊரில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறியிருந்தார். அச்சிலையைக் காண்பதற்கான நாளை எதிர்பார்த்தோம். பிப்ரவரி 14, 2015 (சனிக்கிழமை) காலை 10.00 தஞ்சாவூரிலிருந்து நானும் மணி மாறனும் நாட்டாணி சென்றோம். செல்லும்போதே மனதுள் ஒரு எண்ணம். சுமார் கால் நூற்றாண்டாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ஆய்வில் இவ்வாறாக ஒரு புத்தர் சிலையைப் பற்றிய நாளிதழ் செய்தி வந்த ஓரிரு நாள்களிலேயே மற்றொரு சிலையைப் பார்க்கச் செலவது இதுவே முதல் முறை. நாட்டாணியை அடைந்ததும் நண்பர் விஜயகுமாரைத் தொலைபேசியில் மணி.மாறன் தொடர்புகொண்டார். அவர் சிறிது நேரத்தில் வருவதாகக் கூறினார். அவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நாட்டாணியைச் சேர்ந்த நண்பர்கள் வந்தனர்.  அவர்களுடன் சிலை இருக்கும் இடத்தினைப் பற்றி விசாரித்தோம். பேசிக்கொண்டே, சிலையைத் தேட ஆரம்பித்தோம். நாங்கள் செல்லும் பாதை முழுக்க முழுக்க முட்கள் அட